Monday, November 30, 2009

இடையில் நெளியும் உயிரினமான விலாங்கு


அபி அப்பா பற்றி ஒரு பதிவு போட்டிருந்தேன். அதில் சுவையான விடயம் என்னவென்றால் ஒரு பிளஸ்ஸும் ஒரு மைனஸும் மட்டுமே விழுந்திருந்தது. அந்த பிளஸ் நான் போட்டதே.. என் பதிவுகளுக்கு நானே பிளஸ் போடவில்லையென்றால் என் பதிவுகளை மெச்சிக் கொள்வது எவ்வாறு? அதே நேரம் அப்பதிவிற்கு விழுந்திருந்த மைனஸ் எப்படி விழுந்திருந்தது ? யார் போட்டது என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. இப்படியொரு "மில்லியன் டாலர்" நிகழ்ச்சி நடக்கப்போக இந்தச் சொற்றொடரும் வாழ்க்கையில் வியாதியாகத் தொடர்கின்றது. இந்தியில் நடக்கும் குரோர் பதியைப் போல. "ஸ்லாம் டாக் மில்லியனருக்கு" கருவைக் கொடுத்தது போல.

மைனஸ் புள்ளி அபியின் அப்பாவால் விழுந்திருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் என்று வாதாட இந்தப் பதிவுலகத்தில் அதிகம் பேர் முன்வரக்கூடும். நான் எப்போதும் இப்படியான சாத்தியங்களை கருத்திலேயே எடுப்பதில்லை. ஏனென்றால் என் மனதில் உள்ள கருத்துக் கந்தசாமி போன்ற பிம்பங்கள் உடைந்து போவதில் எனக்கு விருப்பம் இருப்பதில்லை. உப்புச் சப்பில்லாமல் உடைந்து போகும் சிறு பிள்ளைத்தனமான விவாதங்களிலும் அதிகம் நாட்டம் கிடையாது.

உண்மையில் இங்கு அபி அப்பாவிற்கு புள்ளி போட நினைப்பதை விட ஒரு புள்ளியில் உட்கார்ந்திருந்து சங்கடப்படுதலே அதிகம் சாத்தியமாகி இருக்கும். ஏனெனில் அவரின் இருப்பு பற்றி அவர் ஒரு இருண்ட குகையில் இருந்தே நீச்சலடிக்கும் குணம்சத்துடன் இருந்ததாக அவரின் அசைவுகள் நிரூபித்திருந்தது. இந்தப் பரந்த உலகில் அவரின் குணாம்சங்கள் கருப்புக் கண்ணாடி கழட்டாத கருணாநிதியின் மொக்கையில் ஊறிய திருட்டுக் குணத்தின் அடியொற்றியதாகவே வெளிப்பட்டிருந்தது.

கட்சி அரசியல் பிச்சை அரசியல் என்பதைப் போதனயாகவும் வாழ்வாதாரமாகும் கொண்டிருந்த அவர் போலொத்தவர்கள் அவ்வாறு சிந்திப்பது அவர்களின் தவறல்ல. ஒரு புரட்சி வாதியாக அவரை நினைத்துப் பார்ப்பதே பெரும் முட்டாள்தனம். அப்படிப்பட்டவர் சைபர் கிரைம் , தீபா போன்ற பெண்களுக்கெதிரான உட்டாலக்கடி போன்ற வில்வித்தைகளைக் கட்டவிழ்த்து விட்டதையும் சென்ஷி போன்றவர்கள் உதிரம் கொதித்து துள்ளிக்குதித்ததையும் புறங்கையால் ஒதுக்கித் தள்ள வேண்டியது தான்.

ஆனால் குசும்பன் போன்ற இடையில் நெளியும் உயிரினமான விலாங்கு வகையறாக்கள் அதற்கான தலையீடுகளில் உத்தரவாதத்தை நிறைவேற்றாதது இன்னும் மனதைக் குடைகின்றது.

தன்னால் முடியாத விடயங்களில் தடக்கி விழும் இக்குணாம்சத்துடன் இயங்கும் இவர்கள் இவ்வகையாக ஒரு மைனஸ் போடுவது எதிர்பார்க்கக் கூடியதே.

இவர்கள் எதைப் புடுங்கி சாதிக்கப்போகின்றார்கள் என்பதை அவர்களே விரைவில் தெளிவு படுத்துவார்கள். இவ்வகையான குசும்புகள் சாரு நிவேதிதாவின் இலக்கிய மேம்பாட்டுக்காவலர்களாகக் காட்டிக்கொண்டு சீரழிக்கும் போக்கிற்குச் சற்றும் குறைந்ததல்ல. அடிப்படையில் ஒரு ஆரோக்கியமான விவாதக் களமாகக் கூட "புளக்கியம்" இருப்பதை அனுமதிக்க மறுக்கின்றார்கள் என்பதே பெரும் துயரமாகும்..

Sunday, November 29, 2009

கண்ணைக் கசக்கிக் கொண்டிருக்கும் அபி அப்பா


தி.மு.க வின் வலக்கை, இடக்கை, உலக்கை இவர் என்பது உலகப்பதிவர்கள் அனைவரும் அறிந்ததே. பதிவுலக மகளிரைக் கூட ஒரு சந்தர்ப்பத்தில் கருப்புக்கண்ணாடி கருணாநிதியின் கட்சிச் செல்வாக்கைக் காட்டி மிரட்டித்திரிந்த்வர் இவர் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். சைபர் கிரைம் பிராஞ்ச் போன்ற சதுர் கச்சேரிகள் பல காட்டி பெரிய அளவில் "படங்காட்டியவர்" இவர் என்பது பதிவுலகம் அறிந்ததே.

எண்ணெய்க்குடா நாட்டில் பொட்டி தட்டும் இவர் தமிழ் இலக்கணவாதியின் பெயரையும் கொண்டவர். ஷென்ஷி போன்ற ஒரு சில எதிரிகளையும் குசும்பன் போன்ற ஒரு சில காமடியன்களையும் எப்போதும் அருகிருத்திக்கொண்டிருக்கும் இவர் எல்லோருக்கும் நல்லவரே.

இப்போது மாயாவரத்தில் டேரா அடித்திருக்கும் இவரும் தி. மு.க வில் எழுந்திருக்கும் புகைச்சலில் அகப்பட்டு கண்ணைக் கசக்கிக் கொண்டிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகின்றது.

ஆளைப்பார்த்து வயதைக் கணிக்க முடியாத மார்க்கண்டேயத் தோற்றமும் டூ இன் வண் கண்ணாடியும் அணிந்திருக்கும் இவரும் இந்தச் சுழலில் அகப்பட்டிருப்பாரா? என்று உறுதிபடக் கூற முடியாதிருக்கின்றது. (வயது தெரியாததால் வந்த வினை.. குட்டி குட்டியாக இருக்கும் அவர் பிள்ளைகளும் இவரை அந்த அளவிற்கு சீனியராக்க முடியாது தடுக்கின்றனர்)

சரி இனி நியூஸ்: "தலைமுறை, தலைமுறையாக தி.மு.க.,வில் இருக்கிறோம். கட்சிக்காக பலமுறை ஜெயிலுக்கும் சென்றுள்ளோம். ஆனால், எங்களை யாரும் வந்து பார்க்காமல் அலட்சியப்படுத்துகின்றனர் புதிதாக பொறுப்புக்கு வந்துள்ளவர்கள்' என வெளிப்படையாகவே புலம்புகின்றனர் "சீனியர்' பிரமுகர்கள்.


இது குறித்து, மூத்த தி.மு.க., பிரமுகர் ஒருவர் கூறியதாவது:நான், 30 வருடங்களாக கட்சியில் உள்ளேன். கிளை, ஒன்றிய, மாவட்ட பொறுப்புகள் பல வகித்தவன். கட்சி அறிவித்த போராட்டங்களில் கலந்து கொண்டு 39 முறை ஜெயிலுக்கு சென்று வந்தேன். இப்போதும் முக்கிய பொறுப்பில் தான் உள்ளேன். ஆனால், தேர்தல் தேதி அறிவித்தும், இதுவரை யாரும் என்னை வந்து சந்திக்கவில்லை. என்னைப் போன்ற சீனியர்களிடமும், ஆதரவு கேட்டு வரவில்லை.நாங்கள் கட்சிக்காக உழைத்து, கட்சி வளர்க்க பாடுபட்டோம். சாகும் வரை கட்சியில் தான் இருப்போம். புதிதாக பொறுப்பில் வந்தவர்கள் பற்றி தலைமைக்குத் இது தெரியுமா என்பது தெரியவில்லை. தொகுதியில் மட்டுமல்ல, மாவட்டம் முழுவதுமே இதே நிலை தான். அமைச்சருக்கு இது தெரிந்தும், அவர்களுக்கு "சப்போர்ட்' செய்வதால் எங்களுக்கு தொடர்ந்து அவமானமே ஏற்படுகிறது.இவ்வாறு அந்த பிரமுகர் வருத்தத்துடன் கூறினார்.



அபி அப்பாவின் மனதைத் திருடிய "கள்ளி"


குறிப்பு:1. தறுதலை தலைவனைப் பின்பற்றும் எவருக்கும் வாய்ப்பது தான் இந்த இழி நிலை என்று நீங்கள் புலம்புவது சத்தியமாக எனக்குக் கேட்கவில்லை.

2. கலியாணச் சாப்பாட்டைக் காட்டி கடுப்பேற்றியதற்காக ஒரு "ப(லி)சி வாங்கல்

குமுதமும் ஒரு " ஜோக்கரும்"




குமுதம் ஒரு மஞ்சள் பத்திரிகை என்பதைப் படித்து இரசித்தவர்கள் அறிவார்கள். அவர்களின் இலக்கிய சேவையே பைசா சம்பாதிப்பதையே ஆணி வேராகக் கொண்டு இயங்குவதை அனைவரும் அறிவோம். பிரியாமணியின் பிராவின் பட்டையை போக்கஸ் பண்ணிப் போடுவதால் எகிறப்போகும் விற்பனையைப் பற்றி அவர்கள் நன்கு அறிந்தே வைத்திருக்கின்றார்கள்.

வாசிப்பு என்பது இலக்கியம் சார்ந்ததாகவே எப்போது இருக்க வேண்டும் என்று ஏதாவது நிபந்தனை இருக்கின்றதா? என்ன? அப்படியே ஒரு நிபந்தனை இருந்தால் வாசிப்பவர்கள் அரைவாசிப்பேர் காணாமல் போய் கடற்கரை ஓரத்தில் கடலை போட்டுக்கொண்டிருப்பார்கள். இணையத்தில் ப்ளாக்குகளில் எல்லாம் எழுதிக் கொண்டிருப்போர் எல்லாம் என்ன? இலக்கியத்தைக் காக்க வென்று சபதம் போட்டு வந்தவர்களா என்ன?

குசும்பு ,மொக்கை,சக்கை என்று படு ஜோராக படங்காட்டிக் கொண்டிருப்பவர்களிடமெல்லாம் இலக்கியம் வீசை என்ன விலை என்று கேட்டுப் பாருங்கள். ரூபாய்க்கு மூன்று என்று சொன்னாலும் சொல்லுவார்கள். இவர்களெல்லாம் ஏதோ தங்களால் முடிந்த எலக்கிய சேவை செய்ய வந்தவர்கள் என்பதே பெரிய விசயம். இப்படிப்பட்டவர்களுக்கு அறிவும் அனுபவமும் கொடுக்கவென்றே முன்னோடியாக வெளிவரும் பத்திரிகைகளே குமுதமும் ஆனந்த விகடனும்.

இதை அறிந்தவர்களே அனுபவப்பட்டவர்களே தங்கள் பதிவுகள் குமுதம் ஆனந்த விகடனில் வந்து விட்டால் நாலு கட்டம் கலரில் கட்டி "நன்றி" அறிக்கை விடுகின்றார்கள். அவர்களின் பிறவிப்பயனே ஈடேறியதாகக் கொண்டாடுவது இதனால் தான். அவர்களின் இலக்கும் இலக்கிய சேவையும் இதக் குறித்தே இருப்பதால் அவர்களுக்கு உண்டாகும் சந்தோஷத்தை தட்டிப் பறிக்க நாங்கள் யார்?



இந்தப் பத்திரிகைகளில் கூட வரமுடியாத எழுத்துக்களின் சொந்தக் காரன் சாரு நிவேதிதாவிற்கு "இந்தப் பழம் புளிக்கும்" நரியின் நிலை தான். யாரோ தன்னை "ஜோக்கர்" என்று எழுதி விட்டார்களாம். தமிழ் வாசிப்பாளர்களின் உலகம் அப்படித்தானே கட்டம் கட்டி வைத்திருக்கின்றது.

கேரளத்துப் பெண்களின் வனப்பு பாரதியாரைக் கூட சுண்டியிழுத்ததெனில் நாமெல்லோரும் எம்மாத்திரம். "சிந்து நதியினிசை நிலவினிலே... சேர நல் நாட்டிளம் பெண்களுடனே.." நாமுமென்ன அவருக்குக் குறைந்தவர்களா என்ன? நயனின் நயனத்தைத் தவிர எல்லாவற்றையும் அக்குவேறு ஆணி வேராகப் பிரித்து மேய்ந்து தானே நம் கனவுகளைக் கலர் புல் ஆக்குகின்றோம்.நமக்கே இப்படியென்றால் முற்றத்து மல்லிகையின் வாசனையை நாளும் சுவைக்கும் மலையாளிக்கு சாரு நிவேதிதாவின் மஞ்சள் கதைகளான அர்த்த ஜாமக்கதைகள் பிடித்துப் போனதில் என்ன தவறிருக்க முடியும்.

"வேலிக்கு ஓணான் சாட்சியாம்" தான் ஒரு மஞ்சள் பத்திரிகை எழுத்தாளன் என்பதற்கு அவர்கள் சாட்சி சொல்வார்களாம். அதைதானே நாங்களும் ஒத்துக் கொள்கின்றோம். கதை அப்படியிருக்க ஸ்டாக்ஹோம், சர்வதேசத் தரம், இலக்கியப் பரிசு என்று பீலா விடுவதை ஜோக்காக எடுத்துக் கொண்டு ஜோக்கர் என்று கூறுவதில் தவறென்ன இருக்கின்றது.


ஆனந்தவிகடன், குமுதம் மட்டுமா ? தினமணி, தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களும் அதைத் தானே செய்கின்றன. சினிமா நடிகைகளின் படங்களைப் பார்த்து "வாணி" வடிக்கும் இளைஞர்களே கிழக்கிலிருந்து மேற்கு வரை நீண்டு இருக்கின்றார்கள். அப்படி இருப்பது ஒன்றும் தவறில்லையே. இயற்கையான விடயமும் அது தானே. மனிதன் ஒரு விலங்கு என்பதை நாம் அடிக்கடி மறந்து போவதன் வினை தான் இது.

இயற்கைக்குத் தேவை ..இனப்பெருக்கம். அது இல்லையென்றால் இயற்கையே அழிந்து விடும். தமிழர்கள் மிருகங்கள் போல் கொல்லப்படும் போது மிருகமாகவே இருந்து மிருகமாகவே சிந்திக்கத் தலைப்பட்டு அதனாலேயே "பலாத்காரத்தின் தோல்வி" பற்றி விஸ்தாரமாக "நொண்ணை"எழுதிய சாரு நிவேதிதா இப்போது எப்படி இயற்கையை மறுதலிக்கலாம்.

மனிதனின் இயற்கைக் குணம் சீண்டுவது,சினப்பது,முட்டுவது குட்டுவது. அதைத்தானே அவர்கள் செய்கின்றார்கள். இவர் கூறும் "இலக்கியப் பிம்பம்" இவர்களாகவே சட்டம் கட்டிக் கோடு போட்டு வீட்டில் மாட்டி வைத்திருக்கும் மாயமான் அன்றி வேறென்ன?

இறந்துபோன தன் மனிதர்கள் பற்றிய இரக்கத்தை வெளிப்படுத்தவே மற்றவர்கள்(புலிகள்) விட்ட பிழைகளை அளவு கோலாகக் கொண்டவர்கள், கொண்டாடியவர்கள் எப்படி சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.

இலக்கியப்பிரமாக்கள் தேவையே இல்லாத சாதாரண மனிதர்களையே கோரும் ஒரு சமுதாயத்தில் மனிதனாக இருக்க முடியுமா? என்று இவர்கள் யோசிக்கட்டும். அதன் பின்னால் ஸ்டாக்ஹோம் , சர்வதேசத் தரம், இலக்கியப் பரிசு பற்றியெல்லாம் யோசிக்கலாம்.

Saturday, November 28, 2009

என்னவென்று ஏசுவது? எதால் அடிப்பது?


ஏதாவது செய்தாக வேண்டும். ஆர்ப்பரிக்கும் கடலலையைப் போல உள்ளம் குதித்துக் குதித்து அடங்க மறுக்கின்றது. கரை முழுதும் ஓடிச் செல்லும் அலை போல ஓடியோடி அடங்க மறுக்கின்றது மனம். காற்றைத் திருகி முறுக்கிக் கொலை செய்யவும் கைகள் பரபரக்கின்றது.
ஏதாவது செய்யவேண்டும். எப்படியாவது தன் எதிர்ப்பைக் காட்டும் குழந்தயைப் போலவாது வாயிலிருப்பதைத் துப்பியாவது எதிர்ப்பைக் காட்டவேண்டுமென்று இருக்கின்றது.

இறந்து போன மக்களைப் பற்றித் துயரப்படாத மனங்களை கல்லுக்கும் மலைக்கும் ஒப்பிட்டு விலகி விட்டேந்தியாகப் போக முடியாதிருக்கின்றது. பொறாமையோ இயலாமையோ என்ன இழவையோ சுமந்து கொண்டு வெறும் சோற்று மூட்டைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஆறு கோடித் தமிழர்களை எந்த ஆறு பெருக்கெடுத்து அள்ளிப்போகும் என்று கோபம் குமைந்து கொண்டிருக்கின்றது.

ஒரு நாதாரி கூனும் வயதிலும் நடுங்கும் கரத்திலும் குழறும் வாயிலும் சொல்லும் வார்த்தைகள் உயிரைக் குடிப்பதை மறந்து என்ன வாழ்க்கை பற்றி நாங்கள் கனவு கண்டு கொண்டிருக்கின்றோம். புலிகளின் கொட்டங்கள் எந்தக் குப்பைக்கூடையிலும் கொட்டுப்பட்டு போகட்டும். அவர்களின் பிழைகளைக் கூட அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து வியாக்கியானம் செய்து வைப்போம். அவர்களின் தோல்வியைக் கூட கைதட்டி பியர் குடித்து வரவேற்போம்.

அவர்களுடன் கூடவே செத்து மக்கிப்போன நம் மக்களை எந்த வகையில் சேர்த்துக் கொள்வது. அவர்களின் சாவிற்கு எந்த உவமையையும் மோனையையும் சேர்த்து கவிதை புனைவது. வாழ ஆசைப்பட்டு அனாதைகளாக செல்லடியிலும் குண்டடியிலும் இரத்தச் சகதிகளாகச் சிதைந்து போன அந்த மக்களின் இறப்பைக் கூட இந்த புளுத்துப்போன வாயினாலும் இத்துப்போன வார்த்தைகளாலுமா நாம் விளங்கிக் கொ
ள்வது. தமிழனாக இல்லாவிட்டாலும் சக மனிதனாக ஒரு துளி கண்ணீர் விட யாரிடம் உத்தரவு கேட்டு இறைஞ்சி நிற்கின்றோம்.

மரணித்த மாவீரர்களின் கல்லறையில் ஒரு பூவை எடுத்தெறிய இந்த வஞ்சகப் புழுவின் வாய் ஜாலங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் உடன் பிறப்புகளை எரித்துப்போடுவதால் என்ன குறைந்து விடும். உடன் பிறப்பு தமிழுக்காகவா? அல்லது தமிழை வைத்து விபச்சாரம் செய்யும் மு.க விற்காகவா?

புலிகளின் அழிவு பிரபாகரனின் பிழையினால் என்று கூற இந்த முட்டாள் கிழவனுக்கு யார் துணிவைத் தந்தது? தமிழினத்தின் தலைவன் என்று சொல்லிக்கொண்டது காக்கைவன்னியன் போல காட்டிக்கொடுக்கவா? இந்திப் பெண்ணை எதிர்த்து கரி பூசிய இவர்களா இன்று இத்தாலிப் பெண்ணின் முந்தானையில் முகம் புதைத்துத் தூங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தக் கொள்கையினால் உந்தப்பட்டுத்தானா? இன்று தமிழகம் மு.க வின் தலைமையில் புளகாங்கிதமடைந்து நடை போடுகின்றது. இதைப்பார்த்து பொதிகை மலையில் தமிழ் வளர்த்த அகத்தியன் எரிந்த எழுத்தாணி அரபிக்கடலில் புதைந்து தொலைந்து போகின்றதே.

கலைமாமணி விலைமாமணியாகி எத்தனையோ காலமாகி விட்டது. அதையே இந்தப் புல்லுருவி "அம்மா கொடுத்த முத்தம் போல் "இருக்கின்றது என்கின்றது. தன் மகன் போர்க்களத்தில் புறமுதுகிட்டான் என்று கேட்ட தமிழ்த் தாய் தன் முலையை அறுத்து எறிந்தாள் என்று கேள்விப்பட்டிருக்கின்றோம். புறமுதுகிட்டதுடன் காட்டிக்கொடுத்த இந்த கருப்புக்கண்ணாடியின் தாய் எத்தனை முறை தன் முலை அறுத்து எறிவாள்.

"தம்பி தமிழ்ச் செல்வா" என்று தகிடு தத்தம் போட்ட இந்த கிழட்டாடு இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கின்றது. இந்த வேற்றுமை கூட அறியாத தமிழறிஞர்களா செம்மோழியில் மாநாடு நடத்திக் கிழித்து விடப்போகின்றார்கள்.

என்ன? துக்கம் என் தொண்டையை அடைக்கின்றது. இதையெல்லாம் தட்டிக்கேட்கும் ஒரு குரல் கூட இல்லாத செத்த மக்கள் வாழும் நாடா ? தமிழகம்.இறந்து போன மாவீரர்களுக்கு கொடையா படைக்கின்றோம் ஒரு பூவெடுத்துப் போடும் நிகழ்வையும் நடாத்தவிடாது புழுத்துப்போன இளங்கோவன் பானர் எல்லாம் கிழித்தெறிக்கின்றான்.அவன் வீட்டில் வீசிய குண்டு அவன் தலையில் போட வேண்டியது. இந்தப் பொறுக்கிகளையெல்லாம் நாட்டில் நடமாடவிட்டு குடை பிடிக்கும் தமிழனுக்கு எதிரியின் கையால் ஒரு குவளை நீர் கூட குடியாது உயிர் விட்ட சேரலாதன் இரும்பொறையின் கதையை நினைவு படுத்த வேண்டும்.

தமிழனின் சரித்திரத்தை மறந்து விட்ட இந்த தமிழ் நாட்டுச் சனத்தை என்னவென்று ஏசுவது? எதால் அடிப்பது?

Friday, November 27, 2009

தமிழ் மணமா? தமிழ் பிணமா?

ஏன்யா என்ன தான் நடக்கின்றது இங்கே?


வாசகர் பரிந்துரை
மதம் பற்றி பெரியார்
4
தமிழ் ஓவியா

இனவெறி, பார்ப்பனீயம்
5
Dr.Rudhran

நைனா...நறுக்குன்னு நாலு வார்த்த...
8
பிரியமுடன்...வசந்த்

தமிழ்மணத்தில் உங்கள் ஓட்டைப் போட முடியவில்லையா?
12
SUREஷ் (பழனியிலிருந்து)

நம்பர் 6,விவேகானந்தர் தெரு,துபாய்
5
இரும்புத்திரை அரவிந்த்

யோகி?? - விமர்சனம்
4
ஜெட்லி

தமிழினத் தலைவா...
9
புலவன் புலிகேசி

கொஞ்சம் தேநீர்- நான் உறங்க!
6
தேவன் மாயம்

குறிஞ்சிப்பண்: நீலகிரியின் மலையரசி கதறுகிறாள்!
7
வினவு

ஒலியும் ஒளியும்
9
பா.ராஜாராம்

மேலும் பரிந்துரைக்கப்பட்ட இடுகைகள்
4
மதம் பற்றி பெரியார்
4/4 | தமிழ் ஓவியா | பெரியார்
மதம் என்பதும், சமயம் என்பதும், சமயநெறி என்பதும் மற்ற ஜீவன்களிடத்தில் மனிதன் நடந்து கொள்ள வேண்டிய நடையைப் பற்றிய கொள்கைகளைக் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
3
யோகி - திரைப்பட விமர்சனம்
3/3 | உண்மைத் தமிழன்(15270788164745573644) | சினிமா விமர்சனம் | சினிமா
27-11-2009 என் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
5
இனவெறி, பார்ப்பனீயம்
5/6 | Dr.Rudhran | பார்ப்பனீயம்
இதை எழுத நேர்ந்ததே என்ற வருத்தமும் , அவசரமாக இதை எழுதுகிறேனே என்ற ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
3
சந்தன முல்லை என்கிற பப்புவின் ஆச்சி பற்றி...
3/3 | ஜெயந்தி
இந்த முறை வலைப்பூ விமர்சனத்திற்கு சிக்கியவர் சந்தன முல்லை. " சித்திரக்கூடம் " சந்தன முல்லை. இந்தப் பெயர்தான் என்னை அவர்பால் ஈர்த்தது. ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
4
வி.பி. சிங் நினைவு நாள் சிந்தனைகள்
4/4 | தமிழ் ஓவியா | பெரியார்-மயிலாடன் -மூடநம்பிக்கை- பார்ப்பனியம்
வி.பி. சிங் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
8
நைனா...நறுக்குன்னு நாலு வார்த்த...
8/8 | பிரியமுடன்...வசந்த் | சமூகம் | சினிமா
முடங்கி கிடந்த நிறுவனத்துக்கு மு.க.அழகிரி நிதி உதவியால் அந்நிறுவனம் லாபம் ஈட்டியது.. ம்க்கும்...நிதிக்குடும்பமாச்சே...அதான்...இவங்ககிட்ட இருக்குற நிதியெல்லாம் கொடுத்திருந்தால் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
12
தமிழ்மணத்தில் உங்கள் ஓட்டைப் போட முடியவில்லையா?
12/12 | SUREஷ் (பழனியிலிருந்து) | தொழில்நுட்பம் | தமிழ்மணம் | அனுபவம்
தமிழ்மணத்தில் ஓட்டுப் போடுவது என்பது ஏழுகடல் ஏழுமலை தாண்டி குகைக்குள் குடியிருக்கும் முனிவரின் வாயில் புகுந்து வியர்வை வழியாக வெளியேறுவதைப் போன்று சிரமமான காரியமாக இருந்து வருகிறது. ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
5
நம்பர் 6,விவேகானந்தர் தெரு,துபாய்
5/5 | இரும்புத்திரை அரவிந்த் | நையாண்டி | கும்மி | அனுபவம்
நம்பர் 6,விவேகானந்தர் தெரு,துபாய் இந்த காமெடி பாக்கும் போதெல்லாம் என்னை மறந்து சிரித்து இருக்கிறேன்.ஆனா இப்போ இந்த காமெடி வந்தாலே உடனே சேனல் மாற்றி விடுவேன்.அப்படி என் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
4
யோகி?? - விமர்சனம்
4/4 | ஜெட்லி | சினிமா விமர்சனம் | யோகி
யோகி ?? இயக்குனர் அமீரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் யோகி.சுப்ரமணியன் சிவா கதையிலும் இயக்கத்திலும் அமீரின்வசனத்திலும் திரைக்கதையிலும் இன்று உலகம் முழுவதும்ரிலீஸ்.படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் என்பதாலும்அமீரின் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
9
தமிழினத் தலைவா...
9/9 | புலவன் புலிகேசி | தமிழினத் தலைவா
தமிழினத் தலைவா உனக்கு நேற்று பிறந்த ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
6
கொஞ்சம் தேநீர்- நான் உறங்க!
6/6 | தேவன் மாயம்
ஒரு சிறு அமைதி, ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
7
குறிஞ்சிப்பண்: நீலகிரியின் மலையரசி கதறுகிறாள்!
7/7 | வினவு | இன்று | கவிதை | முதலாளித்துவம்
மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி எனக் குறிப்பிடும் இலக்கியங்கள்-அது தொழிலாளர் கொலையும் கொலைசார்ந்த இடமும் எனக் காட்டும் வரலாற்றின் இரத்தக் காயங்கள். ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
3
ஒரு பேச்சுலரின் "புலம்பல்கள்..."
3/3 | நாஞ்சில் பிரதாப் | புலம்பல்கள் | நகைச்சுவை | அனுபவம்
தங்கமணிகளும், ரங்கமணிகளும் ஆளுக்காளு மாத்தி, மாத்தி புலம்பிட்டு இருக்காய்ங்க... பேச்சுலர்கள் மட்டும் புலம்ப கூடாது என்ன? இதோ ஒரு பேச்சலரின் புலம்பல்கள்: ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
9
ஒலியும் ஒளியும்
9/9 | பா.ராஜாராம் | கவிதைகள்
(picture by CC licence, thanks Mark ) ஒன்று. ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
3
என்னமோ நடக்குது
3/3 | சின்ன அம்மிணி | சர்வேசனின் நச்னு ஒரு கதை போட்டி
சர்வேசன் சிறுகதைப்போட்டி ஒண்ணு நடத்த , நம்மளும் சும்மா இருக்காம திருப்பம் என்ற பெயரில் ஒரு கதை எழுதி அது முதல் இருபதுக்குள்ள இடம் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
6
தோழா நீ எங்கே...
6/7 | ஹேமா | கவிதை ஈழம்
தோழா... எமக்கான தேவைகளை சமாதானத்திற்கான வார்த்தைகளை எமக்காகப் பேசி பார்வைகளால் விதை தூவி பயிரிட்டவன் நீ எங்கே நீ ! ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
5
சமச்சீர் கல்வி - ஒரு உரத்த சிந்தனை!
5/5 | மாதவராஜ் | சமச்சீர் கல்வி | நிகழ்வுகள் | சமூகம்
கார்ட்டூன் பக்கம் நன்றி : தி ஹிந்து நாளிதழ், 26.11.2009 ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
9
எ ஃபார்...
9/9 | சந்தனமுல்லை | உயிரெழுத்துத் தொடர் | நினைவுகள் | மொக்கை
..... எடுத்துக்காட்டு !! இந்த ' எ . கா ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
7
சினிமா வியாபாரம்-13
7/8 | Cable Sankar | தொடர் | Cinema Business | சினிமா வியாபாரம்
லேப் லெட்டர் நாங்கள் புதியவர்கள் என்பதால் ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட் போலவே நாங்கள் தயங்கி, தயங்கி நிற்க, படத்தை ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
8
தமிழ் தேசிய தலைவனின் அன்பும் கொக்கரிக்கும் சிங்களமும்.
8/9 | ஹேமா | ஈழம்
இந்தியாவுக்கும் எதிரான சிங்களம். 2008 ம் ஆண்டில் தலைவரின் உரை. ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
14
அழகே உன்னை ஆராதிக்கிறேன்...
14/15 | தண்டோரா ...... | அழகு/கதிர்/ரம்யா/அப்துல்லா/ராமலட்சுமி/தொடர்
அழகு என்பதற்கு ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
3
இசைமேடையில் இந்த வேளையில் சுகராகம் பொழியும்...
3/3 | சரவணகுமரன் | மகேந்திரன் | இசை
மகேந்திரனின் விரல் உதிர்க்கும் இசையெழுத்துக்கள். --- சமீபத்தில் நண்பரின் திருமணத்துக்காக விழுப்புரம் சென்றிருந்தேன். முதல் நாளே சென்றதற்கு அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியும் காரணம். ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
9
கலங்கரை விளக்கொரு காவதம் கோடியா..?!
9/9 | கலகலப்ரியா | பொது | உலகம் | சிந்தனை
இரைப்பையில் இன்னமும் இருந்து கொண்டிருந்த ஐஸ் கிரீம்... இடைச்சிறுகுடல் தாண்டிக் கொண்டிருந்த இடியப்பம் ஆகியவற்றை தொண்டையை நோக்கி இழுத்து... வாய் வழியாக வெளியேற்ற வழி செய்து ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
15
தொழுது நிற்கிறோம்!
15/18 |
அகண்ட தீக்குளித்து அன்றலர்ந்த அல்லியாய் வந்தபோது தெளிந்தது சீதையின் கற்பல்ல இராவணனின் சீலம்! கையறு நிலையிலும் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
6
பிடிக்காத பத்தும் சில பதில்களும்........
6/6 | அது சரி | மொக்கை | கலாச்சாரம் | பதிவர் வட்டம்
// ஆதிமூலகிருஷ்ணன் has left a new comment on the post " ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
4
மதவெறிக் கும்பலில் இந்து என்ன? இஸ்லாமியர் என்ன?
4/4 | தமிழ் ஓவியா | வீரமணி
ஜஸ்டிஸ் லிபரான் ஆணையத்தின் அடிப்படையில் குற்றவாளிகள் மீது ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
7
நான் தேடிக்கொண்ட பரிகாரம்...
7/7 | பிரபாகர்
என்னோட சின்ன வயசில நடந்த விஷயம் இது. மூனாவது படிச்சிகிட்டிருந்தேன். ஊர்ல எதாச்சும் நல்லது கெட்டதுன்னா உடனே ரேடியோ கட்டிடுவாங்க. 'போனால் போகட்டும் போடா...', 'சட்டி ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
3
"நானும் தமிழன் தானே\' காக்கை வன்னியன் கருணாநிதியின் ...
3/3 | இட்டாலி வடை
"முரசொலி'யில் இரண்டாவது முறையாக வெளிவந்துகொண்டிருந்த "பாயும்புலி பண்டாரக வன்னியன்' என்ற வரலாற்று காவியம் முடிவடைந்துவிட்டது. ஆனால், அந்த வீர காவியம் வாழ்ந்து ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
4
கதம்பம் - 26/11/09
4/4 | வடகரை வேலன் | கரிசல் இலக்கியம் | கரிசல் கதைகள் | மும்பை
தனிப்பதிவிட்டும், பின்னூட்டமிட்டும், நேரிலும், மின்னஞ்சலிலும், குருஞ்செய்தியிலும், கை பேசியில் அழைத்துமென வாழ்த்து மழையில் நனைத்த உள்ளங்களுக்கு நன்றி. ** சென்ற ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
3
எழுச்சி நாள்
3/3 | இட்டாலி வடை
இமயம் முதல் குமரி வரை கொடி நட்டு ஆண்டான் தமிழன். கப்பலோட்டி கடலையும் அளந்தான், வென்றான் என்ற கதைகளை ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
4
பெரியாருக்கு யுனெஸ்கோ மன்றம் பாராட்டு!
4/4 | தமிழ் ஓவியா | வீரமணி
...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
5
அந்த அழகான காதல் கதை
5/5 | இட்டாலி வடை
மனிதர்கள் தெரிந்தோ தெரியாமலோ தவறு விடுகின்றார்கள். தமக்கு சம்பத்தப்படாத விடயங்களில் தலையிடுவதோடு மற்றவர்களைக் காயப்படுத்தவும் தயங்குவதில்லை. அந்த வலியும் வேதனையும் தமக்கு தமக்கு வரும் வரையும் அதைத் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
8
ஹீரோ!
8/9 | | கற்பனை | நகைச்சுவை
என் பேரு. அது எதுக்கு ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
3
பிழைக்கத்தெரியாதவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
3/3 | குழலி / Kuzhali
இனத்தை அடகு வைத்து பிழைத்திருக்கலாம் உன் பேரன்கள் உலகின் பெரிய பணக்காரர் வரிசையில் வந்து சேர தமிழை அடகு வைத்து பிழைத்திருக்கலாம் உன் பையன்களுக்கு ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
4
இந்திய அரசமைப்புச் சட்டம் எதற்காகக் கொளுத்தப்பட்டது?
4/4 | தமிழ் ஓவியா | பெரியார்-மயிலாடன் -மூடநம்பிக்கை-பார்ப்பனியம்
நவம்பர் 26 ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
4
ஒரு தீவிரவாதியின் மறுபக்கம் - Flugten (The Escape)
4/4 | அதி பிரதாபன் | அ.பி. | விமர்சனம் | திரை விமர்சனம்
கடந்த வாரத்தில் கிடைத்த ஒரு மாலை ஓய்வு நேரத்தில் படம் பார்க்கலாமே என்று நினைத்தபோது, கண்ணில் பட்டதுதான் இந்தப் படம். Flugten (The Escape). டென்மார்க் படம். ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
6
சில நேரங்களில்
6/6 | அகல்விளக்கு
சில நேரங்களில் கடற்கரை காணும்போது உடல் நிலைத்து இருந்தாலும் மனது லயித்து குதித்தோடுகிறது. ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
5
பாசிஸ்ட் அரவிந்த் - நானும் புது பட்டம் வாங்கிட்டேன்
5/6 | இரும்புத்திரை அரவிந்த் | நையாண்டி | கும்மி | அரசியல்
கே.எஸ் ரவிகுமார்,விஜய் இவங்க எல்லாம் கூட டாக்டர் பட்டம் வாங்கிட்டாங்க.எட்டு மாசமா நானும் பதிவு எழுதி உயிரை வாங்குறேன்.எனக்கு ஒரு பட்டமும் கிடைக்கவில்லையே என்று சோகத்தில் சுருண்டு ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
4
அமீரகவாழ் அன்பர்களுக்கு RTA-வின் எச்சரிக்கை
4/4 | கிளியனூர் இஸ்மத் | எச்சரிக்கை
அமீரகவாழ் அன்பர்களுக்கு நவீனமுறையில் வழிப்பறிகளும் திருட்டுகளும் சமீபகாலமாக அமீரகத்தில் நடந்து வருகிறது. தியாகத் திருநாளை முன்னிட்டும் அமீர 38 ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க
4
பசங்க எப்பவுமே இப்பிடித்தானா?
4/4 | அன்புடன் அருணா | பசங்க
"ஜன்னலைக் கொஞ்சமாய்த் திறந்து கொஞ்சமாய் மேகம் பிய்த்துக் கொண்டு வந்து ஷோ கேசில் வைத்திருக்கிறேன்......ஜன்னல் திறக்கும் போது ஐஸ் மழைக்கட்டி உள்ளே வந்து விழுந்ததாக்கும்"அம்மா திட்டினாங்க ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க


குறிப்பு:அந்த அழகான காதல் கதை
5/5 | இட்டாலி வடை இன்னும் முன்னால் வரவே இல்லை ...இது ஆட்டாமட்டிக்கா? அல்லது றீசன்மட்டிக்கா?

Thursday, November 26, 2009

அந்த அழகான காதல் கதை

மனிதர்கள் தெரிந்தோ தெரியாமலோ தவறு விடுகின்றார்கள். தமக்கு சம்பத்தப்படாத விடயங்களில் தலையிடுவதோடு மற்றவர்களைக் காயப்படுத்தவும் தயங்குவதில்லை. அந்த வலியும் வேதனையும் தமக்கு தமக்கு வரும் வரையும் அதைத் தவறென்றே உணருவதில்லை. இலவச ஆலோசனைகளை அள்ளிவிட்டுக்கொண்டிருப்பார்கள். அதில் ஒரு குரூர மகிழ்ச்சியும் அடைவார்கள்.

அப்படியொரு குரூர மகிழ்ச்சிதான் அந்த அழகிய காதலைப் பிய்த்துப் போட்டது. இரண்டு மனங்களை ரணகளப்படுத்தி விட்டது. இருவரை நடைப்பிண்மாக மாற்றி விட்டது.




'அழகான சிறு குருவிக் கூடாக கட்டியிருக்கும் இந்தக் காதலைக் குலைத்துப் போடாதீர்கள் கலைத்துக் போடாதீர்கள்.." என்று அவன் எழுதிப் போட்ட கடிதம் கன்ணீரில் கரைந்து போயிருக்கலாம். அல்லது கால்களில் தேய்ந்து போயிருக்கலாம்.

இன்று அந்த பென்ணின் தந்தை இல்லை. சமூகத்தின் எந்த நடைமுறைகளைக் கட்டிக்காக்கவென்று செயற்பட்டாரோ அவையெல்லாம் வெறும் சடங்காகவே சீரழிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த இருவரும் இருந்து கொண்டிருக்கின்றார்கள். ஏதோ ஒரு திசையில் ஏதோவொரு நினைவில் காலங்களைத் தள்ளிக்கொண்டிருக்கின்றார்கள். கூடவே சாட்சியமாக இந்த டாக்டரும்.

அந்த அழகான காதல் கதையை நினைக்கையில் கூடவே கண்ணீரும் வந்து கல்ங்கிக்கழிகின்றது. காதலின் இனிமையைச் சொல்வதா? நிறைவேறாது போன துயரத்தைப் பகிர்ந்து கொள்ளவா? வலி சுளீரென்று உயிரைக் குலைக்கின்றது. இரண்டு வாழ்க்கை அழிந்து போன,அழிக்கப்பட்ட சோகம் துரத்துகின்றது. இருந்ததோ ஒரு வாழ்க்கை. அதன் பின் விட்ட தவறுகளைத் திருத்த யாரால்தான் முடியும்.

தனக்கு வலுக்கட்டாயமான நிச்சயயதார்த்தம் முடிந்து விட்டது என்று அந்தப் பெண் எழுதிய கடிதம் இன்றும் அவன் இதயத்தில் முட்களாக நெருடிக்கொண்டிருக்கின்றது. "ஐயோ நான் இழக்கக் கூடாத செல்வம் நீ.." என்று அவன் இதயம் இன்றும் கதறிக் கரைந்து கொண்டிருக்கின்றது.

அந்தக் காதலைக் கசக்கிப் போட்ட நீங்களும் உங்கள் கொள்கைகளும்..... நல்லாருங்கடே

(கண்களின் கண்ணீர் தொலைந்து விட்டால் இன்னும் தொடரும்)

Wednesday, November 25, 2009

தமிழ் மணம் வெட்கப்பட வேண்டும்


ஒரு அழகான காதல் கதையை கலைத்துப் போட்ட ஒரு சாதி வெறி பிடித்த டாக்டரை நட்சத்திரமாக்கியதற்காக தமிழ் மணம் நிச்சயம் வெட்கப்பட்டே தீர வேண்டும். அப்போதெல்லாம் அவர் பருத்தித் துறையில் பிறைவேற் கிளினிக் வைத்திருந்த பிரபல குள்ள டாக்டர்.

நாங்களும் தான் அங்கு எத்தனையோ முறை போய் காசைக் கொட்டியிருந்தோம். ஆனாலும் பணம் கறக்க விரிந்திருந்த பேராசை பிடித்த மனம் மக்களை மக்களாக மதிக்க விரிந்திருக்கவில்லை.

அந்த அனுபவத்தைத் தான் இங்கு விரிவாக உங்கள் முன் விரித்திருக்கின்றேன். அது ஒரு அழகான காதல் கதையாக இருந்த வேளை ஆபத்தானதாகவும் இருந்தது. காதல் வானில் சிறகடித்த சிட்டுகளுக்கு சமூகத்தின் கசடுகளைப் பற்றி சிந்திக்க ஏது நேரம். மணலைக் கயிறாகத் திரிக்கவும் வானத்தை வில்லாக வளைக்கவும் கற்பனை செறிந்த கனவுலகம் விரிந்து கிடந்ததே.

கற்பனைகளில் கூடு கட்டி என்னவொரு சுகமான வாழ்வில் அவர்கள் திளைத்திருந்தார்கள். ஆவாரம் பூவின் பெயரில் தொடங்கும் ஊரில் சைவர் சாதியில் பிறந்த அந்தப் பெண்ணை டாக்டரின் அயலூரவனான அந்தப் பையன் காதலித்ததும் கற்பனையில் மிதந்ததும் என்ன உலக மகா பாதகமா?

பெண்ணின் காதல் அறிந்த தந்தையார் தேடிப்போனதும் விபரம் கேட்டதும் இந்த டாக்டரைத்தான். அவர் சொன்னது "இந்த ஊரில் அந்தப் பெயரில் யாரும் இல்லை,சுத்தியிருக்கும் பள்ளோ நளமோ கரையானோ... எதற்கும் பிள்ளையைக் கவனமாகப் பாத்துக்கொள்ளுங்கோ.."

பெண்ணின் தந்தை "நல்ல மாட்டுக்கு ஒரு சூடும் நற்பார்த்தைக்கு ஒரு சொல்லும்" என்று எழுதி அந்தக் குருவிகளின் கூட்டைச் சிதைத்துப் போட்டதும் அந்தப் பெருமையைச் சூடிக்கொண்டதும் இந்த டாக்டரே.

மனிதரை மதிக்காதவன் டாக்டராய் இருந்தால் என்ன? தேவனாய் இருந்தால் என்ன?


குறிப்பு: இந்த டாக்டரைப் பற்றி இன்னும் நிறையவே கதைகள் இருக்கின்றன. தெரிந்தவர்கள் எழுதவும்.

Thursday, April 02, 2009

மாடம் கிளாரிக்கு ஒரு பகிரங்க கடிதம்


மாடம் கிளாரி!

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில், அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதி மேரி ஜோய் கில்ரோய் கடந்த மார்ச் 9ஆம் திகதி, உங்களிடம் கடிதம் மூலம் விளக்கம் கோரியிருந்தார்.

அதற்குப் பதில் அளித்த தாங்கள், "
இலங்கையில் நிரந்தர சமாதான தீர்வு ஏற்பட்டு அனைத்து சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு ஏற்படுவதையே அமெரிக்கா விரும்புவதாகக்" குறிப்பிட்டிருந்தீர்கள். உங்கள் நல்லெண்ணத்தை நாங்கள் வரவேற்கின்றோம்.

அனைத்துச் சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு என்று மொட்டையாகச் சொன்னால் எப்படி ? தனியாகப் பிரிந்து செல்வதா? சமஷ்டி தீர்வா? அல்லது வெறும் மாகான சபைகளா? என்பதை வகை பிரித்துக்கூறக்கூடாதா?

ஏனெனில் தீர்வுகள் குறித்து நாம் பலமுறை திம்பு முதற்கொண்டு தாய்லாந்து டோக்கியோ ஈறாகப் பலமுறை பேசிவிட்டோம். பேசியதில் கண்டது எதுவுமேயில்லை. பேச்சு பேச்சைத்தொடர்ந்து யுத்தம். யுத்தத்தில் உயிர்களைத் தொலைக்கும் வேதனை. இதைத்தான் நாங்கள் இதுவரை கண்டு வந்துள்ளோம்.
இழப்புகள் எப்போதும் எங்களுக்குத்தான் .அந்த வேதனையில் தான் உங்களிடம் கேட்கின்றோம். உறுதியாக ஒன்றைக்கூறுங்கள். எங்களால் உடன்படமுடியுமா? இல்லையா?என்பதை நாங்கள் கூறுகின்றோம். திக்கில்லாத பேச்சு என்னும் காட்டில் அலைந்து விட்டு தீர்வில்லாது தொடங்கும் இன்னுமொரு யுத்தத்தில் உயிர்களைத் தொலைக்க எம்மிடம் அவ்வளவு உயிர்கள் இல்லை.

எத்தனை முறைதான் ஏமாறுவது?

"இலங்கை அரசாங்கத்திடம் சமாதான தீர்வை வலியுறுத்தும் அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளிடம், பொதுமக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கு அனுமதியளிக்குமாறும், வன்முறைகளை நிறுத்துமாறும் கோரியுள்ளதாக " நீங்கள் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள்.

உங்கள் நகைச்சுவையுணர்வைப் புரிந்து கொள்ளும் திறன் எனக்கில்லை என்றே எண்ணுகின்றேன். இன்று போர் நடைபெற்றுக்கொண்டிருப்பது வன்னியில். போரை நடத்திக்கொண்டிருப்பது சிறிலங்கா இராணுவம். நீங்கள் என்ன சொல்லியிருக்க வேண்டும்? உடனடியாக போரை நிறுத்தி சமாதானத்தீர்வை வையுங்கள் என்று சிறிலங்கா அரசை வலியுறுத்தியிருந்தால் தமிழ் மக்கள் அனைவரும் உங்கள் நல்லெண்ணத்தைபுரிந்திருப்பார்கள்.

இதை விட்டு விட்டு தன்னைக்காத்துக்கொள்ளப்போராடும் மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? அது என்ன? தக்குதலை முன்னெடுப்பவனை விட்டு விட்டு தாக்குதலால் பாதிக்கப்படுபவனை மட்டும் நிறுத்தச் சொல்லி கோசம் போடுகின்றீர்கள். தற்காத்துக் கொள்வது -நம் பெண்கள் பிள்ளைகளைக் காத்துக் கொள்வது-உங்கள் எண்ணப்படி வன்முறை செய்வதா?

நாங்கள் அத்தனை தூரம் சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டுமென நீங்கள் ஆசைப்பட்டது எப்படி? இரட்டைக்கோபுரத் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்று ஆப்கானிஸ்தான் சென்று தாக்குதல் செய்து கொண்டிருப்பதுவும் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் என்று ஈராக்கில் படை நடாத்தும் உதாரணமும் நீங்கள் உலகுக்கு வழங்கியதுதானே. ஆனால் நாங்கள் இன்னும் எங்கள் இடத்தை விட்டு சிங்கள ஊர்களுக்குச் சென்று சண்டையிடவில்லையே? அத்தனைதூரம் சகிப்புடன் இருக்கும் எங்கள் பொறுமையை நீங்கள் மெச்சக்கூடாதா?

"இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு, பொது மக்கள் தங்கியிருக்கும் பிரதேசங்கள் மீது படையினர் தாக்குதல் நடத்தக் கூடாது என்பதை வலியுறுத்தியதாகவும்
" கூறியிருக்கின்றீர்கள். உங்கள் இத்தனை வேலைபளுக்கள் மத்தியிலும் இலங்கையின் பாலும் தமிழ் மக்களின் மீதும் நீங்கள் கொண்ட கரிசனையை நாங்கள் மெச்சுகின்றோம்.

தீர்வு தான் கொடுக்கப்போகிறீர்களே? தாக்குதலை நிறுத்தச் சொல்லிச் சொல்லக்கூடாதா? அது என்ன பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்தக்கூடாது என்பது? அவர்கள் எப்போதுதான் அப்படித் தாக்குதல் நடாத்தியிருக்கின்றார்கள்? நீங்கள் இப்படிக்கூறுவது சிங்கள அரசை நீங்கள் குற்றம் சொல்வதாக ஆகாதா? அப்படி நடாந்திருந்தால் சர்வதேச மனித நீதியின் மாண்புகள் நீங்கள் சும்மாயிருந்திருப்பீர்களா? சில நூறு மனிதர்கள் இரட்டைக்கோபுரத்துடன் இறந்ததற்காக படை நடாத்துபவர்கள் நீங்கள். பல ஆயிரம் மக்கள் இறந்தால் சும்மா இருப்பீர்களா?

"அமெரிக்க ராஜாங்க திணைக்களமும், இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகமும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து வன்னியில் போரினால் சிக்குண்ட மக்களுக்கு உதவிகளைச் செய்து வருகின்றன. "

அடடா.. இராணுவ உடையுடன் வன்னிக்காடுகளில் அலையும் வெள்ளை தோல் மனிதர்கள் இவர்கள் தானா? சிங்கள இராணுவத்திற்கு உதவி செய்பவர்கள் என்று நாங்கள் தவறாக எடை போட்டு விட்டோமே? இவர்கள் ஒன்றும் அரிசி மூட்டையையும் மாமூட்டையையும் காவி வந்ததை நாங்கள் பார்க்கவில்லையே. குண்டுகளைப் போட்டுத் துரத்துவதைத்தானே பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

எத்தனை பிஞ்சுக்குழந்தைகளும் பெண்களும் முதியவர்களும் ஆண்களும் யுத்தக் காயத்தினாலும் உயிரைக் கொல்லும் பசியினாலும் இறந்து வீழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இழுத்துப்போட்டு மண்மூடவே பலமுமின்றி இரண்டு சொட்டுக் கண்ணீர் விட்டு துயராற்ற நேரமுமின்றி ஓடிக்கொண்டிருக்கின்றோமே. எப்படி உங்களால் இப்படியெல்லாம் ..? துக்கமாக இருக்கின்றது.

"அத்துடன் இடம்பெயர்ந்தமக்களின் முகாம்களுக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமையம் என்பவற்றின் முழுமை நிவாரணங்களையும் இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்
" இப்படியும் கூறியிருக்கின்றீர்கள்.

இந்த நேரத்தில் இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் அண்மையில் வெளியிட்ட கருத்தை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். இவ்விடம் பெயர்ந்த மக்களின் அவலம் பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

"இடம்பெயர்ந்து வரும் தமிழர்களுக்காக, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் பல்வேறு 'நலம் காக்கும் சிற்றூர்கள்' அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சிற்றூர்கள், போர் நடைபெறும் பகுதியில் இருந்து தப்பி ஓடிவரும் அப்பாவி மக்கள் அனைவரையும் கட்டாயமாக அடைத்து வைக்கும் நடுவங்களாக இருக்கும் என்று த டெய்லி டெலிகிராப் (2009 பெப்ரவரி 14) நாளேட்டுச் செய்தி தெரிவிக்கிறது.

இவை சித்திரவதை முகாம்களுக்கு மறைமுகப் பெயரா? சிறிலங்கா அரசின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர த டெய்லி டெலிகிராப் நாளேட்டில் பின்வருமாறு
கூறியிருக்கிறார்: பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன்பு கொழும்பு நகரில் உள்ள அனைத்துத் தமிழர்களையும் அரசு பதிவு செய்யத் தொடங்கியது.

ஆனால், 1930-களில் ஹிட்லரின் நாசிப் படையினர் பயன்படுத்தியது போல, இது வேறு காரணங்களுக்குப் பயன்படுத்தப்படலாம். அவர்கள், அப்பாவித் தமிழ் மக்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் ஆகும் வாய்ப்புள்ளவர்கள் என்று முத்திரை குத்தப் போகிறார்கள் ".

இது நாங்கள் கூறவில்லை கிளாரி அம்மையாரே! அன்னிய நாட்டின் பத்திரிகையாளர் ஒருவர் கூறியது. சிங்கள அரசின் இடைத்தங்கல் முகாம்கள் பற்றி யும் நடவடிக்கைகள் பற்றியும் அவர் வெளிச்சம் போட்டுக்காட்டியது.

இப்படிப்பட்ட ஒரு கொலைக்களத்திற்கா எங்களைப்போகச் சொல்லி வற்புறுத்துகின்றீர்கள். ஈழத்தமிழ் மக்கள் உங்களிடம்கேட்பது பிச்சையல்ல , உயிர் வாழ்தலுக்கான உத்தரவாதம்.

அதே நேரம் உங்கள் பேச்சை சிறிலங்கா அரசு ஒன்றும் கேட்பது போலத் தோன்றவில்லையே. அது இப்படியொரு அறிக்கை விட்டிருக்கின்றதே.

"விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் எந்த விதத்திலும் போர் நிறுத்தத்தை மேற்கொள்வதற்கு அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லை. ஒரு மணி நேரத்துக்கேனும் தற்காலிகமானதொரு போர் நிறுத்தத்தைக்கூட அரசாங்கம் மேற்கொள்ளாது" என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இப்போது நாங்கள் என்ன செய்வது அல்லது நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள் என்று இன்னுமொரு அறிக்கை விடுங்கள். நீங்கள் அறிக்கை விடுவதும் அதை நாங்கள் வாசிப்பதுவும் ,இப்படித்தானே காலம் போகின்றது.

இதில் என்ன துயரம் என்றால் உங்களுக்கு அது 4வருட விளையாட்டு. எங்களுக்கு ஆயுள் முழுவதற்குமான சீரழிவு..

வன்னியில் துயரப்படும் ஜீவன்.

மாடம் கிளாரியின் கடிதம்:http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=12512

Wednesday, April 01, 2009

நம்ம மொக்கச்சாமி வந்துருக்காக!


"தமிழக மக்களின் துணையுடன், இந்திய அரசின் ஆதரவைப் பெறுவோம் என்று விடுதலைப் புலிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச தூதரக உறவுகளுக்கான பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வராஜா பத்மநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்."

என்று ஒரு செய்தி வந்திருக்கின்றது. (http://thatstamil.oneindia.in/news/2009/04/01/lanka-tigers-hope-to-win-indias-heart-through.html)

இன்று இலங்கையில் தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்படுகின்ற யுத்தம் முழுக்கமுழுக்க இந்திய காங்கிரஸ் அரசின் உந்துதலிலேயே நடைபெறுகின்றது என்பது யாவரும் அறிந்ததே. இந்திய இராணுவம் மற்றும் போர்க்கருவிகளை இந்த யுத்தத்தின் நிமித்தம் இந்தியா அனுப்பிக்கொண்டிருப்பது பல சந்தர்ப்பங்களிலும் அம்பலமாகியுள்ளது.

இராணுவ ஆலோசகர்களாக வழி காட்டிகளாக யுத்தத்தை முண்டுகொடுத்துக்கொண்டிருந்த இந்திய இராணுவம் இறுதியில் தானே நேரடியாகக் களம் இறங்கியுள்ளது என்பதற்கும் வன்னிக்காடுகளில் சிதறிக்கிடந்த பல இந்திய இராணுவத்தின் உடல்களே சாட்சியமாகியது. போரிற் காயம் பட்ட இந்திய இராணுவ வீரர்களின் சிகிச்சை தேவைக்காகவே அண்மையில் இந்திய வைத்தியர் குழுக்களும் அங்கு சென்றது என்ற கருத்தும் உள்ளது.

இவ்வாறான செய்திகள் இந்திய இராணுவம் தமிழர்களுக்கு எதிராக சிங்கள பாசிசப்படைகளுடன் சேர்ந்தே களமிறங்கியிருந்ததுஎன்பதை நிரூபிக்கின்றது. நிலமை இப்படியிருக்கையில் இந்திய அரசின் ஆதரவை எப்படி எதற்காகப் பெற்றுக்கொள்ள புலிகள் முயல்கின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது.

தமிழீழ விடுதலையை எதிர்க்கும் முதன்மைச் சக்தி இந்தியா என்ற நிலையிருக்கையில் இந்தியாவிற்கு இரங்கற்பா எழுதும் புலிகளின் அறியாமை தான் என்ன? புலிகளை ஒடுக்குவதே தன் ஆயுட்காலக் கடமையாகக் கொண்டிருக்கும் சோனியாவைத் தலமையாகக் கொண்ட இந்திய காங்கிரஸ் அரசு அள்ளிக்கொடுக்கப்போவது தான் என்ன?

இது ஒருவகை இராஜதந்திரம் என்று புலிகள் சப்பைக்கட்டு செய்யக்கூடும். இராஜதந்திரமாகச் செயற்பட்டிருக்க வேண்டிய காலம் ராஜீவ்வின் கொலைக்களக்காலம். அப்போது விட்ட இராஜதந்திரத்தை இப்போது துரத்திப்பிடிக்க முற்படுவது எந்தப் பயனையும் தரப்போவதுஇல்லை. அதே நேரம் இராஜீவ்வின் கொலை நடந்ததானாலேயோ நடக்காது விட்டதனாலோ இந்தியாவின் அஜண்டா மாறியிருக்கப் போவதில்லை.

இதை இந்தியாவின் ஆக்கிரமிப்பு அபிலாசையுடன் பொருத்திப்பார்க்க வேண்டும். பொருளாதாரச் சுரண்டலை மையமாகக் கொண்ட இராணுவ ஆக்கிரமிப்பு இவ்வாறுதான் செயற்படும். அதை எதிர்க்கவும் எமது மண்ணைக்காக்கவுமான போராட்டத்தையே புலிகள் அல்ல எவர் தமிழர் சார்பில் போராட்டத்தை முன்னெடுக்கின்றார்களோ அவர்கள் கைக்கொள்ள வேண்டும்.

எமது போராட்டத்தின் எதிரிகளின் எதிரிகளை நாம் இனங்கண்டு நட்புக்கொள்ள வேண்டும். இந்தியாவின் ஏகடியம் பிடித்த அரசியலாளர்களுக்கு கருத்துச் சொல்லி எமது நேரத்தை பாழ்படுத்துதல் தேவையில்லை.நாட்டு நலன் என்ற போர்வையில் தம் கல்லாப்பெட்டியை நிரப்பும் நீசர்களும் போராட்டத் தீரர்களும் ஒன்றல்ல.

இந்திய இறைமை பற்றி அவர்கள் வாய் கிழியக்கதைப்பது போலவே எமது உரிமையில் தலையிடாது இருக்க நாம் அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும். இந்து சமுத்திரப்பிராந்தியம் ஒரு இந்தியாவுக்கு மட்டும் சொந்தமானதல்ல. இப்பிராந்தியத்தில் வாழும் அனைத்து நாடு இனம் மொழி சார்ந்த அனைவருக்கும் இங்கு உரிமை உண்டு.

எந்த நீதியின் அடிப்படையிலும் உரக்கப்பேசப்படக்கூடிய உண்மையைப்பற்றியே இந்தியாவிற்கு போதிக்க வேண்டும். ஈழத்தமிழ் மக்கள் இந்தியாவின் அடிமைகள் அல்ல என்பதை தமிழ் மக்களுக்காகப் போராடும் புலிகள் உரத்த குரலில் அவர்களுக்குச் சொல்ல வேண்டும். சர்வதேச அளவில் ஈழத்தமிழ் மக்களின் இராஜதந்திர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். எம்மைப்போலவே தமது இன மண் விடுதலைக்காகப் போராடும் மக்களுடன் சக்திகளுடன் கரம் கோர்க்க வேண்டும்.

புலிகளின் கொள்கை பரப்புச் செயலாளருக்கு இத்தனை வேலைகள் இருக்க இந்த வேண்டாத வேலையில் காலத்தைப்போக்குவது எமக்கே பின்னடைவாகும். சின்னஞ் சிறு கியூபா அமெரிக்காவிற்கே சிம்ம சொப்பனமாயிருப்பது வரலாறு.

தமிழக மக்களின் ஆதரவு என்றும் எமக்கு உண்டு. அதில் யாரும் குறை சொல்லமுடியாது. இந்தியா என்பதே உருவாக்கப்பட்ட நாடு. அதில் மும்முடி வேந்தர்கள் கட்டி ஆண்ட தமிழகமும் அடிமைப்பட்டிருப்பது காலத்தின் சோகம். அன்று சோழரிடம் அடிமைப்பட்டுக்கிடந்த சிங்கள தேசத்தை இன்று தூக்கிப்பிடித்திருப்பது ஆரிய காங்கிரஸ்ஸும் இத்தாலிய சோனியாவும்.

புலிகளின் பிரதிநிதியின் இந்த ஸ்டேட்மண்ட் "நம்ம மொக்கச்சாமி வந்துருக்காக!" கணக்கில் தான் இந்திய அரசால் பார்க்கப்படும். இந்த இழி நிலை நமக்கு வேண்டுமா என்று அனைவரும் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

இந்தியாவை அலட்சியம் செய்


இன்று வன்னி மண்ணில் அபிஷேகிக்கப்படும் அத்தனை ஈழத்தமிழ் இரத்தத்தில் இருந்தும் நாம் ஓர் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ் ஈழம் தான் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வழி வகுக்கும். அதை நாம் அடைந்தே தீருவோம் என்பதுவே அது.

அதை அடைவதற்கு இன்று பெரும் தடையாக இருப்பது இந்தியாவின் அகன்ற பாரதக் கனவு. இவ்வரசியல்க் கனவிற்கு பின் துணையாக நின்று ஊக்கப்படுத்துவது இந்தியப் பெரும் முதலாளிகளின் பரந்த ஏகோபித்த சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொள்வது என்பது. இதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய உலக ஒழுங்கு அவ்வாறு தான் உலகை வழி நடாத்துகின்றது.

இத்தகைய பேராசைகளுக்கு முன்னால் மனிதம் இரக்கம் என்பதெல்லாம் அடிபட்டுப்போகும். அது ஒரு செல்லாக்காசு. செத்துக்கொண்டிருப்பவர்கள் பற்றி நின்று நினைக்க இங்கு யாரும் தயாராகவில்லை. எல்லோரும் மனம் மரத்துப் போயிருக்கின்றார்கள்.தங்கள் சுய ஆசைகள் நிறைவேற கொல்ல முடிந்த அளவு மக்களைக்கொல்லுதல் அல்லது அதனிலும் கூடக் கொல்லுதல் என்பது அவர்களைப்பொறுத்தளவில் ஒன்றும் பாவமில்லை.அது தான் உலகில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இன்று உலக நாடுகள் அனைத்தும் இத்தகைய ஒரு சமன் பாட்டின் அடிப்படையிலேயே 8இயங்கிக் கொண்டிருக்கின்றன.

உலக வல்லாதிக்க நாடுகள் தான் இன்று சர்வதேச சமூகமாகத் தங்களைச் சொல்லிக்கொள்கின்றன. உலகில் பல நூற்றுக்கணக்கான நாடுகள் இருக்கும் பொழுது சில பத்துக்கணக்கான நாடுகள் தானா சர்வதேச சமூகம். இவையே இன்று உலகைச் சுரண்டிக்கொளுக்கும் நாடுகள். இவற்றின் நலன்களே இன்று உலகின் நலன்களாகவும் ஜனநாயகமாகவும் போதிக்கப்படுகின்றது.

இவற்றிற்கெதிரான விருப்பங்கள் எண்ணங்கள் பயங்கரவாதமாகப் படங்காட்டப்படுகின்றது. புஷ்ஷின் காலத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு கற்கால நாகரீகத்திற்கு இன்று மனிதனைக் கொண்டு சென்றிருக்கின்றது. அதை உணர்ந்ததனாலேயே இன்று அந்த நாடுகளில் இருக்கக்கூடிய சாதாரண சிந்தனை கொண்ட மக்களாலேயே அருவருப்புடன் பார்க்க நேர்கின்றது. தங்களை இழிபிறவிகளாகவே உணரமுடிக்கின்றது. அமெரிக்கவர்கள் சிறந்தவர்கள் என்ற மமதைக்குக் கிடைக்கப்பெற்ற பெரும் அடியாக உணருகின்றனர். அதற்குப்பிராயச் சித்தமாகவே கருப்பினத்தவர் ஒருவரை தங்கள் தலைவராக்கி திருப்திப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனாலும் இன்னும் தங்களைப்பற்றிய அருவருப்பான எண்ணத்தில் இருந்து வரமுடியாது தவிக்கின்றனர். இன்னும் ஏதாவது செய்ய வேண்டுமெனத் துடிக்கின்றனர். மக்களின் இந்த மனநிலையை ஆட்சியாளர்களும் உணர்ந்திருக்கின்றனர்.

அதனால் இவர்களை மீறி வேறு போர்கள் உற்பத்தி செய்யப்படமாட்டாது. ஆனாலும் உலகத் தனி வல்லரசுக்கனவு அமெரிக்காவிற்கு எப்போதும் போகாது. அதனால் அது அடைந்த நன்மைகள் அளப்பரியது. பனிப்போர்க்காலத்தில் எதிரணியில் இருந்த இந்தியாவை அரவணைக்க முயல்கின்றது. இந்து சமுத்திரப் பிராந்தியத்த்தின் தனது ஏஜண்டுகளில் ஒருவராக இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க இடத்தை அது கொடுக்க முன் வந்துள்ளது.

ஜப்பான் பாகிஸ்தான் தென்கொரியா போன்ற நாடுகள் அதற்கான நீண்ட நாள் ஏஜண்டுகள். அதே நேரம் சோவியத்துக்கு அடுத்தபடியாக வல்லரசாக வளர்ந்து வரும் சீனாவுக்கு காத்திரமான எதிரியாக இந்தியாவை முன்னிறுத்தவும் செய்யும். அதற்கான முன் நடவடிக்கையே அமெரிக்கா இந்தியா இடையிலான அணு ஆயுத ஒப்பந்தம். தேவைப்படும் அளவில் தன்கண்காணிப்பில் வளர்த்து விடுவதும் கட்டுப்படுத்துவதும் அமெரிக்காவின் நோக்கம். அதாவது இந்தியா எப்போதும் தனிப்பெரும் வல்லரசாக வளர்ந்து விட முடியாது என்பது சொல்லாமல் சொல்லப்படும் பாடம்.

அதே நேரம் இந்தியா தப்பித்தவறி அமெரிக்காவின் கையை மீறிச் செல்ல முற்பட்டாலும் அதை அழிக்கும் கத்தி பாகிஸ்தான்,அதையும் சம நேரத்தில் அமெரிக்கா உருவாக்கியே வைத்திருக்கின்றது. அப்படியொரு நிலமைக்கு இந்தியா வராது என்று அமெரிக்கா நம்புவதற்கு நிறையவே காரணங்கள் இருக்கின்றன.

1) இந்திய அரசியல் அமைப்பு. கோணங்கி அரசியல் அமைப்பு உருவாக்கி வைத்திருக்கும் கறைபடிந்த அரசியல்வாதிகள்.

2) சீராய் செப்பனிடாத அடிப்படைக் கட்டமைப்புகள். வீங்கி வெடித்த ஏற்றத்தாழ்வுகள். உ+ம் ஒரு வேளை சோற்றுக்கு ஆலாய்ப்பறக்கும் மக்கள். சந்திரனைச் சுற்றும் சந்திராயன்.

3) இன மதங்களால் முரண்படும் சமுதாயங்கள்.அவற்றுக்கிடையே தீர்க்கப்படாத புரையோடிப்போன பிரச்சினைகள்.

4)கூடிய மக்கள் தொகைப்பெருக்கமும் அதைத்தாங்க முடியாத குறைந்த பொருளாதார வளர்ச்சியும்.

இன்றைய அமெரிக்க கொள்கைப்படி இந்தியாவின் எஜமான விசுவாசத்திற்கு கிடைத்த பரிசு தான் இலங்கை வரை அதனால் நக்க முடிகின்றது. இஷ்டப்படி அதனால் இலங்கை நேபாளம் என்று யூரின் போக முடிகின்றது.

இந்தச் சலுகையாலேயே இலங்கையில் இந்தியா முன்னிலை படுத்தப்படுகின்றது. இதை ஈழத்தமிழ் மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையைப் பொறுத்தளவில் வல்லரசுகளைக் கவர்வது இந்து சமுத்திரத்தில் அதன் அமைவிடமும் திருகோண மலை த்துறைமுகத்தின் முக்கியத்துவமும்.
அமெரிக்காவின் இன்னுமொரு செல்லப்பிள்ளையான ஜப்பானுக்கான எண்ணெய்ப்போக்குவரத்து வழித்தடம் இலங்கையைச் சுற்றியே அமைகின்றது.அதையொட்டியே அமெரிக்க ஜப்பானியக் கவனிப்பு இலங்கையின் மீது இருக்கின்றது.

அமெரிக்க ஜப்பானிய நலன்களுக்கு எதிரான சீனாவின் ஆதிக்கம் அங்கு வருவதை அவை என்றுமே அனுமதிக்க மாட்டா. இதை நன்கு அறிந்து கொண்ட சிறிலங்காவின் சீன நட்பு நாடகம் நன்கு வேலை செய்கின்றது. அமெரிக்காவும் ஐரோப்பாவும் சிங்களத்தின் இழுப்புக்கெல்லாம் வளைந்து கொட்டின.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் குண்டு வைக்காத புலிகளைப் பயங்கரவாதப்பட்டியலில் சேர்த்துக்கொண்டதும் சிங்களச் சிறிலங்காவை குஷிப்படுத்தவே. பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போராடுபவர்களை குற்றம் சொல்லும் தந்திரம் இது. அவர்களின் போராட்டவலுவைச் சிதறடிக்கச் செய்து தங்களையே தற்காத்துக்கொள்ளும் நிலைக்குக் கொண்டுவருதல். இதுவே கனடா போன்ற இரண்டாம் நிலை நாடுகளும் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துக்கொண்ட வரலாறு. அதே நேரம் நேரடித்தாக்கத்தில் அதிக சேதத்தை ஏற்படுத்த முடியாத நோர்வே போன்ற ஸ்காண்டி நேவியன் நாடுகளைப் பேச்சாளர்களாக வைத்துக்கொண்டிருக்கின்றது.

அமெரிக்கா அதன் நட்பு நாடுகளிக்கு ஆதரவாக ஈழத்தமிழர்களை "வெல்ல" முடியாத ஒரு கட்டத்தில் அமெரிக்காவின் வால் பிடி நாடுகளான சவூதி பாகிஸ்தான் ,தென் கொரியா போன்ற நாடுகளும் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இது தான் இன்றைய அரசியல் பொருளாதாரம் ,ஜனநாயகம், மனிதநீதி எல்லாம்.

இதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். குட்டி நாய்களுக்கு சோறு போடுவதற்குப் பதில் பெரிய நாய்களுக்கு எலும்பு காட்டுவது பெரிய பலன் தரும். இடைத்தரகர் இல்லாது எலும்பு சாப்பிடுவது எல்லோருக்குமே பிடிக்கும்.

அதற்கு நாம் செய்ய வேண்டியது எல்லாம் இடைத்தரகர்களை விரட்டியடிப்பதே. அதற்கான ஒற்றுமையும் பலமும் இராஜதந்திரமும் நமக்கு வேண்டும். தமிழ் ஈழத்தின் ஓரங்குல நிலமும் பறிபோகக் கூடாது. அதே வேளை நிலப்பரப்பை இன்னும் பெருக்கிக் கொள்ளலாம். யுத்தத்தை எம்மண்ணில் நடாத்துவது மிகப்பெரிய தவறும் பின்னடைவுமாகும். சிங்கள மண்ணுக்கு விரிவு படுத்த வேண்டும். யாரையும் நிம்மதியாக இருக்கவிட்டால் நாமும் நிம்மதியாக இருக்க முடியாது.

பலஸ்தீனத்தில் ஹமாஸ் செய்வது நல்லதொரு முன்னுதாரணம். ராக்கட்டுகள் விழுந்து வெடிப்பது இஸ்ரேலிய மண்ணில். சேதம் இஸ்ரேலியர்களுக்கு. ஹமாஸையும் உலக நீதி ஒதுக்கித்தான் வைத்திருக்கின்றது. ஆனாலும் அவர்கள் அழிந்து போகவில்லை. அழிக்கமுடியாது. இஸ்ரேல் ஆயுத இராணுவ தொழில் நுட்பத்தில் இந்தியாவை விட மேன்மையானது. அமெரிக்காவிற்கு சவால்விடும் வலிமை கொண்டது.

தோற்கடிக்கப்படும் சிங்களவர்கள் அமெரிக்க நலன்களுக்கு துணை போக முடியாதவர்கள். அமெரிக்காவும் அதிக காலம் அவர்களுடன் இழுபட்டுக்கொண்டிருக்காது. இந்தியாவோ சீனாவோ பாகிஸ்தானோ அமெரிக்காவோ நீண்ட நாள் நிரந்தர நண்பராகவோ பகைவராகவோ இருக்க முடியாதவர்கள். அவர்களின் தேவை அப்படிப்பட்டது. காலப்போக்கில் புதிய வல்லரசுகள் வேறு திசைகளிலிருந்தும் உருவாகலாம்.

ஆகவே இப்போது ஈழத்தமிழர் வாழுவதற்கு இந்தியாவை அலட்சியம் செய்ய வேண்டும். இந்தியாவின் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை என்பதை உணர்த்தவேண்டும். இந்தியா மீது நாங்கள் காட்டும் அலட்சியம் ஒரு அமெரிக்காவையோ சீனாவையோ அல்லது ஒரு உகண்டாவையோ நம்மிடம் நெருங்கிவர வழி வகுக்கும்.

இது சாத்தியமா ? என்று நீங்கள் யோசிக்கக் கூடும். உங்கள் உயிர் வாழ்தல் உங்களுக்கு முக்கியம் என்றால் நீங்கள் இதைச்செய்தே ஆகவேண்டும். அதே நேரம் வன்னிக்காடுகளில் அலையும் சிங்கள இந்திய இராணுவங்களை அங்கேயே குழி தோண்டிப்புதைக்க வேண்டும். இதில் உங்கள் மனதிலுள்ள புத்தரையும் காந்தியையும் பிடுங்கி எறியுங்கள். அவர்களுக்கு அங்கே மட்டுமல்ல எங்கேயும் இப்போது தேவையில்லை. யாரும் அவர்களைப் பின்பற்றுவதும் இல்லை.

இரத்தத்தைக்கொட்டும் நாம் நிணங்களாய்ப்பிய்த்தெறியப்படும் நாம் அவர்காளைத் தூக்கிச் சுமக்கவேண்டியதில்லை. உங்களுக்குத் தெரியுமா? இஸ்ரவேல் அடாவடியில் பறிக்கப்பட்ட மண்ணில் உருவானது. பலஸ்தீனத்தில் பயங்கரவாதத்தை விதைத்தவர்கள் அவர்கள். உலக நாடுகள் அனைத்தாலும் அங்கீகரிக்கப்படாத நாடு அதுதான். ஆனாலும் உலக நீதி அவர்களைப்பயங்கரவாதிகள் பட்டியலில் போடவில்லை. சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு வரவில்லை. சூட்டுப்போட்ட கனவான்களாக உலகம் முழுவதும் வலம் வருகின்றார்கள். காரணம் அவர்கள் பலம். பல நாடுகளை அடிமைப்படுத்த பொருளாதாரரீதியில் துணை நிற்கின்றார்கள்.

கியூபா என்ற சின்னஞ்சிறு நாட்டையும் அமெரிக்காவின் உலக நீதி தடை செய்தது. மனிதாபிமான அமைப்புக்கள் எல்லாம் பலபக்கங்களுக்கு மனித அவலம் பற்றிப் புலம்பிக்கொண்டன. கியூபா இன்னும் சந்தோஷமாக இருந்து கொண்டிருக்கின்றது. இஸ்ரேல் ஒரு முகம் என்றால் கியூபா மற்றொரு முகம்.

இப்படித்தான் அவரவர் தேவைக்காக முகங்கள் மாறிக்கொண்டிருக்கும். எங்கள் தேவை தமிழ் ஈழத்தில் சுதந்திரமாக வாழுவது. அதைப்புரிந்து கொள்வோம். அது புரியாவிட்டால் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான அகதிகளாய் வாழ்ந்த யூதரைப்போல ஒரு அகதி இனம் உருவாகும். அது ஈழத்தமிழ் இனம்.

இந்தியாவை அலட்சியப்படுத்தினால் நாங்கள் ஒன்றும் தனிமைப்பட்டுப்போவோம் என்ற ப்யம் வேண்டாம். கள்ளனுக்குக் கள்ளன். எதிரிக்கு எதிரி. இது தான் இன்றைய உலக ஒழுக்கு. இல்லாவிட்டால் எங்கோ இருக்கும் ஈராக் இஸ்லாமியர்களை அழிக்கும் உலகம் கொசோவா இஸ்லாமியர்களுக்காகக் குரல் கொடுக்குமா? ஒன்றின் நலிவு மற்றையதன் தேவை. ஒன்றின் ஆதாயம் மற்றையதன் வாழ்வு அல்லது சாவு.

நமக்கு முன்னால் உள்ளதெல்லாம் முடிவெடுக்கவேண்டிய இரும்புத் தருணம். தமிழக ஆதரவு போய்விடும் என்ற கவலையும் வேண்டாம். இப்போது ஆதரவளிப்பவர்கள் தமிழுணர்வால் தமிழராய் ஆதரவளிக்கின்றார்களேயன்றி இந்தியர்களாய் அல்ல. அது போல இப்போது ஆதரவளிக்காதவர்கள் எப்போதும் ஆதரவு அளிக்கப்போவதில்லை.

வாழப்போவதும் நாம் சாகப்போவதும் நாம். இதுவரை இத்தனை உயிர்களைத்தொலைத்துவிட்டு இரந்து நிண்றதன் பலன் சிலபல அறிக்கைகள். ஆயுதத்தைக் கீழே போடு என்ற ஆணவப் புலம்பல். பாதிக்கப்பட்டவர்களையே பாதிப்பின் குற்றவாளியாகச் சுட்டப்படும் அயோக்கியத்தனம். இந்தியாவைப்பகைப்பதா? விளைவு விபரீதம் ஆகும் என்ற மிரட்டலும் கதறலும் தெரிகின்றது. இந்தியாவிடம் இரந்து நின்றபோதும் எங்களுக்குக் கிடைத்தது இதுவேதானே. ஆகவே இழப்பதற்கு எங்களிடம் எங்கள் உயிரைத்தவிர வேறு என்ன கிடக்கின்றது.

துணிந்து நின்றால் உயிர் வாழும் தகுதியாவது கிட்டும். நாயைப்போல சுடப்படாத மேன்மை கிடைக்கும். நாலு பேர் வந்து மண் தூவும் பாக்கியம் கிடைக்கும்.

இந்தியாவை அலட்சியப்படுத்தல் என்பது தொடக்கமே. போக வேண்டிய தூரம் அதிகம் இருக்கலாம். கண்ணுக்குத் தெரிந்தவரை முன்னோக்கிப் போனால்தானே போக வேண்டிய மிச்சத்தூரம் தெரியும்.

Tuesday, February 24, 2009

தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதால்தான் பதவியைத் துறக்க விரும்பவில்லையாம் முதல்வர் கூறுகிறார்


தமிழர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருப்பதால்தான் பதவியைத் துறக்க விருப்பமில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்து, நேற்று அவர் எழுதிய கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிலர் இலங்கைத் தமிழர் பிரச்சினை என்பது அவர்களுக்கு மட்டுமே உரியதைப் போலவும், நானும், தி.மு.க.வும் அதிலே அக்கறையற்றதைப் போலவும் மக்களிடம் செய்தி பரப்ப முயல்கிறார்கள். என் கையால் எழுதப்பட்ட செயற்குழு, பொதுக்குழு தீர்மானங்களிலேயே எந்தப் பிரச்சினைக்காக அதிகமான தீர்மானங்களை எழுதியிருப்பேன் என்று என் விரல்களைக் கேட்டால் அது கூறும், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகத் தான் என்று.

ஆனால், சிலர் இப்போது நம்முடைய தீர்மானங்களில் தீவிரம் இல்லை என்கிறார்கள். பதவியைத் துறக்க விருப்பமில்லை என்கிறார்கள் ஆட்சியிலே இருப்பதால் அதனைக் காப்பாற்ற முயலுகிறேன் என்றெல்லாம் பிரசாரம் செய்கிறார்கள்.

ஆமாம், இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற எனக்கு இருக்கிற அக்கறையைப் போல, இங்கேயிருக்கிற தமிழர்களையும் காப்பாற்ற வேண்டிய அக்கறையும், பொறுப்பும் எனக்கிருக்கின்றது அல்லவா? சட்டத்தரணிகளுக்கும் பொலிஸ்காரர்களுக்கும் இடையே பகை உணர்ச்சி காணப்படுகின்றது.

இரு தரப்பினரும் யார்? இருவரும் தமிழர்கள்தான். அவர்கள் இடையே மோதல் உருவாகாதா? இரத்தம் வடியாதா? அதிலே இன்பம் காண முடியாதா என்று ஏங்குபவர்களுக்கு இடம் கொடுத்து விடக் கூடாது என்பதற்காகத்தான் உண்ணாவிரத அறிக்கையை விட நேர்ந்தது

Sunday, February 22, 2009

முல்லைத்தீவில் நடப்பது என்ன?


புதுக்குடியிருப்பைக் கைப்பற்றுவதற்கான இறுதிச் சமரை படைத்தரப்பு கடந்தவாரம் ஆரம்பித்து விட்டது.

ஆனால் இந்தச் சண்டைகள் பற்றி செய்தி களோ, சண்டைகளில் ஏற்படுகின்ற இழப்புகள் பற்றிய தகவல்களோ அரச தரப்பில் இருந்தும் சரி, புலிகள் தரப்பில் இருந்தும் சரி வெளி வரவில்லை.

புதுக்குடியிருப்பைக் கைப்பற்றுவதற்கான சமரின் புதியதொரு பரிமாணமாக வடக்கில் இருந்து படைகளை நகர்த்தும் முயற்சிகளில் கடந்தவாரம் கூடிய அக்கறை செலுத்தப்பட் டிருந்தது.

பிரிகேடியர் சவீந்திர சில்வாவின் தலைமை யிலான 58ஆவது டிவிசனே புதுக்குடியிருப்புக் கான இறுதிச் சமரில் முதன்மைப் பாத்திரத்தை வகித்து வருகிறது. இந்த டிவிசனைக் கொண்டே தொடர்ந்தும் படைநகர்வுகளைச் செய்வதற்கும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

பரந்தன் மற்றும் ஆனையிறவில் இருந்து சமாந்தரமாக கிழக்கு நோக்கி நகர்ந்த இந்த டிவிசன் இப்போது புதுக்குடியிருப்புக்கு மேற்கு, வடமேற்கு, வடக்கு என்று பல திசைக ளில் பரவி நிற்கிறது.

கடந்தவாரம் இரண்டு முக்கியமான இலக்கு களை முன்வைத்து 58 ஆவது டிவிசன் தனது நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

புதுக்குடியிருப்பு முற்றுகையை மேலும் இறுக்குவதற்கான 58ஆவது டிவிசனின் இறுதி முயற்சியாகவும் இதனைக் கருதலாம்.

பரந்தன் முல்லைத்தீவு வீதிக்கு வடக்கே சுதந்திரபுரம் பகுதியில் இருந்து முன்னேறி வந்த 58 ஆவது டிவிசன் படையினர் இந்த வீதிக் குத் தெற்கே நடவடிக்கையை மேற்கொண்டிருந்த அதிரடிப்படை2 மற்றும் அதிரடிப் படை4 ஆகியவற்றுடன் இணைப்பை ஏற் படுத்துவது முதலாவது நோக்கமாக இருந்தது.

கடந்தவாரம் உடையார்கட்டுச் சந்திப் பகுதி யில் 58வது டிவிசனும் அதிரடிப்படை 2உம் இணைந்து கொண்ட அதேவேளை இந்த வீதி யில் மற்றொரு இடத்தில் 58ஆவது டிவிசனும் அதிரடிப்படை4உம் இணைப்பை ஏற்படுத் திக் கொண்டன.

இந்த மூன்று டிவிசன்களும் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டதை அடுத்து 58ஆவது டிவிசன் இப்போது புதுக்குடியிருப்பு மேற்கு களமுனையில் இருந்த தனது கவனத்தை பெரும்பாலும் வடக்கு, வடமேற்கு நோக்கித் திருப்பத் தொடங்கியது.

புதுக்குடியிருப்பை சுற்றியிருக்கின்ற இராணுவ முற்றுகையை இன்னமும் இறுக்குவது 58 ஆவது டிவிசனின் இரண்டாவது நோக்கமாக இருந்தது.

இதன் ஒரு கட்டமாக கடந்த வியாழக்கிழமை மாலை அம்பலவன்பொக்கணைப் பிரதேசத்துக்குள் தாம் பிரவேசித்திருப்பதாகப் படைத்தரப்பு கூறியிருக்கிறது. புலிகளின் பலமான எதிர்ப்பு மற்றும் குறைந்தது 6 மணிநேரமாக நீடித்த கடும் சண்டைகளின் பின்னரே இது சாத்தியமானதாகக் கூறப்படுகிறது. பலத்த பாதுகாப்புடன் கூடிய புலிகளின் தடுப்பரண்களை உடைத்துக் கொண்டே படையினர் முன்னேறியதாகப் படைத்தரப்பு தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.



படையினர் எதற்காக அம்பலவன்பொக் கணையைக் குறி வைக்கிறார்கள் என்பது முக்கியமான கேள்வி. புதுக்குடியிருப்புக்கு வடகிழக்காக 8கி.மீ தொலைவில், சாளை கடனீரேரியின் மேற்குப் புறத்தில் அம்பலவன்பொக்கணை என்ற கிரா மம் அமைந்திருக்கிறது. இந்தப் பகுதியைக் கைப்பற்றிய படையினருக்கு சாளையில் நிலை கொண்டிருக்கின்ற 55ஆவது டிவிசன் சூட்டா தரவுகளை வழங்கியது.

581 பிரிகேட்டைச் சேர்ந்த 6ஆவது கெமுனு வோச் மற்றும் 10ஆவது இலகு காலாற்படை ஆகியனவே அம்பலவன்பொக்கணைக்குள் பிரவேசித்திருக்கின்றன.

புலிகளைப் பொறுத்தவரையில் அம்பல வன்பொக்கணை நோக்கிய அதாவது புதுக் குடியிருப்புக்கு வடக்கு மற்றும் வடமேற்கு திசைகளில் இப்போது நடந்து வருகின்ற சண் டைகள் ஆபத்தானவையாகக் கருதப்படத்தக் கவை.

சாலையை அடுத்து புதுமாத்தளனுக்கும், வட்டுளவாகலுக்கு வடக்காக உள்ள வெள்ளா முள்ளிவாய்க்காலுக்கும் இடைப்பட்ட 12கி.மீ நீளமானதும் சுமார் 2கி.மீ அகலமானதுமான கரையோரப் பிரதேசத்தை இராணுவத்தினர் பாதுகாப்பு வலயமாக அறிவித்திருந்தனர்.

இந்தப் பகுதிக்குள் பெருமளவு மக்கள் ஒதுங்கிப் போயிருக்கின்ற நிலையிலேயே அந்தப் பகுதிகளை அண்டியதாக அதாவது பாதுகாப்பு வலயத்துக்கு மேற்காக உள்ள கடனீரேரிக்கு அப்பால் தான் இப்போதைய சண்டைகள் இடம்பெற்று வருகின்றன.

ஏற்கனவே இருட்டுமடுப் பாதுகாப்பு வல யம் அறிவிக்கப்பட்ட பின்னர் உடையார்கட்டு, சுதந்திரபுரம் பகுதிகளை இராணுவத்தினர் கைப்பற்றியிருந்தனர். அதுபோன்றே இப் போது புதுமாத்தளன் பாதுகாப்பு வலயப் பகு தியை அடுத்த அம்பலவன்பொக்கணைப் பகு திக்குள் நடக்கின்ற சண்டைகளானது, இரண்டு முக்கிய நோக்கங்களைக் கருத்தில் கொண்ட தாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

முதலாவது கரையோரப் பாதுகாப்பு வலயத் துக்குள் ஒதுங்கிப் போயிருக்கின்ற மக்களை இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் கொண்டு வருவது.

அடுத்தது புலிகளுக்கான கடல்வழி விநி யோகங்கள் அனைத்தையும் முற்றாகத் துண் டிப்பது.

தற்போது அம்பலவன்பொக்கணைப் பகு தியை அடைந்திருக்கின்ற 58ஆவது டிவிசன் படையினரை தொடர்ந்து தெற்கே முன்னேறச் செய்வதன் மூலம் புதுக்குடியிருப்புக்கும், அர சினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயப் பகுதிக்கும் இடையிலான தொடர்பைத் துண் டிக்க முடியும்.

இதன்மூலம் கரையோரப் பாதுகாப்பு வல யப் பகுதி படையினரின் கைகளில் அதிக சண் டையின்றி விழுந்து விடும்.

அந்தப் பகுதி படையினரிடம் வீழ்ந்து விட் டால் புலிகளுக்கு இருந்து வந்த கடைசி கடல் வழிப் பாதையும் அடைபட்டுப் போய் விடும்.

இதன் பின்னர் புலிகளால் புதுக்குடியிருப் பில் நீண்டகாலம் நிலைத்து நின்று சண்டையிட முடியாத நிலைமை ஏற்படும்.

அதைவிட முக்கியமானதொரு விடயம் இராணுவ முற்றுகை இறுதிக் கட்டத்தை அடை கின்ற போது புலிகளின் முக்கிய தலைவர்கள், தளபதிகள் பாதுகாப்பான இடங்களுக்குத் தப் பிச் செல்லும் மார்க்கங்களும் அடைபட்டுப் போகும். இந்த நோக்கங்களை அடிப்படையாக வைத்தே 58ஆவது டிவிசன் இப்போது வடக்கு, வடமேற்குப் பகுதிகளின் வழியாக புதுக்குடியிருப்பை நோக்கி புதிய நகர்வுகளைச் செய்கிறது.

அதேவேளை சாலையில் நிலை கொண்டி ருக்கின்ற 55ஆவது டிவிசனை தாக்குதல் நகர்வுகளில் இறக்குகின்ற திட்டம் படைத்தலைமைக்கு இருப்பதாகத் தெரியவில்லை. காரணம் அதன் வசம் நீண்ட கரையோரப் பகுதிகள் இருப்பதால் தற்காப்புக்கு அதிக படைவளங்களைச் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அதைவிட புலிகள் சாலைக்கு வடக்கே ஒரு தரையிறக்க தாக்குதலை மேற்கொள்ளலாம் என்ற அச்சமும் படைத்தரப்புக்கு இருப்பதாகத் தெரிகிறது.

இதனால் இப்போது 55 ஆவது டிவிசன் வெறு மனே தேடியழிப்பு, தற்காப்பு நடவடிக்கைளில் மாத்திரம் பங்குகொண்டு வருகிறது.

அதேவேளை நந்திக் கடலுக்குக் கிழக்காக நிலைகொண்டிருக்கின்ற 59ஆவது டிவிசன் தனது 593 பிரிகேட்டை நந்திக் கடலுக்கு மேற்காக நிறுத்தியிருந்தது.

இப்போது புதுக்குடியிருப்புக்குத் தெற்காக 53ஆவது டிவிசன், அதிரடிப்படை8, அதிரடிப் படை4, ஆகியனவும் அதற்கு அப்பால் புதுக் குடியிருப்புக்கு மேற்கே அதிரடிப்படை2, அதிரடிப்படை3, ஆகியனவும் செயற்பட்டு வருகின்றன.

அதேவேளை 57ஆவது டிவிசன் ஒதுக்குப் படையாக விசுவமடுப் பகுதியில் நிற்கிறது.

புதுக்குடியிருப்புக்கு தெற்கே 53 ஆவது டிவிசன் 800 மீற்றர் தொலைவில நிற்பதாகவும், அதிரடிப்படை4.4 கி.மீ மேற்கே நிலைகொண்டிருப்பதாகவும் படைத்தரப்பு தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் புதுக்குடியிருப்பு சந்திக்கு அண்மை யாக மக்கள் இன்னமும் வசிப்பதாக அறியப் படுகின்றது. இந்தளவுக்கு நெருக்கமாகப் படை யினர் முன்னேறி நிலைகொண்டிருந்தால் அந் தப் பகுதியில் மக்கள் வாழ்வது நிச்சயம் சாத் தியமற்றதாகவே இருந்திருக்கும்.

இராணுவத்தினர் அதிகளவிலான படைக ளைக் களமிறக்கியிருக்கின்ற இந்தப் போர்க் களம் இலங்கை இராணுவத்துக்கும் சரி புலிக ளுக்கும் சரி இதுவரை சந்தித்திராத அனுபவங் களைக் கொடுத்திருக்கி றது.

காரணம், இதற்கு முன்னர் படைத்தரப்பு இந்தளவு படைப்பிரிவு களை, படையினரை, ஆயுதங்களைப் பயன் படுத்தி எந்தவொரு தாக்குதலையும் நடத்தி யதில்லை.

அதுபோன்றே புலி களும் இப்படியான தொரு சமரை எதிர் கொண்டதில்லை.

நாளுக்கு நாள் இந் தப் போர்களம் சுருக்க மடைந்து வருகிறது. இப்போது புலிகளிடம் 100 சதுர கி.மீ பரப்பள வான பிரதேசம் கூட இல்லை என்று படைத் தரப்பு கூறுகின்றது.

ஆனாலும் சண்டைக ளின் தீவிரம் குறைந்த தாகத் தெரியவில்லை. கடந்த வார நடுப்பகுதி யில் இரண்டு நாட்கள் நடந்த சண்டைகளில் மட்டும் 25 படையினர் கொல்லப்பட்டதாக வும், 175 பேர் வரை காயமுற்றதாகவும் பாதுகாப்பு வட்டாரங்க ளுடன் தொடர்புடைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதை உறுதிப்படடுத்தும் வகையில் கடந்த வாரம் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றொரு தகவலை வெளியிட்டிருந்தார்.

கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 1000 படை யினர் காயமடைந்திருப்பதாக அவர் கூறியிருந் தார். இது புலிகளின் எதிர்ப்பு சற்றும் குறைய வில்லை என்பதற்கு எடுத்துக் காட்டாக அமைந்திருக்கிறது.

அரசாங்கம் சண்டைகளில் கொல்லப்படும் காயமடையும் படையினரின் விபரங்களை வெளியிடாமல் இருக்கின்ற நிலையில் சண் டைகளில் ஏற்படும் இழப்புகளை நீண்டகாலத் துக்கு மறைக்க முடியாது.

இராணுவத்தின் அதிகளவிலான படைப்பிரி வுகள் குவிக்கப்பட்டு சிறப்புப் பயிற்சி பெற்ற படையினரைக் களம் இறக்கிய போதும் புலிக ளின் எதிர்ப்பு குறையாதிருக்கிறது.

அவர்களின் போரிடும் திறனில் பெரும் வீழ்ச்சி இருப்பதாகத் தெரியவில்லை.

அத்துடன் அண்மையில் நிகழ்ந்த சண்டை களில் புலிகள் தாராளமாகப் பயன்படுத்திய ஆயுதங்களைக் கொண்டு அவர்களிடம் போதியளவுக்கு ஆயுத தளபாடங்கள் இருப் பதை தெளிவாகவே உணர்ந்து கொள்ள முடிந் திருக்கிறது.

அத்துடன் புலிகளிடம் இருந்து பெருமள விலான ஆயுதங்களைக் கைப்பற்றியதாகப் படைதரப்பு வெளியிடும் தகவல்கள் அவர்கள் ஆயுத தளபாடப் பற்றாக்குறையைச் சந்திக்க வில்லை என்பதை உணர்த்துகிறது.

அதேவேளை அவர்கள் போரிடுவதற்குப் போதிய ஆளணியின்றி இருப்பதை வெளிப் படையாகவே ஒப்புக் கொண்டிருப்பதும் குறிப் பிடத்தக்கது.

இதற்கிடையே கடந்த வாரம் ஒட்டுசுட்டா னுக்கு தெற்கே 533 பிரிகேட் துருப்புகளுக் கும் புலிகளின் குழுவொன்றுக்கும் இடையில் சண்டை நடந்திருக்கிறது. இது இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியாகும்.

இந்தச் சண்டையில் புலிகள் 3 பேர் கொல் லப்பட்டதுடன் படையினர் சிலர் காயமுற்ற தாக பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளி யிட்டன.

கொல்லப்பட்டவர்கள் கரும்புலிகள் அணி யைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது. அவர்களிடம் இருந்த தற்கொலைக் குண்டு அங்கிகள் மற்றும் ஆயுதங்கள் கரும்புலித் தாக்குதலுக்காக இவர்கள் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.

இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இப்போது அடிக்கடி இவ்வாறான மோதல்கள் நடைபெறுவது வழக்கமாகியிருக்கிறது.

அதைவிடப் புலிகள் இப்போது கரும்புலி களை சண்டைக் களங்களில் பயன்படுத்தி வரு வதால் படையினருக்கு சிக்கல்கள் ஏற் படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்தவாரம் உடையார்கட்டுக்கு வடக்கே நடந்த சண்டை யின் போது புலிகளின் உறுப்பினர் ஒருவர் முன்னேறிச் சென்ற 581பிரிகேட்டைச் சேர்ந்த 11வது இலகு காலாற்படையினர் மத்தியில் குண்டை வெடிக்க வைத்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறியுள்ளன.



இந்தச் சம்பவத்தில் படையினர் உயிரிழந் தது பற்றிய தகவல்களை உறுதிப்படுத்த முடி யாவிட்டாலும் பலர் காயமுற்றதாகக் கூறப்பட் டிருக்கிறது. படைத்தரப்புக்கு இப்போதே கைப்பற்றிய பிரதேசங்களின் பாதுகாப்பு பற் றிய சிக்கல்கள் எழத் தொடங்கி விட்டன.

இந்தநிலையில் ஆளணி வளச் சிக்கலைச் சமாளிக்க ஓமந்தைப் பகுதி, மணலாறு மற்றும் பூந்தோட்டம் பகுதிகளில் விசேட அதிரடிப் படையினர் மேலதிகமாக நிறுத்தப்பட்டிருக் கின்றனர்.

இங்கு 24 முகாம்களை விசேட அதிரடிப் படை புதிதாக அமைத்திருக்கிறது.

ஒரு புறத்தில் தாக்குதல் சண்டைகள் புதுக் குடியிருப்புக் களமுனையில் தீவிரம் பெற்றி ருக்கின்ற நிலையில் படையினர் பின்புலத்தில் புலிகளின் சவால்களையும் சிக்கல்களையும் இப்போதே எதிர்“கொள்ளத் தொடங்கி விட்ட னர். புதுக்குடியிருப்பைக் கைப்பற்றினாலும் புலிகளின் இந்த ஊடுருவல் அணிகளின் நட வடிக்கைகள் அரசபடைகளுக்கு ஒரு நீண்ட கா லச் சிக்கலாகவே இருக்கும்


நன்றி : வீரகேசரி

முதல்வர் கருணாநிதியை விட்டு விடுங்கள்




உணர்ச்சி உள்ளவன் தான் மனிதன் . தனியே உணர்ச்சி வசப்படுதல் மட்டும் செய்பவனே தமிழன். உணர்ச்சி வசப்படுதலின் உச்சங்களான கண்ணீர் விடுதலும் காலில் விழுதலும் தன்னைத்தானே எரித்துக் கொள்ளலும் தமிழனுக்கே உரித்தான குணங்கள்.

"மாதமோ சித்திரை ..நேரமோ பத்தரை... மக்களோ நித்திரை ...' என்ற அடுக்கு மொழிகளை மாய்ந்து மாய்ந்து சொல்லி உருகிப்போனவர்கள் நாங்கள். உடன் பிறப்புகளின் உணர்ச்சிகளை உருவேற்றி உருவேற்றி களங்களை உருவாக்கி கலகங்களை நிகழ்வாக்கிய கரைவேட்டிகளை அரசியல் தலைமைகளாக உருவாக்கியதே உணர்ச்சியுள்ள தமிழனின் வெற்றிகள்.

நான், என் மதம் ,என் மொழி ,என் சாதி, என் இனம் ....எம் உணர்ச்சி வசப்படுதலுக்கு இன்னும் எத்தனையோ காரணங்கள் உண்டு . தேடித் தேடிக் காரணங்களைக்கண்டு பிடித்தலிலும் நாம் தான் கெட்டிக்காரர்களாச்சே.

"பாம்மையும் பாப்பானையும் கண்டால் ..பாப்பானை முதலில் அடி " என்று ஏன் ? எதற்கு? என்று காரணம் கேட்டத்தோன்றா வினை ஒன்றையே எதிர்பார்த்தவர்கள் நம் தலைவர்கள். பாப்பானின் உயர்வுக்குக் காரணம் கல்வியறிவு. அதில் அனைவரும் மேம்மட வேண்டுமென்ற தேவையை உணர்த்தும் போராட்டம் அவர்களுக்கு அவசியமாகப்படவில்லை.

அதே அரசியலை வழிபட்டவர்கள் பின் தொடர்ந்தவர்கள் உணர்ச்சிகளை உருவேத்தி உருவேத்தி உருவாக்கிய வையே கழக கட்சி குழு அரசியல். இந்த உணர்ச்சிக்குவியலில் உள்வாங்கப்பட்டு இன்றும் (ஐம்பது அறுபது வருடங்கள் இருக்குமா..?) நமக்குள் குத்து வெட்டுகள்.

இவைக்கப்பாலும் உலகம் விரிந்திருக்கின்றது , வேறு வித அரசியல் சமூக கட்டமைப்புகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்திருந்தும் திருந்த விரும்பாத மனோபாவம் பிடித்த நோயாளிகளாகவே நாம் இருக்கின்றோம். ஒருவரை ஒருவர் குறை சொல்லுவதிலும் அடித்துக் கொள்ளு(ல்லு)வதிலும் கேள்வி கேட்காது அடி தொழுவதிலும் உணர்ச்சி வசப்படும் எம் தமிழினத்தை அடித்துக்கொள்வதில் ஆளே கிடையாது.

இதனைப்புரிந்து கொண்ட சாணக்கியத்தாலோ அல்லது இதே உணர்ச்சிக்குழப்ப அரசியலில் இருந்து முளைத்ததனாலேயோ என்னவோ முதல்வர் கருணாநிதி அவர்களும் அவ்வாறு இயங்குவது அவர் தவறு மட்டுமா? அவரை வளர்த்து விட்டதும் வளரவிட்டதும் உணர்ச்சிக்குழம்புகளான நாம் தானே.

முதல்வரின் தேவை ஒரு அரசியல் தலவனாக ஆட்சித்தலைவனாக வேண்டும் என்பதுதானே. நமக்கெல்லாம் இருக்கும் ஆசைகளைப்போல அவருக்கும் இருந்ததில் என்ன தவறு?

அவராக விரும்பிக் கேட்டா நாம் அவரை உலகத்தமிழினத்தலைவராக்கினோம். நம் உணர்ச்சிக் கண்மணிகள் உசுப்பேத்தி விட புகழுக்கு மயங்காத மனிதன் யாருண்டு. நாம் கொடுத்ததை அவர் வைத்திருக்கின்றார்.

ஒரு நாட்டின் மானில அரசியல் கட்சித்தலைவர் எப்படி உலகத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்ய முடியும் என்று உணர்ச்சிவசப்படும் மண்ணாங்கட்டிகளான நமக்குத்தெரியவில்லையே.. அது அப்படியிருக்க அவரை உலகத் தமிழ் தலைவராக வலிந்து கற்பிதம் செய்து விட்டு நாம் அடிக்கும் கூத்துகளுக்கு அளவே இல்லாது போய்விட்டது.

சென்னையில் மழை பெய்தால் மதுரையில் வெயில் கொளுத்தினால் ஒரு குடை கேட்பதை விட்டு விட்டு எங்கோ ஒரு மூலையில் அடிபட்டுச் சாகும் தமிழனுக்காக அவரை "அதைச் செய் இதைச் செய் " என்று துன்பப் படுத்துவது எவ்விதத்தில் நியாயம். அவரால் முடியாது என்பதும் அவரின் அதிகாரங்களும் ஆசையும் ஆட்சியும் இடம் கொடுக்காது என்பதும் தெரிந்து கொண்டே உணர்ச்சி வசப்படுவதும் வசை பாடுவதும் பஸ்ஸைக்கல்லால் அடிப்பதுவும் கொடும்பாவியைக் கொளுத்துவதும்.. என்ன இது.. கல்தோன்றி மண்தோன்றாக்காலத்தில் தோன்றிய மூத்த குடி இன்னும் அங்கேயா நின்று கொண்டிருக்கின்றது.

மக்கள் போராட்டங்களும் வெற்றிகளும் அதே மக்களாலேயே உருவாக்கப்பட வேண்டும். ஈழத் தமிழ் மக்களின் வெற்றிகளை உருவாக்கவோ தீர்மானிக்கவோ முதல்வர் கருணாநிதியால் முடியவே முடியாது. அவர்கள் தேவையும் களமும் வேறு. இவர் களமும் தேவையும் வேறு.

அவர் தன் ஆட்சி போதையையும் தன் வாரிசுகளின் வருங்காலத்தையும் ஸ்திரப்படுத்துவதில் என்ன தவறு. நாமெல்லாம் நம் குடும்பம் குட்டிகள் என்று இருப்பதைப் போலவே அவரும் இருக்க முயலுகின்றார். அவரைத் தூக்கி வைத்திருப்பவர்களும் தூக்கி எறியக் கூடியவர்களும் தமிழ் நாட்டு மக்களே.

தமிழ் நாட்டு மக்களின் அரசியல் உரிமைகளாலும் மேலான கடமைகளாலும் உருவாக்கப்பட்டவர்களே முதல்வர் கருணாநிதி ஜெயலலிதா சுப்பிரமணிய சுவாமி சிதம்பரம் போன்றவர்கள். தங்களைக்காப்பாற்றுவதற்கும் தலையில் மிளகாய் அரைத்துக் கொள்வதற்கும் அனுமதி அளித்தவர்களும் தமிழக மக்களே. அவர்கள் வேலையை அம்மக்களே பார்த்துக் கொள்வார்கள்.

ஆகவே அவரை தயவு செய்து விட்டுவிடுங்கள். அவர் நன்மைக்கோ தவறுகளுக்கோ அனுபவிக்கப் போபவர்கள் அவர் வாரிசுகளே. அதை அறிந்து கொள்ள நமக்கு அதிக காலமும் தேவைப்பட மாட்டாது.

எனவே அபரிமித உணர்ச்சி வசப்படுதலை முதலில் விட்டொழிப்போம்.அறிவு பூர்வமாகச் சிந்திப்போம். மக்களால் உருவாக்கப்படும் போராட்டங்களைத் தலைமை தாங்க அரசியல் வாதிகள் தேவையில்லை. அவர்களைத் தேடாதீர்கள்.பொருத்தமற்றவர்களையெல்லாம் மக்கள் தலைகளில் பொருத்திப்பார்க்காதீர்கள். மக்களிலிருந்தே சரியான தலைமைகள் உருவாகும். மக்கள் அவர்களை இனம் கண்டு கொள்வார்கள். தற்போதைய உலக ஒழுங்கு பொருளாதார நலன்களின் மீதே கட்டப்பட்டிருக்கின்றது. அதனைப் புரிந்து கொண்டு அவ்வகை முன்னேற்றத்தில் கவனம் செய்வோம். இஸ்ரேலியர்களிடம் இருந்த அளவுக்கதிகமான செல்வம் அவர்களுக்கு ஒரு நாட்டையே வாங்கிகொடுத்தது. அது சரியாயினும் பிழையாயினும் ...அதுவே உண்மை.

புலிகளைப் பின் பற்றுவோரும் அவர்களை வழி மறிப்போரும் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உங்கள் கருத்துகளை வரித்துக் கொள்ளவோ அரசியல் புலமையையை மெச்சிக்கொள்ளவோ துன்பத்தில் சாகும் மக்கள் யாருக்கும் சம்மதமில்லை. அவர்கள் தங்கள் உயிர் காத்தலுக்கான உபாயங்களைத் தேடிக்கொண்டிருக்கின்றார்களேயன்றி உங்கள் உளறல்களைக்கேட்டுக்கொண்டிருக்கவில்லை.

அவர்களுக்குத் தேவை அறிவு பூர்வமான வழிகாட்டுதல். பொருளாதார வெற்றி .அதனால் தொடரும் விடுதலை .. சுதந்திரம்.

Wednesday, February 18, 2009

அன்னை சோனியாகி ஜே

இந்திய மாதாக்கீ ஜே.. அன்னை சோனியாக்கீ ஜே... ஏனெனில் நாளைய அகன்ற பாரதத்தை ஆளப்போகும் புத்திர சிகாமணிகளைப் பெத்தெடுத்த பிஸ்ஸாப் புத்திரிகே ஜே...

ஹை ஸ்கூல் எடுயூகேஷன் எடுத்த ஹைடெக் யுத்தம் வன்னியில் காயாத இரத்த ஆறு .. பிஸ்ஸா ஸோஸும் சிகப்புத்தான் .. தமிழன் இரத்தமும் சிகப்புத்தான்...

பிஸ்ஸா ஸோஸ் சாப்பிட்டா செமிபாடு..தமிழன் இரத்தம் ஊத்திட்டா கொதிபாடு...

அன்னையே ... நீ வாழ்க... உன் பிள்ளைங்களுக்கு சேர்த்து வைக்கும் புண்ணியம் வாழ்க....

என் பிள்ளையை நீ கொடுத்த குண்டில் தொலைத்து விட்ட போதும் அன்னையாய் சபிக்க மனம் வருகுதில்லையே.. அன்னையே வாழ்க...

செத்துத் தலை துவள முன் அம்மா என்று கதறியழுத என் பிள்ளையின் அவலம் போல..நீயும் கேட்காதிருக்க வேண்டும் அன்னையே...

உன் புருஷனின் கைகள் பிடித்திழுத்து விலகிப்போன என் தங்கையின் அவலம் உனக்கும் வராதிருக்க வேண்டுகின்றேன் என் அன்னையே...

உன் பாரத் மாதாவின் இராணுவக் காவல் என் வீட்டில் பிணமலை குவித்தது போல் உன் வீட்டிலும் நிகழாதிருக்க வேண்டுகின்றேன் அன்னையே...

அடுத்த நேரத்துச் சோத்துக்கழும் தமிழகமே அடுத்த நேர வாழ்வுக்கழும் ஈழத்துச் சோதரனைப்பார்..

உன் வயிறார சோறு கிடைக்க வேண்டுகின்றேன்... என் உயிர் துறக்கும் வேளையிலும்..

அன்னை சோனியாஜி ...வாழ வைப்பார் உங்களை ..எங்களைக்கொல்லுகின்ற போதிலும் நம்புங்கள்...

While studying English at the University of Cambridge, Sonia met Rajiv Gandhi, a mechanical engineering student and son of Indian Prime Minister Indira Gandhi. The couple married in 1968 and moved into the prime minister’s official residence, although Rajiv eschewed politics for a career as a commercial airline pilot.

Imagine if the U.S. were run by an Indian Hindu woman without a college degree. It's tough: the U.S. has never elected anyone who's not Christian, white and male—even as Vice President. But India, which is an even bigger democracy, is run in all but name by an Italian Catholic widow with a high school education. In the 16 years since the assassination of her husband Rajiv, Sonia Gandhi, née Maino, has become the face of the country's most famous family. As leader of India's Congress Party, she has also managed the largest political party in the country and steered it to power. And she has done all this wearing a sari.

When her party won national elections in 2004, she was offered the prime ministership; she listened to her "inner voice" and turned it down, and anointed the economist Manmohan Singh in her stead. It was a gesture that was, well, Gandhian. And it solidified her hold on power. For ordinary Indians, this act of renunciation held tremendous mythic resonance. Though Singh is Prime Minister, it is Sonia, 60, who is the kingmaker. And her most lasting legacy may lie in her children Rahul and Priyanka, one of whom may well become India's Prime Minister someday, ascending to the high office that their mother has—thus far—renounced.

Mehta is the author of Maximum City: Bombay Lost and Found


http://www.time.com/time/specials/2007/time100/article/0,28804,1595326_1615513_1614685,00.html




உடைபடும் இந்தியப் "பிம்"பங்கள்


நினைத்துப் பார்க்கும்போதே ஆச்சரியமாயிருக்கின்றது. கோபுரத்தில் இருந்த எண்ணங்கள் குப்பைக்குழியில் உறவாடும் காட்சி அதிர்ச்சியையும் ஆச்சரியம் கலந்த அவலத்தையும் தருவது தவிர்க்க முடியாதது. எனது இந்தியப் பிம்பங்களுக்கும் இதுவே நிகழ்ந்திருக்கின்றது.

1984 இல் இறவாப் புகழுடன் இருந்த அன்னை இந்திரா இறந்துபட்டபோது ஒரு கணம் விக்கித்து விக்கி விக்கியழுத காட்சி கண் முன்னால் தெரிகின்றது. இந்தியா என்பது ஒரு நாடல்ல என்பதுவும் ஒரு ஆதர்ஸம் என்பதுவும் ஈழத்துத் தமிழனால் ஒத்துக்கொள்ளப்பட்டிருந்தது அந்தக் காலத்தில். ஆட்டிடைக் குலத்தில் பிறந்த கோவணக் காந்தியின் சத்திய சோதனை பைபிளாகப் பார்க்கப் பட்டது அப்போது. ரோஜாவின் ராஜா நேரு எங்களுக்கும் பிரியமுள்ள மாமாவாகிப்போனதும் அப்போதுதான்.

கோகலே போன்ற தலைவர்களையெல்லாம் பின் தள்ளிக் காந்தி முன் வந்ததோ தன் விருப்புக்குரிய நேருவை முன்னிறுத்தி இந்தியாவைத் துண்டு போட்டதோ கூட எங்களுக்குப் பெரிதாகப் படவில்லை. சொல்லப்போனால் பாகிஸ்தானை உருவாக்கிய ஜின்னாவின் மீது கோபம் கூட இருந்தது.

இன்று நாங்கள் இரத்தத்தில் குளிக்கும் போது அதே தவறைச் செய்யத்தவறிய இராமநாதன் ஜீ ஜீ போன்ற தமிழினத்தலைவர்களின் மீது கோபம் வருகின்றது.

காஸ்மீரத்தை இந்தியாவுடன் சேர்க்க முற்பட்ட "இந்து" முட்டாள் மன்னனையும் மன்னிக்கும் பக்குவம் அன்று இருந்தது. இன்று எம் இருப்புக்காகப் போராடும் போது அம்மக்களின் கண்ணீரினதும் செந்நீரினதும் ஈரம் புரிகின்றது. முட்டாள் மன்னனின் வேண்டுதலுக்காக காஸ்மீரத்தைப் பிரிக்க முற்பட்ட ரோஜாவின் ராஜா தன் புஜ பலத்தால் ஜின்னாவின் மூச்சை அடக்கியிருந்தால் இன்று பாகிஸ்தான் என்ற எதிரியின் மிரட்டல்கள் இல்லா அகன்ற பாரதம் இருந்திருக்கும் என்ற எண்ணமும் வந்தே போகின்றது. துணிவில்லாப்பாட்டனின் பேராண்டிக்கு அந்தத் தைரியம் இருந்தது என்பதை இன்றும் இரத்த ஈரத்தில் காய்ந்து போக ஈழத்துத் தெருக்களும் அந்த மாறாத் துயரத்தை விலக்கி வைக்கத்தெரியாது கலங்கிக்கொண்டிருக்கும் மக்களுக்கும் தெரியும்.

இந்தி(ய) இராணுவம் துடைத்தழித்த சுவடுகளும் கிழித்தெடுத்த யோனிகளும் தமிழ் இரத்தமே சிந்தியது. சோழச் செருக்குகளின் தினவெடுத்த தோள்கள் கலிங்கத்திலிருந்து இறக்கியிருந்த புளிச்ச தயிரின் நிணம் மணக்கும் பூனூல் புரோகிதரின் வர்ணத்தில் கலந்து விட்ட தமிழகத் தமிழனின் இரத்தமும் தன்னைத் தாழ்த்திக்கொண்டு சாதி பார்த்துப் பிரிந்து நிற்கின்றது.

வாள் நுனிக்கில்லா வல்லமை புண்ணாக்குப் புரோகிதரின் பாவாடை நாடாவுக்கு இருப்பதே இன்றைய பாரதம். இராஜீவ் என்ற மக்கள் மன்னனின் படுக்கை அறைக்கு இன்று பாரதமே கட்டுண்டிருப்பதே காந்தியின் கனவை நனவாக்கிய அகன்ற பாரதம்.

வெள்ளையரின் நிர்வாக ஒழுங்கு படுத்துதலே இந்தியா. அக்தில்லாது அத்தேசம் எக்காலத்தும் இருந்ததில்லை. இந்தியப்பல்லாக்கை இன்று தோள் கொடுத்துச் சுமப்பது எமது தமிழரே. அடிமையாய் வாழ்வதில் சுகம் காணும் சோம்பேறி இனம் தமிழினம்.

மலையாளத் தெலுங்கு கன்னடக் கம்மனாட்டிகளுக்கு கட்டம் கட்டிச் சலாம் போட கோஷ்டி கட்டித் தமிழன் தரையில் உருளும் புண்ணிய பூமியே தமிழகம். வந்தாரை வாழ வைக்கும் தமிழினம் என்று எதுகை மோனையுடன் தன்னையே எள்ளி நகையாடும் உயரிய மனம் படைத்தவனே தமிழன்.

இத்தனை உயிர்கள் வெந்து பட்டும் இன்னும் இழுபறி நிலையில் அடுத்த தேர்தலில் தேர்ந்தெடுக்க தமிழனே இல்லாத் தலைவர்களை வைத்துக் கொண்டு
கன்னடப் பாப்பாத்தி செயலலிதா தெலுங்கு திம்மன் விசய காந்த் கன்னடத்துக் கண்டக்டர் ரசனி... தமிழனைக்காட்டிக் கொடுத்து உயிர் தரித்து வந்திருக்கும் மு.க ...முடிவில்லாத்தலையெழுத்துடனும் முன்னேறும் கனவுடனும்.... தமிழன்.

இந்தி(ய) ஜனநாயகம் இதுவும் கொடுக்கும் இன்னும் கொடுக்கும். அகன்ற பாரதக் கனவில் உன் துண்டையும் பறித்தெடுக்கும். பாரத் மாதாக்கீ ஜே.. என்ற கோஷத்துடன் உன் வயிறும் நிறையும்.


அகன்ற பாரதக் கனவு வன்னிக்காட்டிலும் யாழ் மணற் திடரிலும் கால் பதிக்கும் காலம் எல்லாம் அவர் கழுத்துத் தறிக்கும் ஓர்மத்துடன் அன்னை இந்திராவுக்காக அழுத அதே கண்கள் ரெளத்திரத்துடன் காத்திருக்கின்றன.

உயிர் தறிக்கும் தவ்பீக்கள் ஒன்றும் உருவானவர்கள் அல்ல.. உருவாக்கப்பட்டவர்கள். உன்னால் உன் ஆணவத்தால் உன் புஜ பலத்தால் இல்லை உன் வீணாய்ப்போன இந்திரியத்தாலும். அதே கணக்கு நேர் செய்யப்படுவதற்காக வன்னிக்காட்டில் ஆக்ரோஷத்துடன் காத்திருக்கின்றது.



இந்தி ராமன் குரங்குகளாய்க் கண்ட வாலிகள் முடிவெடுக்க வேண்டிய நேரம் இது. அண்ணனைக் கொலை செய்து இராட்சியத்தை அடையும் கனவுகள் உண்டாயின் அவ்வாறே இருந்து கொள்ளுங்கள். உங்கள் ஆயுளும் நீடித்திருக்கும் உங்கள் மனைவிகளையும் தள்ளி வைத்திருக்கும் வரை. கோடியாக் கரை வரை பரந்திருக்கும் மீனவக் குகன்களும் உங்கள் தோழமையைத் தரம் பிரித்துப் பாருங்கள். உங்கள் உயிரைக்குடிக்கும் பகைவர்களைத் தோழமை செய்யும் முகர்ஜிகளையும் இனம் கண்டு கொள்ளுங்கள்.

இருபதே மைல் கடலெல்லையிலுள்ள தமிழ் உனக்குப் பெரிதா இருநூறே மைல் தொலைவுள்ள பண்டிட்/முல்லா உனக்குப் பெரிதா..? தமிழ் ஈழம் கிடைத்து விட்டால் கச்ச தீவென்ன காங்கேசந்துறையும் உன் துறையாகுமே...

எது எப்படியிருந்தாலும் இந்தியப் பெரு நிலவாதத்திற்கு அஜீரணம் கொடுக்கும் குளிகை வன்னிக்காடுகளில் தான் தயாராவதாய் ஒரு கனவு. அது இத்தாலியப் பிஸ்ஸாக்களுக்கும் பெங்காலிப் பரோட்டாக்களுக்கும் தெரியும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதே தமிழன் கருத்தாகும்.

தாலி அறுக்கும் சோனியா


அன்னை சோனியாவின் இழப்பு எத்தனை பாரதூரமானது என்பதை உணரக் கூடியதாகவே இருக்கின்றது. அன்னை சோனியாவிற்கு மட்டுமல்ல எந்தப் பெண்ணிற்கும் முகவரியாய் இருக்கும் கணவனின் இழப்பு மிகக்கொடியதே..அன்பை பாசத்தைப்பகிர்ந்து கொள்ளும் இடம் வெறுமையாகிப் போவது மிகவும் துயரமானதே..அவரின் சோகம் ஆறுதல் படுத்த முடியாததே...
அவரின் தன்னிரக்கம் ( கணவனின் மரணம் குறித்தான ) கோபமாகவும் சில வேளைகளில் வெறுப்பாகவும் மாறக்கூடியது (தன் அன்புக்குரியவர்களின் இழப்பு இராஜீவின் மீதான வெறுப்பாகி தன்னையும் இராஜீவையும் அழித்துக்கொண்ட தனுவின் வெறுப்பைப்போல) புரிந்து கொள்ளப்படக்கூடியதே.

ஆனாலும் இவ்வெறுப்பானது ஒரு இனத்தின் மீதான வெறுப்பாகிப் போவது தான் துரதிஷ்டமானது. பிராந்திய வல்லரசுக்கனவுடன் இருக்கும் ஒரு நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் உழைப்பால் கிடைத்த வல்லமையை தன் சுய மனத்திருப்திக்காக துர்ப்பிரயோகம் செய்வது அதை விட துரதிர்ஷ்டமானது.

இன்று தம் பிள்ளைகளைப்பறி கொடுத்து தம் கணவரைப் புதைகுழியில் மூடி தாலி அறுத்து முடங்கிப் போகும் ஈழத்துப் பெண்களின் துயரமும் கோபமும் அத்தகையதே.

இராணுவ மேலாண்மையையும் ஆணவ அலட்டல் நிறைந்த வழிகாட்டுதல்களும் இன்று வன்னி மண்ணைச் சிவப்பாக்கிக் கொண்டிருக்கின்றது. இத்தனையையும் செய்து கொண்டிருப்பது அன்னை சோனியாவின் தனி மனித வெறுப்பும் மிஸ்டர் முகர்ஜி போன்றோரின் அடிவருடித்தனமுமே . சிங்களத்திற்கு கொம்பு சீவி விட்டு வேடிக்கை பார்ப்பதுடன் அடிதடி சவடால்களையும் (புலிகள் பாதுகாப்புக் கேடயமாக வைத்திருக்கும் மக்களை விடுதலை செய்ய வேண்டும், ஆயுதங்களை கீழே போட வேண்டும் எக்ஸ்ஸெட்ரா) மிஸ்டர் முகர்ஜி ,சிதம்பரம் போன்றவர்கள் விட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

ஆயுதம் வைத்திருப்பவர்களுடன் பேசவும் முடியாது..பிறரைப்பேசவும் சொல்லமுடியாது என்று சொல்கின்றார் இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம். இதே காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் திம்புவில் இலங்கை அரசிற்கும் தமிழ் ஈழ இயக்கங்களுக்கும் பேச்சு வார்த்தை நடந்தது என்பதுவும் அதை வழி நடாத்தியதே இந்திய அரசுதான் என்பதையும் அவர் வசதியாக அல்லது வசதிக்காக மறந்து விட்டார். ஆனாலும் ஒரு உள்துறை அமைச்சருக்கு இத்தனை மறதி கூடாதுதான்.

வடக்கே சீனா நெருக்குகின்றது கிழக்கே பங்களாதேசமும் மேற்கே பாகிஸ்தானும் தூக்கத்தைத் தொலைய வைக்கின்றன என்று கூக்குரல் இடும் இந்திய இராஜதந்திரிகளே இன்றைய உங்கள் கொக்கரிப்புகள் நாளை தெற்கே காலை நீட்டி நிம்மதியாகத் தூங்கவும் விடாது செய்யும்.

அது விதி. நியூட்டனின் மூன்றாவது விதி.

"ஒவ்வொரு தாக்கத்திற்கும் அதற்குச் சமமானதும் எதிரானதுமான மறுதாக்கம் உண்டு."

அனுபவத்தை உங்கள் நண்பர்களான அமெரிக்காவிடமும் இரஷியாவிடமும் கேட்டுப்பாருங்கள். இன்றைய அரசியல் வாதிகளின் தனி மனித காழ்ப்புகளும் அதீத சுய நம்பிக்கையும் நாளை கேடு சூழ வைக்கும். இரும்புக்கரம் கொண்டு மக்களை அடக்கி வைத்திருந்த இரஷியாவே உடைந்து போய்விட்ட பின் இலஞ்ச லாவண்யத்தால் ஒட்டுப்போட்டு வைக்கப்பட்டிருக்கும் இந்தியா ஒன்றும் பலம் வாய்ந்தது அல்ல.

இந்தியாவை இன்றும் நம்பிக்கொண்டிருக்கும் ஈழத்து மக்களே ..இந்தியா ஒன்றும் இரட்சகன் அல்ல. புலிகளின் தலைவரைத் தொலைக்கும் வரை இந்தியாவின் கரங்களில் இரத்தம் காய்ந்து விடப்போவதில்லை.

மெள்னமாக அழுவதை விட்டு வன்னிக்காட்டின் அவலங்களை வெளியுலகின் கவனத்திற்குக் கொண்டு வாருங்கள். நீங்கள் இது வரை சாதித்தவையே இன்று உலகின் மனச்சாட்சியை உலுப்பிவிட்டிருக்கின்றது. அது தழுவியே இத்தனை அரசியல் நாடகமும் நீலிக்கண்ணீரும். அடிமேல் அடித்தால் அம்மியும் நகரும். நீங்கள் போராடுங்கள் உங்களை நம்பி. அதுவே அன்னை சோனியாவால் அறுக்கப்படும் தாலிகளைக்காப்பாற்றும்.

"வல்லன வாழும்" கூர்ப்புத்தத்துவம். வாழ்வதற்கு வழியா இல்லை பூமியில்.

Sunday, February 15, 2009

இந்தியாவிற்கு ஆப்படிக்கும் பாகிஸ்தான்...


26/11 ..இறுமாந்திருந்த இந்தியாவுக்கு விழுந்த மரண அடி. மரணித்துப்போன உயிர்களுக்காகவல்ல ...தன் பிராந்திய வல்லரசுக்கனவில் விழுந்த அடிக்காக அது உண்மையாகவே கவலைப்பட்டது. பாகிஸ்தானின் எல்லைகடந்த பயங்கரவாதம் பற்றி உலக நாடுகளின் அனுதாப அலையைப் பெற்றுக்கொள்வதற்காக ஓடி ஓடி உதவி கேட்டது.

உலக நாடுகளிடம் இருந்து கிடைத்ததென்னவோ சில பல கண்டனங்களும் அறிக்கைகளும் தான்.. இதற்கும் மேலாக அன்றைய அமெரிக்க ஜனாதிபதி அண்டப்பிரசண்டன் புஸ்ஸின் செல்லப்பிள்ளையான பாகிஸ்தானை கடிந்து கொள்ள் யாருக்கும் துணிவில்லை. இது போன்ற ஒரு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தூண்டி விடும் துணிவு இந்தியாவிற்கு எப்போதும் இருக்கப்போவதில்லை. காஸ்மீர் சார்ந்த முஸ்லீம் அமைப்புகள் காஸ்மீரின் எல்லைகளைக் கடந்தும் இந்திய மண்ணில் இவ்வகை வன்முறைகளை பாகிஸ்தானின் தூண்டுதலால் நடாத்தத்துணியும் போது காஸ்மீரில் இந்துப்பண்டிட்களின் உரிமை பற்றி கதைக்கும் இந்தியாவிற்கும் ..இது ஒரு பொய்யானதேயென்றாலும் ஒரு காரணம் உண்டு.

எப்படியானதென்றால் இவ்வகையான எந்த இடையூறுகளும் அதிகப்பிரசங்கித் தனங்களும் இல்லாது தானும் தன் உரிமைப்பாடுகளும் பற்றிப் போராடிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழ் இனத்தின் போராட்டத்தை நசுக்க இந்தியா ஆயிரம் காரணம் சொல்லிக்கொண்டிருப்பதைப்போல.

பாகிஸ்தானுடனான போராட்டத்திற்கு அதிக விலை கொடுக்க வேண்டும் என்பதை இந்தியா தெரிந்து கொண்டிருக்கின்றது. அதே வேளை அவ்வகையான ஒரு போராட்டத்தில் (பின்னணியில் அமெரிக்கக் கரம் ) வெற்றி பெறும் நிகழ்தகவு பற்றியும் அது சந்தேகமே கொண்டிருக்கின்றது. அது எப்படியென்றால் 26/11 இன் பின்னான காலத்தில் பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதல் நடாத்த வேண்டுமென்று எழுந்த குரல்கள் ஈனஸ்வரத்திலேயே அமுங்கிப் போய் விட்டதை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.

இதுவே ஒரு இலங்கையாகவோ மாலைதீவாகவோ இருந்தால் இந்தியாவின் ஜெற் விமானங்கள் சீறிப்பறந்து வித்தை காட்டியிருக்கும். சிங்களவனை பயங்காட்ட உணவுப்பொதி போட்டதெல்லாம் அதற்குள் மறந்து விடாது.

இந்தியாவின் சாணக்கிய மூளை பற்றிக்கொண்டிருந்த நம்பிக்கையாலோ அல்லது வேறு வழியில்லாததனாலோ என்னவோ இந்திய உள்துறை சுறுசுறுப்படைந்தது. சாணக்கியர்கள் சுற்றியிருந்து வியூகம் அமைக்க காகித்ப்போர் தொடங்கியது.

பாகிஸ்தானும் சளைக்கவில்லை. ஒரே கொடியில் பூத்த மலர்தானே. கையும் களவுமாக (பாகிஸ்தான் பிரஜை) பிடிபட்டிருக்க ஆதாரங்களைத் தேடித்தர இந்தியாவையே கேட்டுக்கொண்டிருந்தது. பிடிபட்ட அஜ்மல் தன் பிரஜையே இல்லை என்று அடித்துச் சொன்னது. போதாதற்கு எப்போதோ அஜ்மல் இறந்து விட்டதாக மரண அத்தாட்சிப்பத்திரம் செய்து ஒரு கிராம அதிகாரியை விட்டுப்படங் காட்டிக்கொண்டிருந்தது. இந்தியாவிற்கு இத்தனை தூரம் சகிப்புத்தன்மை பற்றிப்பாடம் புகட்டிக்கொண்டிருந்தது பாகிஸ்தான்.

அமெரிக்க ஜனாதிபதி மாற்றத்தைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானினதும் பாகிஸ்தானினதும் தலிபான் தொடர்பு பற்றிய எச்சரிக்கை இந்தியாவை நிமிர்ந்து உட்கார வைத்தது. இனி பாகிஸ்தான் பல்லுப்போன பாம்புதான் என்ற அளவில் இந்திய அறிக்கைகள் பறக்க அமெரிக்கப் பிரதிநிதியின் பாகிஸ்தான் விஜயமும் இந்திய சாணக்கியவாதிகள் வெற்றியை நோக்கிய அடுத்த காய் நகர்த்தல் பற்றி யோசித்துக் கொண்டிருக்க பாகிஸ்தான் இறக்கியது ஆப்பு.

இந்தியாவில் நடைபெற்ற 28/11 தாக்குதலுக்கு பாகிஸ்தானில் விசாரணை . அஜ்மலோடு சேர்ந்து ஆறு பேர் மீது விசாரணை. எப் ஐ ஆர் போட்டு கேஸ் பதிவு பண்ணி வழக்கும் தொடங்கி விட்டது. இனி என்ன ஆறு மாதம் ஒரு வருஷம் ..இன்னும் எத்தனை வருடங்களோ..

இந்தியாவிற்கு எந்தக்க்காலத்திற்கும் பதில் சொல்ல வேண்டாத ஆதாரங்கள் கொடுக்க வேண்டாத உள்ளூர் சட்டத்தை மீற முடியாத...ஸ்ராங்கான காரணங்களுடன் அப்படியே இந்தியா எதைக்கேட்டாலும் கோர்ட் உத்தரவு இல்லாது கொடுக்க முடியாது.. அப்படியே கொடுக்க முற்பட்டாலும்... முடிவுறாத வழக்கின் நன்மை கருதி இரகசியங்கள் காப்பாற்றப் படவேண்டிய பொது நல வழக்கு... வழக்கின் மீது வழக்கு....

அட ..அட...எத்தனை அழகான ஆப்பு.. இனி ஜனநாயகத்தின் பாதுகாவலன் அமெரிக்கா என்ன ..ஐ.நாடுகள் என்ன ..எல்லாவற்றையும் விட பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் சட்டங்களை மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாகிஸ்தான் அரசு மீற முடியுமா? அப்படி மீறத்தான் யாரால் சொல்ல முடியும்.

இதில் இருந்து நாமும் கற்றுக் கொள்ள ஏதாவது விடயங்கள் இருகின்றதா..?

இது புலிகளின் முடிவு காலமா?


இது என்ன கேள்வி என்று ஆச்சரியத்தில் விழியுயர்த்தப் பலர் முற்படக் கூடும். இல்லை என்று பலர் மறுதலிக்க முற்படும் வேளையிலும் ஆம் இதுவும் நடக்கக் கூடிய து சாத்தியமே. இவையெல்லாவற்றையும் விளங்கிக் கொள்ள இன்றைய உலக அரசியல் பொருளாதார இயங்கு தளத்தையும் திசையையும் புரிந்து கொள்ளுதல் பயன் தரும்.

பொருளாதார முன்னேற்றம் அல்லது கையகப்படுத்தல் அல்லது இன்னும் தெளிவாகச் சொல்வதானால் ஆக்கிரமிப்பு என்னும் அடிப்படையிலேயே இன்றைய உலகம் கட்டமைக்கப்பட்டு வருகின்றது. இவ்வாக்கிரமிப்பின் முதல் தேவையே கட்டில்லா தொடர்பாடல் (ஆக்கிரமிப்பில் போட்டி போடும் பெரும் உற்பத்தி நிறுவனங்களுக்கு). அதற்கான வேலைத்திட்டங்களின் மீதே அரசியல் செயற்பாடுகள் செயற்படுத்தப்படுகின்றன. அவையே இன்றைய உலக ஒழுங்கை வடிவமைக்கின்றன. அவற்றையே இன்றைய உலகின் அதி நவீனப் பெரும் பொருளாதார வளர்ச்சி பெற்ற ஜீ -8 நாடுகளின் பின்னால் நின்று இயக்கிக் கொண்டிருக்கும் தொழில் நிறுவனங்கள் வேண்டி நிற்கின்றன.

இன்னும் பல காலத்திற்கு (எவ்வளவு காலத்திற்கு என்னும் தெளிவில்லாவிட்டாலும்) இந்நிலையே தொடரப்போகின்றது. கம்யூனிஸம் காலங்கடந்ததன் பின்னால் இக்கருது கோளிற்கு மாற்றீடு எதுவுமில்லா இக்காலத்தில் உலகம் இவ்வாறு கட்டுண்டுகிடத்தலும் பின் செல்லலும் தவிர்க்க முடியாதவையே. கடந்த கால கம்யூனிஸப்பாசறைக்குள் மூழ்கிக்கிடந்த நாடுகளும் சுலபமாகத்தம்மை சுதாகரித்துக்கொண்டு இவ்வொழுங்கோட்டத்தில் தம்மைக்கரைத்துக்கொண்டிருக்கின்றன என்ற உண்மையே இதற்கான சான்றாகும்.

இன்று தன்னளவில் தன் பிராந்தியத்தில் கிடைக்கக் கூடிய அனைத்து வளங்களையும் கையகப்படுத்தும் போராட்டத்தையே தமது அரசியலாக்கி அவ்வராஜக அரசியலையடைய இராணுவ முஷ்டியை உயர்த்தும் மனப்போக்கிலேயே அனைத்து அரச இயந்திரங்களும் இப் பெரும் பொருள் ஆக்கிரமிப்பு நிறுவனங்களால் வழி நடாத்தப்படுகின்றன. இந்நிறுவனங்களின் கைகள் மொழி இன தேச வர்த்தமானங்களையும் தாண்டி சர்வதேசத்தின் கரைகள் வரை நீண்டு கொண்டிருக்கின்றன.

இந்த யதார்த்தத்தை மீறி இன்று உலகில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இன மத மொழிப் போரை நடாத்திக் கொண்டிருக்கின்ற எவ்வினமோ மக்களோ வெற்றியடைய முடியாது. எத்தனை வீரியம் பெற்ற போராட்டத்தையும் சாம தான பேத தண்ட முறைகளில் நசுக்கி விடக்கூடிய தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் முதல் மனித நேயக்காப்பு நிறுவனங்கள் ஈறாக தனி மனித குழு அமைப்பு ரீதியான் பல்வேறு கட்டமைப்புகளை அவை கட்டமைத்து வைத்திருக்கின்றன.

தமது தேவைகளைப்பூர்த்தி செய்யும் வகையில் கருத்தியல் ரீதியான பிறழ்வுகளையும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அவை திறமையாகச் செயற்படுகின்றன. அதையும் மீறி எதிர்த்து நிற்கும் சிறு குழுக்களைப் பயங்கரவாதிகளாக முலாமிட்டு ஈவிரக்கமற்ற கொலைவெறிக்கரங்களால் அடக்கவும் முற்படுகின்றன..அதில் வெற்றியும் பெற்று விடுகின்றன. அல்லது வெற்றியாக்குவதற்கான முயற்சியில் மீண்டும் மீண்டும் அடக்கு முறையில் ஈடுபட்டு இரத்த ஆறுகள் காய்ந்து போகவிடாது காத்துக்கொள்கின்றன.

இதுவே உலக யதார்த்தமும் ஒழுங்குமாயிருக்கையில் ஈழத்தமிழினத்தின் சுதந்திரம் வேண்டிய போராட்டம் என்பது இவ்வல்லாதிக்கக் கனவுகளுடன் விரிந்து கொண்டிருக்கும் வல்லரசு பிராந்திய நலன்களுடன் எவ்வாறு ஒத்துப்போக முடியும். இவ்வகையான பிராந்திய இன மதக்கிளர்ச்சிகளை அவர்கள் ஒரு போதும் அனுமதிக்க முடியாத வெறுப்புடனேயே பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்போராடும் இனத்திற்கிடையிளுள்ள முரண்பாடுகளைக்கூர் தீட்டி வளர்த்து விடுவதிலும் பலவீனங்களைப்பயன் படுத்துவதிலும் திறமையுடன் காய் நகர்த்தி தங்களுக்கு ஏற்புடை ய நிலையக்கொண்டு வருதிலேயே குறியாயிருப்பார்கள்.

இதற்கு அப்பால் இருக்கக்கூடிய நியாயாதிக்கம் பற்றியோ மனிதாபிமானம் பற்றியோ அவர்களுக்கு எவ்வித கரிசனையும் இருக்கப்போவதில்லை. இன்று ஈழப்போராட்டத்தில் புலிகளின் பங்களிப்பு நூறுவீத மக்களையும் உள்ளடக்கியதாக இல்லை என்பதை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையிலேயே நாம் இருக்கின்றோம். இராணுவ முன்னெடுப்புகளுடன் கூடிய போராட்டத்தில் இந்நிலமை சாத்தியமே என்றாலும் அதற்கப்பால் இருக்கின்ற மக்கள் ஒன்றிணைப்பு பற்றி அவர்கள் என்றுமே கருத்துச் செலுத்தவில்லை என்பதே யதார்த்தம். முஷ்டி பலத்தை நம்பிய அளவு மக்கள் பலத்தையோ அரசியல் ராஜதந்திர முன்னெடுப்புகளையோ அவர்கள் செயற்படுத்தவில்லை என்பதே உண்மை.

மூன்று தசாப்தங்களையும் கடந்து விட்ட இப்போராட்டத்தினை வலுச்சேர்க்க இது வரை எந்த ஒரு நாடும் வெளிப்படையாக முன்வரவில்லை என்பதிலிருந்தே இவர்களின் இராஜ தந்திர கொள்கைத் தோல்வியைப்புரிந்து கொள்ளலாம். அதே போல போராட்டத்தினைத் தவிர்த்து அல்லது தவிர்க்க வைக்கப்பட்டு வெளிநடப்பு செய்துள்ள மண்ணின் மைந்தர்களின் விகிதாசாரமும் அதிக அளவில் இருப்பதும் இதனைத் தெளிபு படுத்தும்.

இவற்றை மனதில் கொள்வதன் மூலமே புலிகள் அல்லது ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்தை முன்னெடுக்கக்கூடிய எவரும் வருங்கால நிகழ்ச்சி நிரலைப் பட்டியல் இடக்கூடும். எதிர்காலத்திட்டம் எவ்வாறு இருந்தபோதிலும் இன்று ஈழத் தமிழினத்தினதும் அதன் காவலர்கள் என கொள்ளப்படுபவர்களினதும் நிலை எவ்வாறு இருக்கப்போகின்றது.

சிங்கள ஏகாதிபத்தியத்தின் இனப்படு கொலைகள் இன்று உச்சத்தில் இருக்கின்ற வேளையிலும் உலகத்தமிழினம் கொதித்துக் குமுறிக்கொண்டிருக்கும் நிலையிலும் உலக நாடுகளின் மெத்தனப்போக்கை மட்டும் குறை கூறிக்கொண்டிருப்பதில் என்ன பயன் இருக்க முடியும்.உலகம் இவ்வாறு தான் இயங்கிக்கொண்டிருக்கும் என்பதை புரிந்து கொள்ளாதது ஏன்?. ஈழத் தமிழினத்தின் கரிசனைக்கு அப்பாலும் புலிகளை வேறுபடுத்திப்பார்க்கும் சர்வதேசத்தின் போக்கைப்புரிந்து கொண்டு செயலாற்றாத கையாலாகாத்தனம் யாருடைய தவறு.

புலிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வரவேற்கப்பட்ட இணைத்தலைமை நாடுகளின் கபடத்தன்மை புரிந்து கொள்ளப்பட்டிருந்தால்... எடுக்கப்பட்ட மாற்று வழி இன்று தமிழ் மக்களை ஏன் காப்பாற்றவில்லை.

புலி ஒழிப்பு என்ற போர்வையில் ஈழத்தமிழினம் ஒழிக்கப்படுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்..? அதேபோல ஒழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழினம் பற்றிய புலிகளின் கரிசனை எவ்வாறு இருக்கின்றது..?

தமிழ் மக்களைக் காப்பதற்காகவே எனச்சொல்லிக் கொண்டு படை நடாத்தும் புலிகள்..... நாளை ஐ.நா பாதுகாப்புப் படை ஈழத்தமிழ் மக்களைக் காப்பற்காக ஈழ மண்ணிற்கு வந்தால் புலிகளின் நிலை என்னவாக இருக்கும்..?

அரசியல் மயப்படுத்தப்படாத தனி இராணுவ முனைப்புடைய ஒரு இயக்கத்திடம் இவ்வாறான கேள்விகள் கேட்கப்படாது என்பதில் எவ்வித உறுதியும் கூற முடியாது.

பாதுகாப்புப்படையாக வந்த இந்தியாவின் சிங்கள அரசிற்குத் துணை போகும் இன்றைய நிலமைக்கு இந்தியாவின் பிராந்திய ஆக்கிரமிப்பிற்கு அப்பாற்பட்ட காரணங்கள் ஏதாவது இருக்கக் கூடுமா? இதை முறியடிக்கும் உபாயம் ஏதாவது புலிகளிடம் இருக்கின்றதா...?

இவ்வகையான பல கேள்விகளுக்குப் புலிகள் மட்டுமல்ல ஈழத்தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுவதாக யார் கூறிக்கொண்டாலும் ...பதில்கள் இல்லாது விடின் இது அவர்களின் முடிவு காலமாயிருப்பதைத் தவிர்க்க முடியாது.

Thursday, February 05, 2009

கண்ணால் காண்பதுவும் .....


ஈழத்தமிழகத்தில் நாதியற்றுக் கொல்லப்படும் உயிர்களை குறித்தான தமிழக உறவுகளின் உணர்வுகளும் அது மேலான அரசியலும் அது குறித்த விமர்சனங்களும் பதிலடிகளுமாக ஏகத்துக்கும் ரணகளப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அரசியல் கட்சிகளின் அறுவடைகளும் ஆதாயங்களும் பலவித முகங்களைச் சூடிக்கொண்டு களமிறங்கியிருக்கின்றது.

அரசியல் வாதிகளின் முகங்கள் காட்டிக்கொடுப்பவர்களாகவும் காரியவாதிகளாகவும் கோமாளிகளாகவும் இன்ன பிற வடிவங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவர்களுடன் பத்திரிகையாளர்களும் அரசியல் ஏவுநாய்களான அல்லது தன்னார்வ காழ்ப்புகளுடன் உள் நுழைந்திருக்கும் அதிகாரவர்க்கமும் விமர்சனத்திற்கு ஆட்பட்டு பந்தாடப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இத்தனையையும் சாதித்துக் கொண்டிருப்பது வலைப்பதிவர்கள் என்ற சநாதனக்கூட்டம்.

வலிமைமிக்க ஆயுதமாக பேனாவை தம் உணர்வென்ற குருதியால் நிரப்பி எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். அரசியல் வாதிகளை கேள்வி கேட்பது என்ற பயங்களுக்கு அப்பாற்பட்டு அவர்களைக் கிழித்தெடுத்து தோரணமாய்த் தொங்கப்போட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

பத்திரிகைகள் என்று பந்தா போட்டு உட்கார்ந்திருந்தவர்களையெல்லாம் ஓரமாய்ப்புறந்தள்ளி பத்தோடு பதினொன்றாய் கருத்து மட்டுமே சொல்லும் நிலையில் வைத்திருக்கின்றார்கள்.

பதிவர்களைப்படிக்கும் கூட்டம் ஏனோதானோவென்று இவர்களையும் படித்து வைப்பதே இப்போது உண்மை நிலை.

இத்தனை வலிமையுடன் கருத்துகளை மட்டுமே வைக்கத்தெரிந்த இப்பதிவர்களைப் பற்றியதே என் கோபம். தெருக்கோடியில் கூட்டம் கூட்டி அரசியல் செய்யும் சாதாரண அரசியல் வாதிக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கின்றது.

தெருவோர அரசியல் வாதியின் பேச்சு அந்த தெருவோடு போச்சு. அவன் தலைவன் போடும் பிச்சையோடு அவன் தமிழ் போச்சு.

இதுதானா இந்தப்பதிவர்களின் நிலையும். மனதில் எழும் ரெளத்திரங்கள் எல்லாம் பேனாவின் சொறிதலில் நீர்த்துப்போவதா உங்கள் தேவை?

அதற்கப்பால் உங்களுக்கான தேடுதலோ தேவையோ இல்லையா?

அப்படியாயின் வியாபாரிகளுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? எதுவித வித்தியாசமும் இல்லா உங்கள் எழுத்தின் பயன் என்ன?

உங்கள் கருத்துகளில் கவரப்பட்டு குமியும் எண்ணங்களில் உங்கள் எண்ணவோட்டத்துடன் இசையும் நண்பர்களுடன் சேர்ந்து என்ன செய்யப்போகின்றீர்கள். அக்தில்லாது நன்றி சொல்லி உங்கள் எழுத்தின் வீரியம் பற்றி உச்ச்சுக்கொட்டி முதுகு சொறிந்து கொள்ளப்போகின்றீர்களா?

இது மட்டும் தானா உங்கள் இருப்புக்கான அடையாளம். நித்தம் சோறு தின்று வாழும் மனிதரைப்போல்....

தலைவர்களை யாரும் உருவாக்குவதில்லை.... அவர்கள் தாங்களாகவே உருவாகின்றார்கள்....

யோசியுங்கள்...