Friday, January 27, 2006

அழுவாச்சி பாண்டுவும் அழுங்குப் பிடியும்

" காமன்ற் மாடரேஷன்" வாணுமா வாண்டாம்மான்னு ரெண்டு சைடு பிரிஞ்சி போடுற ஆட்டத்தில தமிழ் மணம் பெருங்காய டப்பாவாயிடும்னோன்னு நமக்கெல்லாம் பயம் ஆவுதப்பா...

தலயில முடிகொட்டினவன்லாம் அறிவாளின்னு சந்திர பிம்பம் கட்டிக்கினு பீலா வுடுறாங்க ... சைபர் கிரைம் போனான்களாம் .பொம்பில பொலீசு சுளுக்கெடுக்க கெளம்பிடிச்சாம்ன்னு...

ஒவர் ஆக்ட் பண்ணாதீங்கடா...

மூசா மாமி புல் வெளியில பாண்டு வந்து கத்திக்கினு போவுது ... வெஷயம் தெரியுமா ? போலியா கொட்டம் அடிக்கிற பேமானி தன் சொந்த புளக்கில என்னாமா நல்ல பிள்ளையாட்டமா நடிக்கிரான் பாரும்கிறா..

பாண்டு அவன் அவன் கெடந்து தலை தலையா அடிச்சுக்கினுறான்...

இன்னும் என்னாத்துக்கு அழுவுணி ஆட்டம்..

அவன் யாரு ? அப்பிடின்னு பப்ளிஷ் பண்ணீட்டா ? பிரச்சனை முடிஞ்சுதே....

உமக்கு தெரிஞ்சா .. இன்னும் என்னாப்பா கண் பொத்தி வெளையாட்டு ...

வலைப்பூ மக்களே பாண்டு கிட்ட யாருன்னு கேட்டு ( ஸ்ராங்கா கொன்fபோம் பண்ணிக்கிடுங்கடா) அவன் முத்தம் போய் 4 கேள்வி கேட்டா போச்சூ

இத்தை விட்டுட்டு என்னா ஸ்ரோரி வுடுறீங்கப்பா....

பாண்டு உம்ம நம்பகத்தன்மையை புரூப் பண்ணுப்பா ...

அவன் அவன் வீட்டுப் பொண்ணுங்களைப் பத்தி எழுவுற பயல் தொலைஞ்சான்னு சந்தோஷப் படுவமே....


அப்புறம் என்னாத்துக்கு லேட்டு ஜல்தி கரோ

Thursday, January 26, 2006

கும்பிய குட்டையும் நெத்தியில் பட்டையும்

ஒரு நாளும் இல்லாத தெருநாளா ..... மயிலு வந்துச்சு மயிலு வந்துச்சுன்னு பாண்டு கெளம்பிக்கினாரு..... என்னா வெசையம்னு பாத்தாக்கா அவரு பொலம்பலுக்கு விடிவு வந்துச்சா இல்லை முடிவு வந்துச்சான்னு தெரியாங்காட்டியும் தம்மு தூம்முன்னு குதிக்கிராரு...

போலி போயி சாமி வந்திச்சோன்னு வெசயம் ஜோரா சூடுபிடிச்சுக்கினிது ...
தணிக்கையா ? பராக் பராக்கின்னு வாய்ஸ்ஸு விட்டுக்கினு போயிச்சாம் விங்க்ஸு . பாண்டுவின் அழுக்காச்சி ஆட்டத்துக்கினு ஒரு வக்காலத்தான்னு .......... சிவம் சுந்தரம் பொறப்பட்டாச்சு.

என்னையா கருத்துச் சுந்திரம்னா வீசை என்னா வெலைன்னு கேப்பீங்களான்னு முட்டத்திலேருந்து தேன் குடித்த வண்டு கிர்ரென்னு பறந்து தலை சுத்திப் போயாச்சு.

ஆளாளுக்குன்னு ஞாயமான்னு கல்லுல வெட்டி வெளக்கம் கேட்டுருக்காங்க. பொடி நடையா போனவக வந்தவக எல்லாம் ஜோ ரா பதிலின்னு சூடு ஆறாம பதில் அம்பு வுடுறானுவ.

கெடந்ததும் போய் வந்ததும் போயின்னு சட்டி சுட்டதடா கை வெந்ததடான்னு சன்னியாசம் தலையில கை வெச்சுக்கினு கெடக்கிறாப்ல....

நம்ம போலி கிலி பிடிச்சுதா கலி முத்திச்சான்னு சவுண்டயே காணலை.

சொதந்திரம்கிறாங்க கருத்துன்னுறாங்கா அப்பிடீன்னா என்னான்னு வளா வளா கொளகொளான்னு பிட்டு நோட்டீஸ் விடுறவனுங்க பின்னூட்டம்னு கண்ட மேனிக்கு கதை உடறவங்கள கேக்கணும்னு ரவுசுக்கு ஒரு ஆசை.

இலக்கியம் செய்ய வந்தவனுங்க எல்லாம் அரசியல் பண்ணுர ரேஞ்சில அள்ளி விட்டுக்கிரானுவ..

ஒண்ணுக்கு ரெண்டுக்குப் போறதுன்னாலும் போயித்து வாரேன் போயித்து வாரென்னு பொட்டு பூட்றதுக்கு முன்னாடி பொட்டி பூட்னதுக்குப் பின்னாடின்னு வெளம்பரம் கொடுக்கிறாளுங்க..

மாங்கு மாங்குன்னு எழுதரவங்க மூஞ்சி பாத்தாச்சும் நல்லாருக்குன்னு சொல்ல மனசு வராதவங்கெல்லாம் ஜொள்ளர் ரேஞ்சில மாங்கு மாங்குன்னு பின்னூட்டம் உடுறாங்கோ..

விக்கிரமாதித்யன் கணக்கா ஒரு போலி ஒரு ஒரிஜினல்னு நம்மாளுங்களே எழுதிக்கிராணுங்க ... எழுதுறத எழுதிப்புட்டு அப்புறம் ஆத்தாடி அம்மாடின்னு சவுண்டு உடுறானுங்கோ..

பால் சந்தர் பகல் தூக்கம் கலைஞ்சி போயி லபோ லபோன்னு அடிச்சிக்கினாரு.

நாரதர் கலகம் நன்மைங்கிராப் போல குட்டைய கொளப்பியாச்சு நெத்தியில பட்டையா நாமமான்னு பாத்துக்கினு ரவுசு இருக்கிராப்போல