Saturday, March 04, 2006

கருணாநிதியின் அரசியல் அஸ்தமனம்

நுணலும் தன் வாயால் தான் கெடும்னு சொல்வாங்கோ. கலைஞர் கருணாநிதி வாழ்க்கையில இந்த வார்த்தை சனி பகவானின் அக்மார்க் சொல்லாயிட்டுதுங்க . மொதமொத மக்கள் திலகம் எம்.ஜீ.ஆர் கூட மோதினாரு. திவாலாயிட்டாரு.

அப்புறம் ஒரே உறையில ரெண்டு வாள்னு புலம்பினாரு. தி. மு. க வை ரெண்டாந் தடவ உடைச்சாரு. அம்மாவுக்கு அடிச்சது லக்கி பிரைஸ்.

இப்போ மறு படி சனிச்சுழற்சி .போதாத காலம்போல... சாப்பிடுகின்ற வெள்ளைப் பணியாரத்தில கொழுப்புச் சத்து கூடிட்டாப்போல. அம்மாவுக்கு மீண்டும் லக்கி ப்ரைஸ் அடிக்க்கப் போவுது.

வாய்க்கொழுப்பு காமிச்சு வைக்கோவை அம்மாவிடம் அனுப்பியாச்சு. போகுங்காலத்தில் உட்கார்ந்து போவலாம்னு பார்த்த முதலமைச்சர் சீட்டு கெடைக்கவே கெடைக்காமல் பண்ணிப்புட்டார்.

காமராஜர் சொன்னாப்புல அம்மா படுத்துக்கின்னு இல்லை தூங்கிக்கின்னே ஜெயிக்கலாம்.

கலைஞர் வீரமில்லாத வீர வசனங்களை விடும் வரைக்கும் அம்மா காட்டில செம மழைதான் போங்க.