Wednesday, February 18, 2009

அன்னை சோனியாகி ஜே

இந்திய மாதாக்கீ ஜே.. அன்னை சோனியாக்கீ ஜே... ஏனெனில் நாளைய அகன்ற பாரதத்தை ஆளப்போகும் புத்திர சிகாமணிகளைப் பெத்தெடுத்த பிஸ்ஸாப் புத்திரிகே ஜே...

ஹை ஸ்கூல் எடுயூகேஷன் எடுத்த ஹைடெக் யுத்தம் வன்னியில் காயாத இரத்த ஆறு .. பிஸ்ஸா ஸோஸும் சிகப்புத்தான் .. தமிழன் இரத்தமும் சிகப்புத்தான்...

பிஸ்ஸா ஸோஸ் சாப்பிட்டா செமிபாடு..தமிழன் இரத்தம் ஊத்திட்டா கொதிபாடு...

அன்னையே ... நீ வாழ்க... உன் பிள்ளைங்களுக்கு சேர்த்து வைக்கும் புண்ணியம் வாழ்க....

என் பிள்ளையை நீ கொடுத்த குண்டில் தொலைத்து விட்ட போதும் அன்னையாய் சபிக்க மனம் வருகுதில்லையே.. அன்னையே வாழ்க...

செத்துத் தலை துவள முன் அம்மா என்று கதறியழுத என் பிள்ளையின் அவலம் போல..நீயும் கேட்காதிருக்க வேண்டும் அன்னையே...

உன் புருஷனின் கைகள் பிடித்திழுத்து விலகிப்போன என் தங்கையின் அவலம் உனக்கும் வராதிருக்க வேண்டுகின்றேன் என் அன்னையே...

உன் பாரத் மாதாவின் இராணுவக் காவல் என் வீட்டில் பிணமலை குவித்தது போல் உன் வீட்டிலும் நிகழாதிருக்க வேண்டுகின்றேன் அன்னையே...

அடுத்த நேரத்துச் சோத்துக்கழும் தமிழகமே அடுத்த நேர வாழ்வுக்கழும் ஈழத்துச் சோதரனைப்பார்..

உன் வயிறார சோறு கிடைக்க வேண்டுகின்றேன்... என் உயிர் துறக்கும் வேளையிலும்..

அன்னை சோனியாஜி ...வாழ வைப்பார் உங்களை ..எங்களைக்கொல்லுகின்ற போதிலும் நம்புங்கள்...

While studying English at the University of Cambridge, Sonia met Rajiv Gandhi, a mechanical engineering student and son of Indian Prime Minister Indira Gandhi. The couple married in 1968 and moved into the prime minister’s official residence, although Rajiv eschewed politics for a career as a commercial airline pilot.

Imagine if the U.S. were run by an Indian Hindu woman without a college degree. It's tough: the U.S. has never elected anyone who's not Christian, white and male—even as Vice President. But India, which is an even bigger democracy, is run in all but name by an Italian Catholic widow with a high school education. In the 16 years since the assassination of her husband Rajiv, Sonia Gandhi, née Maino, has become the face of the country's most famous family. As leader of India's Congress Party, she has also managed the largest political party in the country and steered it to power. And she has done all this wearing a sari.

When her party won national elections in 2004, she was offered the prime ministership; she listened to her "inner voice" and turned it down, and anointed the economist Manmohan Singh in her stead. It was a gesture that was, well, Gandhian. And it solidified her hold on power. For ordinary Indians, this act of renunciation held tremendous mythic resonance. Though Singh is Prime Minister, it is Sonia, 60, who is the kingmaker. And her most lasting legacy may lie in her children Rahul and Priyanka, one of whom may well become India's Prime Minister someday, ascending to the high office that their mother has—thus far—renounced.

Mehta is the author of Maximum City: Bombay Lost and Found


http://www.time.com/time/specials/2007/time100/article/0,28804,1595326_1615513_1614685,00.html




உடைபடும் இந்தியப் "பிம்"பங்கள்


நினைத்துப் பார்க்கும்போதே ஆச்சரியமாயிருக்கின்றது. கோபுரத்தில் இருந்த எண்ணங்கள் குப்பைக்குழியில் உறவாடும் காட்சி அதிர்ச்சியையும் ஆச்சரியம் கலந்த அவலத்தையும் தருவது தவிர்க்க முடியாதது. எனது இந்தியப் பிம்பங்களுக்கும் இதுவே நிகழ்ந்திருக்கின்றது.

1984 இல் இறவாப் புகழுடன் இருந்த அன்னை இந்திரா இறந்துபட்டபோது ஒரு கணம் விக்கித்து விக்கி விக்கியழுத காட்சி கண் முன்னால் தெரிகின்றது. இந்தியா என்பது ஒரு நாடல்ல என்பதுவும் ஒரு ஆதர்ஸம் என்பதுவும் ஈழத்துத் தமிழனால் ஒத்துக்கொள்ளப்பட்டிருந்தது அந்தக் காலத்தில். ஆட்டிடைக் குலத்தில் பிறந்த கோவணக் காந்தியின் சத்திய சோதனை பைபிளாகப் பார்க்கப் பட்டது அப்போது. ரோஜாவின் ராஜா நேரு எங்களுக்கும் பிரியமுள்ள மாமாவாகிப்போனதும் அப்போதுதான்.

கோகலே போன்ற தலைவர்களையெல்லாம் பின் தள்ளிக் காந்தி முன் வந்ததோ தன் விருப்புக்குரிய நேருவை முன்னிறுத்தி இந்தியாவைத் துண்டு போட்டதோ கூட எங்களுக்குப் பெரிதாகப் படவில்லை. சொல்லப்போனால் பாகிஸ்தானை உருவாக்கிய ஜின்னாவின் மீது கோபம் கூட இருந்தது.

இன்று நாங்கள் இரத்தத்தில் குளிக்கும் போது அதே தவறைச் செய்யத்தவறிய இராமநாதன் ஜீ ஜீ போன்ற தமிழினத்தலைவர்களின் மீது கோபம் வருகின்றது.

காஸ்மீரத்தை இந்தியாவுடன் சேர்க்க முற்பட்ட "இந்து" முட்டாள் மன்னனையும் மன்னிக்கும் பக்குவம் அன்று இருந்தது. இன்று எம் இருப்புக்காகப் போராடும் போது அம்மக்களின் கண்ணீரினதும் செந்நீரினதும் ஈரம் புரிகின்றது. முட்டாள் மன்னனின் வேண்டுதலுக்காக காஸ்மீரத்தைப் பிரிக்க முற்பட்ட ரோஜாவின் ராஜா தன் புஜ பலத்தால் ஜின்னாவின் மூச்சை அடக்கியிருந்தால் இன்று பாகிஸ்தான் என்ற எதிரியின் மிரட்டல்கள் இல்லா அகன்ற பாரதம் இருந்திருக்கும் என்ற எண்ணமும் வந்தே போகின்றது. துணிவில்லாப்பாட்டனின் பேராண்டிக்கு அந்தத் தைரியம் இருந்தது என்பதை இன்றும் இரத்த ஈரத்தில் காய்ந்து போக ஈழத்துத் தெருக்களும் அந்த மாறாத் துயரத்தை விலக்கி வைக்கத்தெரியாது கலங்கிக்கொண்டிருக்கும் மக்களுக்கும் தெரியும்.

இந்தி(ய) இராணுவம் துடைத்தழித்த சுவடுகளும் கிழித்தெடுத்த யோனிகளும் தமிழ் இரத்தமே சிந்தியது. சோழச் செருக்குகளின் தினவெடுத்த தோள்கள் கலிங்கத்திலிருந்து இறக்கியிருந்த புளிச்ச தயிரின் நிணம் மணக்கும் பூனூல் புரோகிதரின் வர்ணத்தில் கலந்து விட்ட தமிழகத் தமிழனின் இரத்தமும் தன்னைத் தாழ்த்திக்கொண்டு சாதி பார்த்துப் பிரிந்து நிற்கின்றது.

வாள் நுனிக்கில்லா வல்லமை புண்ணாக்குப் புரோகிதரின் பாவாடை நாடாவுக்கு இருப்பதே இன்றைய பாரதம். இராஜீவ் என்ற மக்கள் மன்னனின் படுக்கை அறைக்கு இன்று பாரதமே கட்டுண்டிருப்பதே காந்தியின் கனவை நனவாக்கிய அகன்ற பாரதம்.

வெள்ளையரின் நிர்வாக ஒழுங்கு படுத்துதலே இந்தியா. அக்தில்லாது அத்தேசம் எக்காலத்தும் இருந்ததில்லை. இந்தியப்பல்லாக்கை இன்று தோள் கொடுத்துச் சுமப்பது எமது தமிழரே. அடிமையாய் வாழ்வதில் சுகம் காணும் சோம்பேறி இனம் தமிழினம்.

மலையாளத் தெலுங்கு கன்னடக் கம்மனாட்டிகளுக்கு கட்டம் கட்டிச் சலாம் போட கோஷ்டி கட்டித் தமிழன் தரையில் உருளும் புண்ணிய பூமியே தமிழகம். வந்தாரை வாழ வைக்கும் தமிழினம் என்று எதுகை மோனையுடன் தன்னையே எள்ளி நகையாடும் உயரிய மனம் படைத்தவனே தமிழன்.

இத்தனை உயிர்கள் வெந்து பட்டும் இன்னும் இழுபறி நிலையில் அடுத்த தேர்தலில் தேர்ந்தெடுக்க தமிழனே இல்லாத் தலைவர்களை வைத்துக் கொண்டு
கன்னடப் பாப்பாத்தி செயலலிதா தெலுங்கு திம்மன் விசய காந்த் கன்னடத்துக் கண்டக்டர் ரசனி... தமிழனைக்காட்டிக் கொடுத்து உயிர் தரித்து வந்திருக்கும் மு.க ...முடிவில்லாத்தலையெழுத்துடனும் முன்னேறும் கனவுடனும்.... தமிழன்.

இந்தி(ய) ஜனநாயகம் இதுவும் கொடுக்கும் இன்னும் கொடுக்கும். அகன்ற பாரதக் கனவில் உன் துண்டையும் பறித்தெடுக்கும். பாரத் மாதாக்கீ ஜே.. என்ற கோஷத்துடன் உன் வயிறும் நிறையும்.


அகன்ற பாரதக் கனவு வன்னிக்காட்டிலும் யாழ் மணற் திடரிலும் கால் பதிக்கும் காலம் எல்லாம் அவர் கழுத்துத் தறிக்கும் ஓர்மத்துடன் அன்னை இந்திராவுக்காக அழுத அதே கண்கள் ரெளத்திரத்துடன் காத்திருக்கின்றன.

உயிர் தறிக்கும் தவ்பீக்கள் ஒன்றும் உருவானவர்கள் அல்ல.. உருவாக்கப்பட்டவர்கள். உன்னால் உன் ஆணவத்தால் உன் புஜ பலத்தால் இல்லை உன் வீணாய்ப்போன இந்திரியத்தாலும். அதே கணக்கு நேர் செய்யப்படுவதற்காக வன்னிக்காட்டில் ஆக்ரோஷத்துடன் காத்திருக்கின்றது.



இந்தி ராமன் குரங்குகளாய்க் கண்ட வாலிகள் முடிவெடுக்க வேண்டிய நேரம் இது. அண்ணனைக் கொலை செய்து இராட்சியத்தை அடையும் கனவுகள் உண்டாயின் அவ்வாறே இருந்து கொள்ளுங்கள். உங்கள் ஆயுளும் நீடித்திருக்கும் உங்கள் மனைவிகளையும் தள்ளி வைத்திருக்கும் வரை. கோடியாக் கரை வரை பரந்திருக்கும் மீனவக் குகன்களும் உங்கள் தோழமையைத் தரம் பிரித்துப் பாருங்கள். உங்கள் உயிரைக்குடிக்கும் பகைவர்களைத் தோழமை செய்யும் முகர்ஜிகளையும் இனம் கண்டு கொள்ளுங்கள்.

இருபதே மைல் கடலெல்லையிலுள்ள தமிழ் உனக்குப் பெரிதா இருநூறே மைல் தொலைவுள்ள பண்டிட்/முல்லா உனக்குப் பெரிதா..? தமிழ் ஈழம் கிடைத்து விட்டால் கச்ச தீவென்ன காங்கேசந்துறையும் உன் துறையாகுமே...

எது எப்படியிருந்தாலும் இந்தியப் பெரு நிலவாதத்திற்கு அஜீரணம் கொடுக்கும் குளிகை வன்னிக்காடுகளில் தான் தயாராவதாய் ஒரு கனவு. அது இத்தாலியப் பிஸ்ஸாக்களுக்கும் பெங்காலிப் பரோட்டாக்களுக்கும் தெரியும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதே தமிழன் கருத்தாகும்.

தாலி அறுக்கும் சோனியா


அன்னை சோனியாவின் இழப்பு எத்தனை பாரதூரமானது என்பதை உணரக் கூடியதாகவே இருக்கின்றது. அன்னை சோனியாவிற்கு மட்டுமல்ல எந்தப் பெண்ணிற்கும் முகவரியாய் இருக்கும் கணவனின் இழப்பு மிகக்கொடியதே..அன்பை பாசத்தைப்பகிர்ந்து கொள்ளும் இடம் வெறுமையாகிப் போவது மிகவும் துயரமானதே..அவரின் சோகம் ஆறுதல் படுத்த முடியாததே...
அவரின் தன்னிரக்கம் ( கணவனின் மரணம் குறித்தான ) கோபமாகவும் சில வேளைகளில் வெறுப்பாகவும் மாறக்கூடியது (தன் அன்புக்குரியவர்களின் இழப்பு இராஜீவின் மீதான வெறுப்பாகி தன்னையும் இராஜீவையும் அழித்துக்கொண்ட தனுவின் வெறுப்பைப்போல) புரிந்து கொள்ளப்படக்கூடியதே.

ஆனாலும் இவ்வெறுப்பானது ஒரு இனத்தின் மீதான வெறுப்பாகிப் போவது தான் துரதிஷ்டமானது. பிராந்திய வல்லரசுக்கனவுடன் இருக்கும் ஒரு நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் உழைப்பால் கிடைத்த வல்லமையை தன் சுய மனத்திருப்திக்காக துர்ப்பிரயோகம் செய்வது அதை விட துரதிர்ஷ்டமானது.

இன்று தம் பிள்ளைகளைப்பறி கொடுத்து தம் கணவரைப் புதைகுழியில் மூடி தாலி அறுத்து முடங்கிப் போகும் ஈழத்துப் பெண்களின் துயரமும் கோபமும் அத்தகையதே.

இராணுவ மேலாண்மையையும் ஆணவ அலட்டல் நிறைந்த வழிகாட்டுதல்களும் இன்று வன்னி மண்ணைச் சிவப்பாக்கிக் கொண்டிருக்கின்றது. இத்தனையையும் செய்து கொண்டிருப்பது அன்னை சோனியாவின் தனி மனித வெறுப்பும் மிஸ்டர் முகர்ஜி போன்றோரின் அடிவருடித்தனமுமே . சிங்களத்திற்கு கொம்பு சீவி விட்டு வேடிக்கை பார்ப்பதுடன் அடிதடி சவடால்களையும் (புலிகள் பாதுகாப்புக் கேடயமாக வைத்திருக்கும் மக்களை விடுதலை செய்ய வேண்டும், ஆயுதங்களை கீழே போட வேண்டும் எக்ஸ்ஸெட்ரா) மிஸ்டர் முகர்ஜி ,சிதம்பரம் போன்றவர்கள் விட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

ஆயுதம் வைத்திருப்பவர்களுடன் பேசவும் முடியாது..பிறரைப்பேசவும் சொல்லமுடியாது என்று சொல்கின்றார் இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம். இதே காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் திம்புவில் இலங்கை அரசிற்கும் தமிழ் ஈழ இயக்கங்களுக்கும் பேச்சு வார்த்தை நடந்தது என்பதுவும் அதை வழி நடாத்தியதே இந்திய அரசுதான் என்பதையும் அவர் வசதியாக அல்லது வசதிக்காக மறந்து விட்டார். ஆனாலும் ஒரு உள்துறை அமைச்சருக்கு இத்தனை மறதி கூடாதுதான்.

வடக்கே சீனா நெருக்குகின்றது கிழக்கே பங்களாதேசமும் மேற்கே பாகிஸ்தானும் தூக்கத்தைத் தொலைய வைக்கின்றன என்று கூக்குரல் இடும் இந்திய இராஜதந்திரிகளே இன்றைய உங்கள் கொக்கரிப்புகள் நாளை தெற்கே காலை நீட்டி நிம்மதியாகத் தூங்கவும் விடாது செய்யும்.

அது விதி. நியூட்டனின் மூன்றாவது விதி.

"ஒவ்வொரு தாக்கத்திற்கும் அதற்குச் சமமானதும் எதிரானதுமான மறுதாக்கம் உண்டு."

அனுபவத்தை உங்கள் நண்பர்களான அமெரிக்காவிடமும் இரஷியாவிடமும் கேட்டுப்பாருங்கள். இன்றைய அரசியல் வாதிகளின் தனி மனித காழ்ப்புகளும் அதீத சுய நம்பிக்கையும் நாளை கேடு சூழ வைக்கும். இரும்புக்கரம் கொண்டு மக்களை அடக்கி வைத்திருந்த இரஷியாவே உடைந்து போய்விட்ட பின் இலஞ்ச லாவண்யத்தால் ஒட்டுப்போட்டு வைக்கப்பட்டிருக்கும் இந்தியா ஒன்றும் பலம் வாய்ந்தது அல்ல.

இந்தியாவை இன்றும் நம்பிக்கொண்டிருக்கும் ஈழத்து மக்களே ..இந்தியா ஒன்றும் இரட்சகன் அல்ல. புலிகளின் தலைவரைத் தொலைக்கும் வரை இந்தியாவின் கரங்களில் இரத்தம் காய்ந்து விடப்போவதில்லை.

மெள்னமாக அழுவதை விட்டு வன்னிக்காட்டின் அவலங்களை வெளியுலகின் கவனத்திற்குக் கொண்டு வாருங்கள். நீங்கள் இது வரை சாதித்தவையே இன்று உலகின் மனச்சாட்சியை உலுப்பிவிட்டிருக்கின்றது. அது தழுவியே இத்தனை அரசியல் நாடகமும் நீலிக்கண்ணீரும். அடிமேல் அடித்தால் அம்மியும் நகரும். நீங்கள் போராடுங்கள் உங்களை நம்பி. அதுவே அன்னை சோனியாவால் அறுக்கப்படும் தாலிகளைக்காப்பாற்றும்.

"வல்லன வாழும்" கூர்ப்புத்தத்துவம். வாழ்வதற்கு வழியா இல்லை பூமியில்.

Sunday, February 15, 2009

இந்தியாவிற்கு ஆப்படிக்கும் பாகிஸ்தான்...


26/11 ..இறுமாந்திருந்த இந்தியாவுக்கு விழுந்த மரண அடி. மரணித்துப்போன உயிர்களுக்காகவல்ல ...தன் பிராந்திய வல்லரசுக்கனவில் விழுந்த அடிக்காக அது உண்மையாகவே கவலைப்பட்டது. பாகிஸ்தானின் எல்லைகடந்த பயங்கரவாதம் பற்றி உலக நாடுகளின் அனுதாப அலையைப் பெற்றுக்கொள்வதற்காக ஓடி ஓடி உதவி கேட்டது.

உலக நாடுகளிடம் இருந்து கிடைத்ததென்னவோ சில பல கண்டனங்களும் அறிக்கைகளும் தான்.. இதற்கும் மேலாக அன்றைய அமெரிக்க ஜனாதிபதி அண்டப்பிரசண்டன் புஸ்ஸின் செல்லப்பிள்ளையான பாகிஸ்தானை கடிந்து கொள்ள் யாருக்கும் துணிவில்லை. இது போன்ற ஒரு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தூண்டி விடும் துணிவு இந்தியாவிற்கு எப்போதும் இருக்கப்போவதில்லை. காஸ்மீர் சார்ந்த முஸ்லீம் அமைப்புகள் காஸ்மீரின் எல்லைகளைக் கடந்தும் இந்திய மண்ணில் இவ்வகை வன்முறைகளை பாகிஸ்தானின் தூண்டுதலால் நடாத்தத்துணியும் போது காஸ்மீரில் இந்துப்பண்டிட்களின் உரிமை பற்றி கதைக்கும் இந்தியாவிற்கும் ..இது ஒரு பொய்யானதேயென்றாலும் ஒரு காரணம் உண்டு.

எப்படியானதென்றால் இவ்வகையான எந்த இடையூறுகளும் அதிகப்பிரசங்கித் தனங்களும் இல்லாது தானும் தன் உரிமைப்பாடுகளும் பற்றிப் போராடிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழ் இனத்தின் போராட்டத்தை நசுக்க இந்தியா ஆயிரம் காரணம் சொல்லிக்கொண்டிருப்பதைப்போல.

பாகிஸ்தானுடனான போராட்டத்திற்கு அதிக விலை கொடுக்க வேண்டும் என்பதை இந்தியா தெரிந்து கொண்டிருக்கின்றது. அதே வேளை அவ்வகையான ஒரு போராட்டத்தில் (பின்னணியில் அமெரிக்கக் கரம் ) வெற்றி பெறும் நிகழ்தகவு பற்றியும் அது சந்தேகமே கொண்டிருக்கின்றது. அது எப்படியென்றால் 26/11 இன் பின்னான காலத்தில் பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதல் நடாத்த வேண்டுமென்று எழுந்த குரல்கள் ஈனஸ்வரத்திலேயே அமுங்கிப் போய் விட்டதை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.

இதுவே ஒரு இலங்கையாகவோ மாலைதீவாகவோ இருந்தால் இந்தியாவின் ஜெற் விமானங்கள் சீறிப்பறந்து வித்தை காட்டியிருக்கும். சிங்களவனை பயங்காட்ட உணவுப்பொதி போட்டதெல்லாம் அதற்குள் மறந்து விடாது.

இந்தியாவின் சாணக்கிய மூளை பற்றிக்கொண்டிருந்த நம்பிக்கையாலோ அல்லது வேறு வழியில்லாததனாலோ என்னவோ இந்திய உள்துறை சுறுசுறுப்படைந்தது. சாணக்கியர்கள் சுற்றியிருந்து வியூகம் அமைக்க காகித்ப்போர் தொடங்கியது.

பாகிஸ்தானும் சளைக்கவில்லை. ஒரே கொடியில் பூத்த மலர்தானே. கையும் களவுமாக (பாகிஸ்தான் பிரஜை) பிடிபட்டிருக்க ஆதாரங்களைத் தேடித்தர இந்தியாவையே கேட்டுக்கொண்டிருந்தது. பிடிபட்ட அஜ்மல் தன் பிரஜையே இல்லை என்று அடித்துச் சொன்னது. போதாதற்கு எப்போதோ அஜ்மல் இறந்து விட்டதாக மரண அத்தாட்சிப்பத்திரம் செய்து ஒரு கிராம அதிகாரியை விட்டுப்படங் காட்டிக்கொண்டிருந்தது. இந்தியாவிற்கு இத்தனை தூரம் சகிப்புத்தன்மை பற்றிப்பாடம் புகட்டிக்கொண்டிருந்தது பாகிஸ்தான்.

அமெரிக்க ஜனாதிபதி மாற்றத்தைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானினதும் பாகிஸ்தானினதும் தலிபான் தொடர்பு பற்றிய எச்சரிக்கை இந்தியாவை நிமிர்ந்து உட்கார வைத்தது. இனி பாகிஸ்தான் பல்லுப்போன பாம்புதான் என்ற அளவில் இந்திய அறிக்கைகள் பறக்க அமெரிக்கப் பிரதிநிதியின் பாகிஸ்தான் விஜயமும் இந்திய சாணக்கியவாதிகள் வெற்றியை நோக்கிய அடுத்த காய் நகர்த்தல் பற்றி யோசித்துக் கொண்டிருக்க பாகிஸ்தான் இறக்கியது ஆப்பு.

இந்தியாவில் நடைபெற்ற 28/11 தாக்குதலுக்கு பாகிஸ்தானில் விசாரணை . அஜ்மலோடு சேர்ந்து ஆறு பேர் மீது விசாரணை. எப் ஐ ஆர் போட்டு கேஸ் பதிவு பண்ணி வழக்கும் தொடங்கி விட்டது. இனி என்ன ஆறு மாதம் ஒரு வருஷம் ..இன்னும் எத்தனை வருடங்களோ..

இந்தியாவிற்கு எந்தக்க்காலத்திற்கும் பதில் சொல்ல வேண்டாத ஆதாரங்கள் கொடுக்க வேண்டாத உள்ளூர் சட்டத்தை மீற முடியாத...ஸ்ராங்கான காரணங்களுடன் அப்படியே இந்தியா எதைக்கேட்டாலும் கோர்ட் உத்தரவு இல்லாது கொடுக்க முடியாது.. அப்படியே கொடுக்க முற்பட்டாலும்... முடிவுறாத வழக்கின் நன்மை கருதி இரகசியங்கள் காப்பாற்றப் படவேண்டிய பொது நல வழக்கு... வழக்கின் மீது வழக்கு....

அட ..அட...எத்தனை அழகான ஆப்பு.. இனி ஜனநாயகத்தின் பாதுகாவலன் அமெரிக்கா என்ன ..ஐ.நாடுகள் என்ன ..எல்லாவற்றையும் விட பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் சட்டங்களை மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாகிஸ்தான் அரசு மீற முடியுமா? அப்படி மீறத்தான் யாரால் சொல்ல முடியும்.

இதில் இருந்து நாமும் கற்றுக் கொள்ள ஏதாவது விடயங்கள் இருகின்றதா..?

இது புலிகளின் முடிவு காலமா?


இது என்ன கேள்வி என்று ஆச்சரியத்தில் விழியுயர்த்தப் பலர் முற்படக் கூடும். இல்லை என்று பலர் மறுதலிக்க முற்படும் வேளையிலும் ஆம் இதுவும் நடக்கக் கூடிய து சாத்தியமே. இவையெல்லாவற்றையும் விளங்கிக் கொள்ள இன்றைய உலக அரசியல் பொருளாதார இயங்கு தளத்தையும் திசையையும் புரிந்து கொள்ளுதல் பயன் தரும்.

பொருளாதார முன்னேற்றம் அல்லது கையகப்படுத்தல் அல்லது இன்னும் தெளிவாகச் சொல்வதானால் ஆக்கிரமிப்பு என்னும் அடிப்படையிலேயே இன்றைய உலகம் கட்டமைக்கப்பட்டு வருகின்றது. இவ்வாக்கிரமிப்பின் முதல் தேவையே கட்டில்லா தொடர்பாடல் (ஆக்கிரமிப்பில் போட்டி போடும் பெரும் உற்பத்தி நிறுவனங்களுக்கு). அதற்கான வேலைத்திட்டங்களின் மீதே அரசியல் செயற்பாடுகள் செயற்படுத்தப்படுகின்றன. அவையே இன்றைய உலக ஒழுங்கை வடிவமைக்கின்றன. அவற்றையே இன்றைய உலகின் அதி நவீனப் பெரும் பொருளாதார வளர்ச்சி பெற்ற ஜீ -8 நாடுகளின் பின்னால் நின்று இயக்கிக் கொண்டிருக்கும் தொழில் நிறுவனங்கள் வேண்டி நிற்கின்றன.

இன்னும் பல காலத்திற்கு (எவ்வளவு காலத்திற்கு என்னும் தெளிவில்லாவிட்டாலும்) இந்நிலையே தொடரப்போகின்றது. கம்யூனிஸம் காலங்கடந்ததன் பின்னால் இக்கருது கோளிற்கு மாற்றீடு எதுவுமில்லா இக்காலத்தில் உலகம் இவ்வாறு கட்டுண்டுகிடத்தலும் பின் செல்லலும் தவிர்க்க முடியாதவையே. கடந்த கால கம்யூனிஸப்பாசறைக்குள் மூழ்கிக்கிடந்த நாடுகளும் சுலபமாகத்தம்மை சுதாகரித்துக்கொண்டு இவ்வொழுங்கோட்டத்தில் தம்மைக்கரைத்துக்கொண்டிருக்கின்றன என்ற உண்மையே இதற்கான சான்றாகும்.

இன்று தன்னளவில் தன் பிராந்தியத்தில் கிடைக்கக் கூடிய அனைத்து வளங்களையும் கையகப்படுத்தும் போராட்டத்தையே தமது அரசியலாக்கி அவ்வராஜக அரசியலையடைய இராணுவ முஷ்டியை உயர்த்தும் மனப்போக்கிலேயே அனைத்து அரச இயந்திரங்களும் இப் பெரும் பொருள் ஆக்கிரமிப்பு நிறுவனங்களால் வழி நடாத்தப்படுகின்றன. இந்நிறுவனங்களின் கைகள் மொழி இன தேச வர்த்தமானங்களையும் தாண்டி சர்வதேசத்தின் கரைகள் வரை நீண்டு கொண்டிருக்கின்றன.

இந்த யதார்த்தத்தை மீறி இன்று உலகில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இன மத மொழிப் போரை நடாத்திக் கொண்டிருக்கின்ற எவ்வினமோ மக்களோ வெற்றியடைய முடியாது. எத்தனை வீரியம் பெற்ற போராட்டத்தையும் சாம தான பேத தண்ட முறைகளில் நசுக்கி விடக்கூடிய தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் முதல் மனித நேயக்காப்பு நிறுவனங்கள் ஈறாக தனி மனித குழு அமைப்பு ரீதியான் பல்வேறு கட்டமைப்புகளை அவை கட்டமைத்து வைத்திருக்கின்றன.

தமது தேவைகளைப்பூர்த்தி செய்யும் வகையில் கருத்தியல் ரீதியான பிறழ்வுகளையும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அவை திறமையாகச் செயற்படுகின்றன. அதையும் மீறி எதிர்த்து நிற்கும் சிறு குழுக்களைப் பயங்கரவாதிகளாக முலாமிட்டு ஈவிரக்கமற்ற கொலைவெறிக்கரங்களால் அடக்கவும் முற்படுகின்றன..அதில் வெற்றியும் பெற்று விடுகின்றன. அல்லது வெற்றியாக்குவதற்கான முயற்சியில் மீண்டும் மீண்டும் அடக்கு முறையில் ஈடுபட்டு இரத்த ஆறுகள் காய்ந்து போகவிடாது காத்துக்கொள்கின்றன.

இதுவே உலக யதார்த்தமும் ஒழுங்குமாயிருக்கையில் ஈழத்தமிழினத்தின் சுதந்திரம் வேண்டிய போராட்டம் என்பது இவ்வல்லாதிக்கக் கனவுகளுடன் விரிந்து கொண்டிருக்கும் வல்லரசு பிராந்திய நலன்களுடன் எவ்வாறு ஒத்துப்போக முடியும். இவ்வகையான பிராந்திய இன மதக்கிளர்ச்சிகளை அவர்கள் ஒரு போதும் அனுமதிக்க முடியாத வெறுப்புடனேயே பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்போராடும் இனத்திற்கிடையிளுள்ள முரண்பாடுகளைக்கூர் தீட்டி வளர்த்து விடுவதிலும் பலவீனங்களைப்பயன் படுத்துவதிலும் திறமையுடன் காய் நகர்த்தி தங்களுக்கு ஏற்புடை ய நிலையக்கொண்டு வருதிலேயே குறியாயிருப்பார்கள்.

இதற்கு அப்பால் இருக்கக்கூடிய நியாயாதிக்கம் பற்றியோ மனிதாபிமானம் பற்றியோ அவர்களுக்கு எவ்வித கரிசனையும் இருக்கப்போவதில்லை. இன்று ஈழப்போராட்டத்தில் புலிகளின் பங்களிப்பு நூறுவீத மக்களையும் உள்ளடக்கியதாக இல்லை என்பதை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையிலேயே நாம் இருக்கின்றோம். இராணுவ முன்னெடுப்புகளுடன் கூடிய போராட்டத்தில் இந்நிலமை சாத்தியமே என்றாலும் அதற்கப்பால் இருக்கின்ற மக்கள் ஒன்றிணைப்பு பற்றி அவர்கள் என்றுமே கருத்துச் செலுத்தவில்லை என்பதே யதார்த்தம். முஷ்டி பலத்தை நம்பிய அளவு மக்கள் பலத்தையோ அரசியல் ராஜதந்திர முன்னெடுப்புகளையோ அவர்கள் செயற்படுத்தவில்லை என்பதே உண்மை.

மூன்று தசாப்தங்களையும் கடந்து விட்ட இப்போராட்டத்தினை வலுச்சேர்க்க இது வரை எந்த ஒரு நாடும் வெளிப்படையாக முன்வரவில்லை என்பதிலிருந்தே இவர்களின் இராஜ தந்திர கொள்கைத் தோல்வியைப்புரிந்து கொள்ளலாம். அதே போல போராட்டத்தினைத் தவிர்த்து அல்லது தவிர்க்க வைக்கப்பட்டு வெளிநடப்பு செய்துள்ள மண்ணின் மைந்தர்களின் விகிதாசாரமும் அதிக அளவில் இருப்பதும் இதனைத் தெளிபு படுத்தும்.

இவற்றை மனதில் கொள்வதன் மூலமே புலிகள் அல்லது ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்தை முன்னெடுக்கக்கூடிய எவரும் வருங்கால நிகழ்ச்சி நிரலைப் பட்டியல் இடக்கூடும். எதிர்காலத்திட்டம் எவ்வாறு இருந்தபோதிலும் இன்று ஈழத் தமிழினத்தினதும் அதன் காவலர்கள் என கொள்ளப்படுபவர்களினதும் நிலை எவ்வாறு இருக்கப்போகின்றது.

சிங்கள ஏகாதிபத்தியத்தின் இனப்படு கொலைகள் இன்று உச்சத்தில் இருக்கின்ற வேளையிலும் உலகத்தமிழினம் கொதித்துக் குமுறிக்கொண்டிருக்கும் நிலையிலும் உலக நாடுகளின் மெத்தனப்போக்கை மட்டும் குறை கூறிக்கொண்டிருப்பதில் என்ன பயன் இருக்க முடியும்.உலகம் இவ்வாறு தான் இயங்கிக்கொண்டிருக்கும் என்பதை புரிந்து கொள்ளாதது ஏன்?. ஈழத் தமிழினத்தின் கரிசனைக்கு அப்பாலும் புலிகளை வேறுபடுத்திப்பார்க்கும் சர்வதேசத்தின் போக்கைப்புரிந்து கொண்டு செயலாற்றாத கையாலாகாத்தனம் யாருடைய தவறு.

புலிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வரவேற்கப்பட்ட இணைத்தலைமை நாடுகளின் கபடத்தன்மை புரிந்து கொள்ளப்பட்டிருந்தால்... எடுக்கப்பட்ட மாற்று வழி இன்று தமிழ் மக்களை ஏன் காப்பாற்றவில்லை.

புலி ஒழிப்பு என்ற போர்வையில் ஈழத்தமிழினம் ஒழிக்கப்படுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்..? அதேபோல ஒழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழினம் பற்றிய புலிகளின் கரிசனை எவ்வாறு இருக்கின்றது..?

தமிழ் மக்களைக் காப்பதற்காகவே எனச்சொல்லிக் கொண்டு படை நடாத்தும் புலிகள்..... நாளை ஐ.நா பாதுகாப்புப் படை ஈழத்தமிழ் மக்களைக் காப்பற்காக ஈழ மண்ணிற்கு வந்தால் புலிகளின் நிலை என்னவாக இருக்கும்..?

அரசியல் மயப்படுத்தப்படாத தனி இராணுவ முனைப்புடைய ஒரு இயக்கத்திடம் இவ்வாறான கேள்விகள் கேட்கப்படாது என்பதில் எவ்வித உறுதியும் கூற முடியாது.

பாதுகாப்புப்படையாக வந்த இந்தியாவின் சிங்கள அரசிற்குத் துணை போகும் இன்றைய நிலமைக்கு இந்தியாவின் பிராந்திய ஆக்கிரமிப்பிற்கு அப்பாற்பட்ட காரணங்கள் ஏதாவது இருக்கக் கூடுமா? இதை முறியடிக்கும் உபாயம் ஏதாவது புலிகளிடம் இருக்கின்றதா...?

இவ்வகையான பல கேள்விகளுக்குப் புலிகள் மட்டுமல்ல ஈழத்தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுவதாக யார் கூறிக்கொண்டாலும் ...பதில்கள் இல்லாது விடின் இது அவர்களின் முடிவு காலமாயிருப்பதைத் தவிர்க்க முடியாது.