Monday, November 30, 2009

இடையில் நெளியும் உயிரினமான விலாங்கு


அபி அப்பா பற்றி ஒரு பதிவு போட்டிருந்தேன். அதில் சுவையான விடயம் என்னவென்றால் ஒரு பிளஸ்ஸும் ஒரு மைனஸும் மட்டுமே விழுந்திருந்தது. அந்த பிளஸ் நான் போட்டதே.. என் பதிவுகளுக்கு நானே பிளஸ் போடவில்லையென்றால் என் பதிவுகளை மெச்சிக் கொள்வது எவ்வாறு? அதே நேரம் அப்பதிவிற்கு விழுந்திருந்த மைனஸ் எப்படி விழுந்திருந்தது ? யார் போட்டது என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. இப்படியொரு "மில்லியன் டாலர்" நிகழ்ச்சி நடக்கப்போக இந்தச் சொற்றொடரும் வாழ்க்கையில் வியாதியாகத் தொடர்கின்றது. இந்தியில் நடக்கும் குரோர் பதியைப் போல. "ஸ்லாம் டாக் மில்லியனருக்கு" கருவைக் கொடுத்தது போல.

மைனஸ் புள்ளி அபியின் அப்பாவால் விழுந்திருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் என்று வாதாட இந்தப் பதிவுலகத்தில் அதிகம் பேர் முன்வரக்கூடும். நான் எப்போதும் இப்படியான சாத்தியங்களை கருத்திலேயே எடுப்பதில்லை. ஏனென்றால் என் மனதில் உள்ள கருத்துக் கந்தசாமி போன்ற பிம்பங்கள் உடைந்து போவதில் எனக்கு விருப்பம் இருப்பதில்லை. உப்புச் சப்பில்லாமல் உடைந்து போகும் சிறு பிள்ளைத்தனமான விவாதங்களிலும் அதிகம் நாட்டம் கிடையாது.

உண்மையில் இங்கு அபி அப்பாவிற்கு புள்ளி போட நினைப்பதை விட ஒரு புள்ளியில் உட்கார்ந்திருந்து சங்கடப்படுதலே அதிகம் சாத்தியமாகி இருக்கும். ஏனெனில் அவரின் இருப்பு பற்றி அவர் ஒரு இருண்ட குகையில் இருந்தே நீச்சலடிக்கும் குணம்சத்துடன் இருந்ததாக அவரின் அசைவுகள் நிரூபித்திருந்தது. இந்தப் பரந்த உலகில் அவரின் குணாம்சங்கள் கருப்புக் கண்ணாடி கழட்டாத கருணாநிதியின் மொக்கையில் ஊறிய திருட்டுக் குணத்தின் அடியொற்றியதாகவே வெளிப்பட்டிருந்தது.

கட்சி அரசியல் பிச்சை அரசியல் என்பதைப் போதனயாகவும் வாழ்வாதாரமாகும் கொண்டிருந்த அவர் போலொத்தவர்கள் அவ்வாறு சிந்திப்பது அவர்களின் தவறல்ல. ஒரு புரட்சி வாதியாக அவரை நினைத்துப் பார்ப்பதே பெரும் முட்டாள்தனம். அப்படிப்பட்டவர் சைபர் கிரைம் , தீபா போன்ற பெண்களுக்கெதிரான உட்டாலக்கடி போன்ற வில்வித்தைகளைக் கட்டவிழ்த்து விட்டதையும் சென்ஷி போன்றவர்கள் உதிரம் கொதித்து துள்ளிக்குதித்ததையும் புறங்கையால் ஒதுக்கித் தள்ள வேண்டியது தான்.

ஆனால் குசும்பன் போன்ற இடையில் நெளியும் உயிரினமான விலாங்கு வகையறாக்கள் அதற்கான தலையீடுகளில் உத்தரவாதத்தை நிறைவேற்றாதது இன்னும் மனதைக் குடைகின்றது.

தன்னால் முடியாத விடயங்களில் தடக்கி விழும் இக்குணாம்சத்துடன் இயங்கும் இவர்கள் இவ்வகையாக ஒரு மைனஸ் போடுவது எதிர்பார்க்கக் கூடியதே.

இவர்கள் எதைப் புடுங்கி சாதிக்கப்போகின்றார்கள் என்பதை அவர்களே விரைவில் தெளிவு படுத்துவார்கள். இவ்வகையான குசும்புகள் சாரு நிவேதிதாவின் இலக்கிய மேம்பாட்டுக்காவலர்களாகக் காட்டிக்கொண்டு சீரழிக்கும் போக்கிற்குச் சற்றும் குறைந்ததல்ல. அடிப்படையில் ஒரு ஆரோக்கியமான விவாதக் களமாகக் கூட "புளக்கியம்" இருப்பதை அனுமதிக்க மறுக்கின்றார்கள் என்பதே பெரும் துயரமாகும்..

Sunday, November 29, 2009

கண்ணைக் கசக்கிக் கொண்டிருக்கும் அபி அப்பா


தி.மு.க வின் வலக்கை, இடக்கை, உலக்கை இவர் என்பது உலகப்பதிவர்கள் அனைவரும் அறிந்ததே. பதிவுலக மகளிரைக் கூட ஒரு சந்தர்ப்பத்தில் கருப்புக்கண்ணாடி கருணாநிதியின் கட்சிச் செல்வாக்கைக் காட்டி மிரட்டித்திரிந்த்வர் இவர் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். சைபர் கிரைம் பிராஞ்ச் போன்ற சதுர் கச்சேரிகள் பல காட்டி பெரிய அளவில் "படங்காட்டியவர்" இவர் என்பது பதிவுலகம் அறிந்ததே.

எண்ணெய்க்குடா நாட்டில் பொட்டி தட்டும் இவர் தமிழ் இலக்கணவாதியின் பெயரையும் கொண்டவர். ஷென்ஷி போன்ற ஒரு சில எதிரிகளையும் குசும்பன் போன்ற ஒரு சில காமடியன்களையும் எப்போதும் அருகிருத்திக்கொண்டிருக்கும் இவர் எல்லோருக்கும் நல்லவரே.

இப்போது மாயாவரத்தில் டேரா அடித்திருக்கும் இவரும் தி. மு.க வில் எழுந்திருக்கும் புகைச்சலில் அகப்பட்டு கண்ணைக் கசக்கிக் கொண்டிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகின்றது.

ஆளைப்பார்த்து வயதைக் கணிக்க முடியாத மார்க்கண்டேயத் தோற்றமும் டூ இன் வண் கண்ணாடியும் அணிந்திருக்கும் இவரும் இந்தச் சுழலில் அகப்பட்டிருப்பாரா? என்று உறுதிபடக் கூற முடியாதிருக்கின்றது. (வயது தெரியாததால் வந்த வினை.. குட்டி குட்டியாக இருக்கும் அவர் பிள்ளைகளும் இவரை அந்த அளவிற்கு சீனியராக்க முடியாது தடுக்கின்றனர்)

சரி இனி நியூஸ்: "தலைமுறை, தலைமுறையாக தி.மு.க.,வில் இருக்கிறோம். கட்சிக்காக பலமுறை ஜெயிலுக்கும் சென்றுள்ளோம். ஆனால், எங்களை யாரும் வந்து பார்க்காமல் அலட்சியப்படுத்துகின்றனர் புதிதாக பொறுப்புக்கு வந்துள்ளவர்கள்' என வெளிப்படையாகவே புலம்புகின்றனர் "சீனியர்' பிரமுகர்கள்.


இது குறித்து, மூத்த தி.மு.க., பிரமுகர் ஒருவர் கூறியதாவது:நான், 30 வருடங்களாக கட்சியில் உள்ளேன். கிளை, ஒன்றிய, மாவட்ட பொறுப்புகள் பல வகித்தவன். கட்சி அறிவித்த போராட்டங்களில் கலந்து கொண்டு 39 முறை ஜெயிலுக்கு சென்று வந்தேன். இப்போதும் முக்கிய பொறுப்பில் தான் உள்ளேன். ஆனால், தேர்தல் தேதி அறிவித்தும், இதுவரை யாரும் என்னை வந்து சந்திக்கவில்லை. என்னைப் போன்ற சீனியர்களிடமும், ஆதரவு கேட்டு வரவில்லை.நாங்கள் கட்சிக்காக உழைத்து, கட்சி வளர்க்க பாடுபட்டோம். சாகும் வரை கட்சியில் தான் இருப்போம். புதிதாக பொறுப்பில் வந்தவர்கள் பற்றி தலைமைக்குத் இது தெரியுமா என்பது தெரியவில்லை. தொகுதியில் மட்டுமல்ல, மாவட்டம் முழுவதுமே இதே நிலை தான். அமைச்சருக்கு இது தெரிந்தும், அவர்களுக்கு "சப்போர்ட்' செய்வதால் எங்களுக்கு தொடர்ந்து அவமானமே ஏற்படுகிறது.இவ்வாறு அந்த பிரமுகர் வருத்தத்துடன் கூறினார்.



அபி அப்பாவின் மனதைத் திருடிய "கள்ளி"


குறிப்பு:1. தறுதலை தலைவனைப் பின்பற்றும் எவருக்கும் வாய்ப்பது தான் இந்த இழி நிலை என்று நீங்கள் புலம்புவது சத்தியமாக எனக்குக் கேட்கவில்லை.

2. கலியாணச் சாப்பாட்டைக் காட்டி கடுப்பேற்றியதற்காக ஒரு "ப(லி)சி வாங்கல்

குமுதமும் ஒரு " ஜோக்கரும்"




குமுதம் ஒரு மஞ்சள் பத்திரிகை என்பதைப் படித்து இரசித்தவர்கள் அறிவார்கள். அவர்களின் இலக்கிய சேவையே பைசா சம்பாதிப்பதையே ஆணி வேராகக் கொண்டு இயங்குவதை அனைவரும் அறிவோம். பிரியாமணியின் பிராவின் பட்டையை போக்கஸ் பண்ணிப் போடுவதால் எகிறப்போகும் விற்பனையைப் பற்றி அவர்கள் நன்கு அறிந்தே வைத்திருக்கின்றார்கள்.

வாசிப்பு என்பது இலக்கியம் சார்ந்ததாகவே எப்போது இருக்க வேண்டும் என்று ஏதாவது நிபந்தனை இருக்கின்றதா? என்ன? அப்படியே ஒரு நிபந்தனை இருந்தால் வாசிப்பவர்கள் அரைவாசிப்பேர் காணாமல் போய் கடற்கரை ஓரத்தில் கடலை போட்டுக்கொண்டிருப்பார்கள். இணையத்தில் ப்ளாக்குகளில் எல்லாம் எழுதிக் கொண்டிருப்போர் எல்லாம் என்ன? இலக்கியத்தைக் காக்க வென்று சபதம் போட்டு வந்தவர்களா என்ன?

குசும்பு ,மொக்கை,சக்கை என்று படு ஜோராக படங்காட்டிக் கொண்டிருப்பவர்களிடமெல்லாம் இலக்கியம் வீசை என்ன விலை என்று கேட்டுப் பாருங்கள். ரூபாய்க்கு மூன்று என்று சொன்னாலும் சொல்லுவார்கள். இவர்களெல்லாம் ஏதோ தங்களால் முடிந்த எலக்கிய சேவை செய்ய வந்தவர்கள் என்பதே பெரிய விசயம். இப்படிப்பட்டவர்களுக்கு அறிவும் அனுபவமும் கொடுக்கவென்றே முன்னோடியாக வெளிவரும் பத்திரிகைகளே குமுதமும் ஆனந்த விகடனும்.

இதை அறிந்தவர்களே அனுபவப்பட்டவர்களே தங்கள் பதிவுகள் குமுதம் ஆனந்த விகடனில் வந்து விட்டால் நாலு கட்டம் கலரில் கட்டி "நன்றி" அறிக்கை விடுகின்றார்கள். அவர்களின் பிறவிப்பயனே ஈடேறியதாகக் கொண்டாடுவது இதனால் தான். அவர்களின் இலக்கும் இலக்கிய சேவையும் இதக் குறித்தே இருப்பதால் அவர்களுக்கு உண்டாகும் சந்தோஷத்தை தட்டிப் பறிக்க நாங்கள் யார்?



இந்தப் பத்திரிகைகளில் கூட வரமுடியாத எழுத்துக்களின் சொந்தக் காரன் சாரு நிவேதிதாவிற்கு "இந்தப் பழம் புளிக்கும்" நரியின் நிலை தான். யாரோ தன்னை "ஜோக்கர்" என்று எழுதி விட்டார்களாம். தமிழ் வாசிப்பாளர்களின் உலகம் அப்படித்தானே கட்டம் கட்டி வைத்திருக்கின்றது.

கேரளத்துப் பெண்களின் வனப்பு பாரதியாரைக் கூட சுண்டியிழுத்ததெனில் நாமெல்லோரும் எம்மாத்திரம். "சிந்து நதியினிசை நிலவினிலே... சேர நல் நாட்டிளம் பெண்களுடனே.." நாமுமென்ன அவருக்குக் குறைந்தவர்களா என்ன? நயனின் நயனத்தைத் தவிர எல்லாவற்றையும் அக்குவேறு ஆணி வேராகப் பிரித்து மேய்ந்து தானே நம் கனவுகளைக் கலர் புல் ஆக்குகின்றோம்.நமக்கே இப்படியென்றால் முற்றத்து மல்லிகையின் வாசனையை நாளும் சுவைக்கும் மலையாளிக்கு சாரு நிவேதிதாவின் மஞ்சள் கதைகளான அர்த்த ஜாமக்கதைகள் பிடித்துப் போனதில் என்ன தவறிருக்க முடியும்.

"வேலிக்கு ஓணான் சாட்சியாம்" தான் ஒரு மஞ்சள் பத்திரிகை எழுத்தாளன் என்பதற்கு அவர்கள் சாட்சி சொல்வார்களாம். அதைதானே நாங்களும் ஒத்துக் கொள்கின்றோம். கதை அப்படியிருக்க ஸ்டாக்ஹோம், சர்வதேசத் தரம், இலக்கியப் பரிசு என்று பீலா விடுவதை ஜோக்காக எடுத்துக் கொண்டு ஜோக்கர் என்று கூறுவதில் தவறென்ன இருக்கின்றது.


ஆனந்தவிகடன், குமுதம் மட்டுமா ? தினமணி, தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களும் அதைத் தானே செய்கின்றன. சினிமா நடிகைகளின் படங்களைப் பார்த்து "வாணி" வடிக்கும் இளைஞர்களே கிழக்கிலிருந்து மேற்கு வரை நீண்டு இருக்கின்றார்கள். அப்படி இருப்பது ஒன்றும் தவறில்லையே. இயற்கையான விடயமும் அது தானே. மனிதன் ஒரு விலங்கு என்பதை நாம் அடிக்கடி மறந்து போவதன் வினை தான் இது.

இயற்கைக்குத் தேவை ..இனப்பெருக்கம். அது இல்லையென்றால் இயற்கையே அழிந்து விடும். தமிழர்கள் மிருகங்கள் போல் கொல்லப்படும் போது மிருகமாகவே இருந்து மிருகமாகவே சிந்திக்கத் தலைப்பட்டு அதனாலேயே "பலாத்காரத்தின் தோல்வி" பற்றி விஸ்தாரமாக "நொண்ணை"எழுதிய சாரு நிவேதிதா இப்போது எப்படி இயற்கையை மறுதலிக்கலாம்.

மனிதனின் இயற்கைக் குணம் சீண்டுவது,சினப்பது,முட்டுவது குட்டுவது. அதைத்தானே அவர்கள் செய்கின்றார்கள். இவர் கூறும் "இலக்கியப் பிம்பம்" இவர்களாகவே சட்டம் கட்டிக் கோடு போட்டு வீட்டில் மாட்டி வைத்திருக்கும் மாயமான் அன்றி வேறென்ன?

இறந்துபோன தன் மனிதர்கள் பற்றிய இரக்கத்தை வெளிப்படுத்தவே மற்றவர்கள்(புலிகள்) விட்ட பிழைகளை அளவு கோலாகக் கொண்டவர்கள், கொண்டாடியவர்கள் எப்படி சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.

இலக்கியப்பிரமாக்கள் தேவையே இல்லாத சாதாரண மனிதர்களையே கோரும் ஒரு சமுதாயத்தில் மனிதனாக இருக்க முடியுமா? என்று இவர்கள் யோசிக்கட்டும். அதன் பின்னால் ஸ்டாக்ஹோம் , சர்வதேசத் தரம், இலக்கியப் பரிசு பற்றியெல்லாம் யோசிக்கலாம்.